அறிவைநாடல்
அறிதலார்வம்
வெள்ளி, 19 ஏப்ரல், 2019
ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.
இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130 ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.
இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை 131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்றம் பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.
அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலையத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .
எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.
இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.
ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.
ஆக்கம்
இ.தனஞ்சயன்
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018
சமாதான உருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபாகம்!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 1 செப்டம்பர், 2018
ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த வரம்பு எல்லைகளை புரிந்து கொள்வது அவசியம்!
ஹார்வர்ட் பல்கலைகழக மாணவரான மார்க் சூபேர்க் 2004ம் ஆண்டு பல்கலைக்கழக நண்பர்களிற்கு இடையில் தொடர்புகளை பேனுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இன்று தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. இது உலகையே மிகவும் இலகுவான சமூக தொடர்பாடல் மிக்க இடமாக மாற்றியமைத்துள்ளது. இன்று , உலகளாவிய ரீதியாக எங்கும் நடைபெறும் நிகழ்வை நாம் நேரடியாக பார்வையிட முடியும்.
இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள்,Twitter மற்றும் Facebook மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, குறித்த ஊடகங்கள் Conservative media களினை Google நிறுவனம் முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்தை கூகுள் நிறுவனம் அடியோடு மறுத்துள்ளது. இதேவேளை, தாம் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் வோட்டகேட் ஊழலை புலனாய்வு இதழியல் நுட்பத்தை பயன்படுத்தி வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளரினையும் கடுமையாக சாடினார்.
இவ்வாறாக கடந்த வாரம் ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்து இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ட்ரம்ப் ஊடகங்கள் மீது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பது இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபர் தேர்தல் காலங்களில் கூட CNN இனை போலி ஊடகம் என்று விமர்சித்திருந்தார். மக்களின் எதிரியாக(Enemies of people) ஊடகங்களினை ட்ரம்ப் பார்க்கிறார். இது பிரதான ஊடகங்களிற்கு ட்ரம்ப் மீது எதிர்மறையான சிந்தனையை தோற்றுவித்துள்ளது.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு விளக்கம் கெடுக்கும் அமெரிக்காவில் கூட ஊடகங்கள் பக்கசார்பு என்பது சிந்தனைக்குரியது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பவற்றை அடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் விளங்குகிறது. அமெரிக்க என்று மட்டுமல்ல உலகம் பூராகவும் ஊடகங்களின் செல்வாக்கு வியாபித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வில் இடம்பெறும் தகவல்களினை மாத்திரமல்லாது, எவ்வளவு தூரம் ஊடகங்கள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். எந்த செய்திக்கு முதன்மை அளிக்கின்றன என்பதில் இருந்து ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலினை கண்டுகொள்ள முடியும்.
இணையத்தின் வருகையில் இருந்து ஊடகங்கள் முதன்மை அளிக்கின்ற தன்மைகள் மாற்றம் அடைந்துள்ளது. இதனையே பிரஜைகள் ஊடகவியல் எனும் எண்னக்கருவானது குறிப்பிடுகிறது. இன்றைய ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண மக்கள் கூட இன்று உலகலாவிய ரீதியாக பூகோள தடங்கல்களினை கடந்து தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய முடிகிறது. மக்களிற்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.
மேலும், சமூக ஊடகங்கள் இன்று விவாதத்திற்கு மிகவும் பரந்த வெளியை உருவாக்கியுள்ளது. அண்மையில் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வெடுக்குநாறி வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த தடைக்கு எதிரான மக்கள் கருத்துக்கள் சமூக ஊடகங்களே பிரதானப்படுத்தியிருந்தன. இதேவேளை, எகிப்தில் இணையதளத்தளங்களினை முடக்குவதற்கு புதிய சட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தாம் அல் சிசி விதித்து இருந்தார். இது ஏற்கனவே 600 இனையத்தளங்கள் எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
இன்றைய நிலையில், சமூக ஊடகங்களினை இலகுவாக கையாளக் கூடிய நிலை இருந்தாலும் ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த எல்லை வரம்புகளை அறிந்து அவற்றின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஊடகங்கள் நம்மை பெறுமதியுடையதாக்கவேண்டும்.
இ.தனஞ்சயன்
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 25 ஆகஸ்ட், 2018
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான இலங்கை அணியின் தயார்நிலை!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 18 ஆகஸ்ட், 2018
ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!
இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
புதன், 30 ஆகஸ்ட், 2017
ஜனநாயகத்தினை உறுதிப்படுத்த ஊடகங்கள் உதவாதா?
"ஊடகங்கள் இல்லாத ஜனநாயகம் சிறகில்லாத பறவை போன்றது "மக்கள் மற்றும் அரசாங்கத்திற்குமிடையிலான தொடர்பாளராக/இனைப்பாளராக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களால் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் வலிமைமிக்கவை.அத்துடன்,ஊடகங்கள் தற்போது சமூக கட்டமைப்பு(social structure)மற்றும் கருத்து உருவாக்கம்(opinion forming)போன்றவற்றில் முக்கியமான பங்கு வகிக்கிறது.இவற்றின் முக்கியமான பணிகளாக, தகவல்கள் வழங்குதல், சமூகப் பதட்டத்தை இல்லாமல் செய்தல்,சமூக சீர்திருத்தம், சமூகமயப்படுத்தல்,பண்பாடு விழுமியங்களினை கட்டிக்காத்தல்,மக்களின் உணர்வுகளை புரிந்து படைப்புகளினை படைத்தல்,மக்களின் அதிகாரத்தை சுட்டிக்காட்டுதல்,புதிய ஆக்கபடைப்புக்களை ஊக்குவித்தல்,முரண்பாடுகளை களைதல், பிரச்சனைகளிற்கு தீர்வு முன்வைத்தல் போன்றன முன்மாதிரி ஊடகங்களிற்கு முக்கியமானதாகும்.மக்களின் உரிமைவென்றடுக்க ஊடகங்கள் முக்கியம்.மக்கள் வரிசெலுத்துவதனால் பாராளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் பிரதிநிதிகளினை தெரிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தின் ஊடாக உறுதிபடுத்த ஊடகங்களால் பங்களிக்க முடியும்.இதுவே பொறுப்புமிக்க ஊடகவியலாகும்(Responsible journalism).ஜனநாயகத்தினை பெறுமதியுடையதாக்குவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.உலக அரசியல்,பொருளாதார மற்றும் சமூகவியல் மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஊடகங்களே.சாதாரண பாமரனுக்கும் அறிவூட்டக்கூடியதாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் விளங்குகின்றன .இதனாலேயே, சட்டம், நீதி, நிர்வாகத்தை தொடர்ந்து ஜனநாயகத்தின் நான்காவது கிளை யாக ஊடகங்கள் சமுதாயத்தின் காவல்நாயாக குறிபிடப்படுகின்றது.எனினும்,தற்போது,சர்வதேச ஊடகங்களில் வழிகாட்டும் நாய்களாக ஊடகங்கள் குறிப்பிடப்படுகின்றது.ஐனநாயகம்(Democracy)என்பதை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமான வரைவிலக்கனங்கள் வகுத்துள்ளார்கள்.ஹென்றி டேவிட் "அரசியல் அதிகாரம் முன் அனைவரும் சமம்" என்கிறார், ஆபிரகாம் லிங்கன் "மக்களால் ,மக்களுடைய,மக்களுக்காக அரசாங்கம்" என வரையறுக்கின்றார்.காள்மாக்ஸ் 'Democracy is the road to Socialism' "சமவுடமைக்கான பாதையாக ஜனநாயகத்தை எடுத்து கொள்கின்றார்" மாறாக புரட்சியாளர் சேகுவாரா "ஜனநாயகம் என்பது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சர்வாதிகார ஆட்சியார்கு சாதகமாக இருப்பதாகவும் அதனை நாம் அனுமதிக்க கூடாது" என்கிறார் .தோமஸ்ஜெபர்சன்"" ஜனநாயகத்தின் நாணயமே தகவல்" என்கிறார்.அடிப்படை வரைவிலக்கனமாக மக்களை தலைவர்களாக கொண்டது/முதன்மை படுத்துவதாக ஜனநாயகம் காணப்படுகிறது.ஊடகத்தின் ஜனநாயகக் கோட்பாட்டு கூட ஜனநாயகத்தின் மாண்புகளையே வலியுறுத்துகிறது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தவரை ஜனநாயகம் என்று கூறிக் கொண்டிருந்தாலும் முழுமையான ஜனநாயகப் பண்புகளினை பின்பற்ற செய்கிறதா என்பது கேள்விக்குறி?ஆதாரமாக, எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு மேற்கொண்ட ஊடக சுதந்திரத்திற்கான பட்டியல் படுத்தலில் அமெரிக்காவிற்கு 41வது இடமே கிடைத்தது. ஆனால்,உலகத்திற்கு ஜனநாயகம் தொடர்பாக போதிக்கின்றது.இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.குறித்த தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடமே கிடைத்தது. இலங்கையில் தற்போது நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் நிலையில் ஊடகளிற்கான சுதந்திரம் என்பது கடந்தகால நிலையை விட முன்னேற்றமே தவிர முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையே ஊடகங்கள் மற்றும் ஊடகவியளாருக்கு காணப்படுகிறது. ஊடகத்தினுள் காணப்படும் சுதந்திரமற்ற நிலை மற்றும் ஊடகங்களிற்கு புறச்சூழலால் வழங்கப்படும் சுதந்திரமற்ற நிலை போன்றவற்றை குறிப்பிடலாம். இரண்டாவது சுதந்திரம் தொடர்பாக நாம் அதிகம் அலட்டிக்கொண்டாலும் ஊடகங்களினுள் பணிபுரியும் ஊடகவியளாரின் சுதந்திரம் தொடர்பாக யாரும் சிந்திப்பது இல்லை.ஊடகத்தின் அறம்(Media ethics)தொடர்பாக சவாலுக்கு உட்படுத்தும் இடமாக ஊடகங்களின் அகச்சூழல் காணப்படுகிறது.அதிகரிக்கும் ஊடகங்கள் போட்டிச் சூழலில் ஏனைய ஊடகங்களினை எப்படி வெற்றி கொள்ளலாம் என்றே எல்லா ஊடகங்களும் சிந்திக்கின்றன.இதனால் ஊடகஅறம் கண்டிக்கபடுவதில்லை.தற்போதைய நவீன ஊடகங்கள்(Digital media)குறிப்பாக பிரஜைகள் ஊடகவியலை(Citizens journalism)பின்பற்றும் சமூக ஊடகங்களின் வருகை ஊடக ஒழுங்கு,ஊடகதரநிர்னயம் மற்றும் ஊடகதர்மத்தை சம்பந்தம் இல்லாத ஒன்றாக்கி விட்டது.மனிதனின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் என்று அறத்தை பின்பற்ற தவறி விட்டார்கள்.ஊடகசுதந்திரம் என்பது மக்களின் இறைமையை பலப்படுத்தல், அரசியல் அறிவு மற்றும் புரிந்துனர்வு,மக்களின் பொது சன அபிப்பிராயம், சட்ட குறைபாடுகள்,முரன்படாதன்மையை உருவாக்கல்,மனித உரிமைக்கு குரல் கொடுத்தல்,சுதந்திர நீதித்துறையை உறுதிபடுத்தல் போன்ற ஜனநாயகத்தின் பண்புகளை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகைகளை செய்ய வேண்டும் மாறாக ஊடகசுதந்திரம் தவறான வழியில் பயன்படுத்தி ஜனநாயகத்தின் நன்மைகளை சேதப்படுத்தக்கூடாது.ஜனநாயகத்தின் வலிமை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் தம் அபிப்ராயங்களை தெரியப்படுத்துவதற்கு ஏற்ப ஊடகசுதந்திரத்தை முன்னிலைப் படுத்தல்.இதனாலேயே, Bill Moyers என்ற மெய்யியலாளர் ஜனநாயகம் மற்றும் ஊடகங்களின் பெறுமானம் பிரித்துப்பார்கமுடியாதது என விளங்கிக் கொள்கிறார்.சமாதானம் என்பது ஜனநாயகம் இல்லாமல் வராது என மாமனிதர் நெல்சன் மண்டேலா ஜனநாயகத்தின் பெரும் பெறுமதியை கூறுகிறார்.ஆங் சங் சூகி"ஜனநாயகம் சுதந்திரம் என்பன எமது உயர்ந்த கனவுகள் என்று கூறுகிறார்.கிறிஸ்டோபர் கூறும் போது ஊடகங்களின் சுயாதீனம் ஜனநாயகத்தை உறுதிபடுத்துவதிலே உள்ளது. பேட்டன் ரசல் "முட்டாள்களும் வாக்களிக்கும் தகுதியை ஜனநாயகம் தருவதாக கூறுகிறார் ".பேட்டன் ரசலின் கூற்று ஆழமாக திறனாய்வு செய்யவேண்டியது.இங்கு,அயோக்கியர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்றால் தெரிவு செய்தவர்கள் முட்டாள்கள் என்ற பகுத்தறிவின் தந்தை பெரியாரின் சிந்தனையும் ஒப்பிடப்படவேண்டியது.ஜனநாயகதை பாதுகாக்க ஊடகங்கள் மக்களினை அரசியலில் பங்கெடுக்கக் செய்து கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவூட்டி அரச செயல்பாடுகளில் புறவயத்தன்மையை பேனுவதன் ஊடாக பங்கேற்பு அரசியல் பண்பாட்டை உறுதிப்படுத்தி ஜனநாயக விழுமியங்களினை காப்பாற்றுவதே ஊடகங்களின் தார்மீக கடமை என்பதோடு தொழில் வாண்மை மிக்க ஊடகத்துறையை வளர்த்தெடுக்கவும் முடியும்.ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது நிலையற்றது.எனினும், ஜனநாயகம் என்பது வெறும் உதட்டளவில் மாத்திரமே அரசியல் மற்றும் ஊடகவியல் இரண்டிலும் காணப்படுகிறமை குறித்து இன்னும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.Walter chonkite என்ற சிந்தனையாளர் ஊடகசுதந்திரம்(Freedom of the press)என்பதையே ஜனநாயகம் என்று எடுத்து கொள்கின்றார் மற்றும் ஒரு அமெரிக்கமெய்யியலாளரான Andrew vachss "சமூக முன்னேற்றத்திற்கான உந்து விலையே ஊடக ஜனநாயகம்" என்கிறார்.எனினும்,நடுநிலை ஊடகங்கள் இல்லாத வரை ஜனநாயகம் சந்தேகமே! இ.தனஞ்சயன் ஊடகத்துறை.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
