உலகமயமாக்கல் மீதான அதீத ஆர்வத்தை உலக நாடுகளில் பெரும்பாலானவை கொண்டு இருப்பதன் காரணமாக,செய்தி பரிமாற்றம் உலகமய இயல்பை அடைந்துள்ளது.தகவல் கடத்தும் செயல் ஒழுங்கு பூகோளம் தழுவிய வகையில் விரிவாக்கம் பெற்றுள்ளது."யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற கனியன் பூங்குன்றனாரின் சிந்தனை சாத்தியமாகியுள்ளது.உலகம் ஓர் கிராமம் (Global village )என்ற நிலை ஊடகக்கலாச்சாரம் மற்றும் பூகோளமயமாக்கல் காரணமாக, உண்டாகிவிட்டது.அந்த வகையில், பூகோளமயமாக்கல்/உலகமயமாதல் தொடர்பாக முதலில் சிந்திக்கவேண்டியுள்ளது.உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றின் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறையாகும்."The process of a worldwide economy in which resources and products move fairly across national borders".பெரும் திரளான மக்களை சென்றடையக் கூடிய தகவலை பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இனையம் விளங்குகிறது.இனைய அறிமுகம் வெகுசன ஊடகங்களினை நவீன ஊடக வடிவில் நுகர்வதற்கான சாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளது. இனையமானது அனைத்து வகையான ஊடகங்களினையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளமை அதன் மேலதீக பலம் ஆகும். இத்தகைய காரணங்களினால், வெகுஜன ஊடகப்பண்பாட்டில் கூட பல மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.Mobile journalism, Citizens journalism,Digital journalism மற்றும் Alternative media போன்ற சொல்லாடல்கள் தற்போது இதழியல் பரப்பில் அதிகமாக உரையாடப்படுகின்றது.இவற்றின் எதிர்கால செல்நெறி (Future trend) ஆதிக்கமானது;தகவல்கள் பரிமாற்றத்தில் காணப்படும் எளிமையை மேலும் எளிமைப்படுத்தப்படும்.Video,Audio &Digital print போன்றவற்றின் செல்வாக்கு அதிகரித்து காணப்படவழிவகுக்கும்,உள்ளூர் உற்பத்தி சார் விளம்பரங்களின் நிலமை பரிதாபப்படும் நிலைமைக்கு செல்லும் வெளிநாட்டு விளம்பரங்களின் ஆட்சியே இடம்பெறும்,Smart phone போன்றன யதார்த்தத்தை அவ்வாறே பிரதிபலிப்பதாக அமையும் அதேவேளை,தொலைக்காட்சியின் நிலைமை புதிய ஊடகங்களினை தழுவியே இருக்கும். பத்திரிகையானது பெரும்பாலும்(Free issue)இலவசமாகவே வழங்கப்படும்.Mobile media and Global media trend (உலகம் தழுவிய ஊடக செல்நெறி)உருவாகி அனைத்துக்கும் தொலைபேசியை நம்பி இருக்கும் நிலைமை காணப்படும்,யதார்த்த சிந்தனைகளை அதிகரிப்பதுடன் மாற்றுபாங்கான சிந்தனைகளை(Alternative thoughts)விதைப்பதாக அமையும்,அரச ஒழுங்கு மற்றும் சட்டம் என்பது மூன்றாம் தரப்பாகவே காணப்படும்,இலவசம் என்ற போர்வையில் நாமே விற்பனை பொருளாக வேண்டிய நிலை காணப்படும்,ஆக்கத்திறனை தீர்மானிப்பதில் பெரும் பங்கு புதிய ஊடகங்களே திகழும் அதேபோல் புதிய ஊடகங்கள் அனைத்திலும் ஆட்சி செலுத்தும்.மேற்கண்ட காரணங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதாக அமையும்.இதேவேளை,பிரஜைகள் ஊடகவியல் (Citizen journalism)என்பதனை The media center at the American press institute கீழ்க்கண்டவாறு வரைவிலக்கனப்படுத்துகின்றது."The act of a citizen or group of citizens playing an active role in the process of collecting,reporting, analysing & disseminating news and information.The intent of this participation is to provide independent, reliable, accurate, wide-ranging and relevant information which a democracy requires ". பிரஜைகள் ஊடகவியல்(Citizens journalism)என்ற எண்ணக்கருவானது ஒவ்வொரு சமுக ஊடகங்களினை பயன்படுத்துபவருக்கும் பொருந்தும்(Citizen journalists are ordinary people who take on the role of news reporters).இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் பிரதிநிதித்துவம் பெறாதவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகும்.சமூக வலைத்தளங்கள் தொடர்பாக இதுவரையான காலத்தில் 2500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பாக முறையிட்டுள்ளதாக அந்த பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரொஷான் சந்திர குப்த குறிப்பிட்டுள்ளார். முன் அறிமுகம் இல்லாதவர்களை பேஸ்புக் கணக்கில் நண்பனாக்கிக் கொள்வதே இது போன்ற குற்றங்கள் உண்டாக்க காரணமாகிறது. இதேபோல், சிலரின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வாயிலாக குற்றங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களின் தற்போதைய போக்கு மிகவும் பொறுப்பற்ற தன்மையினையும் ஊடகங்களினை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற ஊடக எழுத்தறிவு(Media illiteracy)அற்ற தன்மையையே தெளிவுபடுத்துகின்றது. சமூக ஊடகங்கள் தற்காலத்தில் பிரச்சனைகுரிய உந்துதலாகக் காணப்படுகிறது.மேலும்,சமூக ஊடகங்களினை பயன்படுத்தும் பாவனையாளர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டல்களை பின்பற்றும் போது ஊடகப்பாவனை வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமைவதுடன் பிரச்சனைகளினை தவிர்க்கவும் வசதியாக அமையும்.☆சமூகத்தை ஒற்றுமைப் படுத்தி ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட முடியும். இலங்கையில் சமூக ஊடகப்பாவனை இன்னும் முரண்பாடுகளை உண்டுபண்னி இனங்களிற்கு இடையில் மேலும் பல தசாப்தங்களுக்கு நிரந்தர விரிசலை உண்டுபண்னுவதாக அமைகிறது.சமூக ஊடகங்களினை பயன்படுத்தி குறித்த இடைவெளியை பூரணப்படுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும்.☆இன மத வேறுபாடின்றி மனித நேயம் மற்றும் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இனவாத, மதவாத,பிரதேச வாத,வகுப்புவாத,பிரிவினையை தூண்டும் விதமாக பதிவிடுவதை சமூக ஊடகங்களில் தவிர்ப்பது ஆரோக்கியமான நல்லிணக்க சமூகத்தை கட்டியெழுப்ப துனையாக அமையும்.☆நீதியான விடயங்களினை பதிவு செய்யும் போது அதனால் அநீதி ஏற்படாமல் மிகவும் ஆழமாக அவதானித்து கருத்துக்களை மற்றும் புகைப்பட தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.☆நல்ல பலனை அளிக்காத எந்தவொரு பதிவும் வீனானவையே இந்த மனப்பான்மை கொண்ட புத்திசாலியாக சமூக ஊடகங்களினை உபயோகப்படுத்த வேண்டும்.குறித்த இனம்,மதம், சாதி என்பதை சமூக ஊடகம் ஊடாக நிறுவ முற்படக்கூடாது.☆பழிவாங்குதல், அவமானப்படுத்தல்,உணர்ச்சி வசப்படுதல்,அனாவசியமாக வார்த்தையை விடுதல்,அந்தரங்கங்களை பதிவிடுதல்,கலாச்சார அசிங்கத்தை வெளிக்கொணருதல்,மற்றவர்கள் மீது சேறு பூசுதல்,ஆணவமான கருத்தாடல்கள், தெய்வ நிந்தனை பயனற்ற முன்னேற்றகரமான வார்த்தையை பயன்படுத்துதல் மற்றும் தனிமனிதத் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்.☆ஒரு சிலரின் தவறுகளிற்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் விமர்சித்து முழு சமுதாயத்திடமும் இருந்து பகையாளி/விரோதி/இனத்துவேசி/பிரிவினை வாதி/இனவாதி என்ற நாமங்களை நமக்கு நாமே சூட்ட காரணமாயிருக்கக் கூடாது.இன்னொரு சமூகத்தை இழிவுபடுத்தும் செயலை மேற்கொள்ளாமல் குறித்த முரண்பாடுகளிற்கான காரணத்தை தெளிவுபடுத்தி தீர்வுகளை முண்மொ ழிவதாக அமைய வேண்டும்.☆எந்த ஒரு விடயத்தையும் உணர்வுபூர்வமாக அணுகாமல் அறிவுபூர்வமாக அணுகுவதற்கு மூளையை பயிற்றுவிக்க வேண்டும். ☆அரசியல் தலைமைகளை கழுவி ஊத்துவதனை விடுத்து குறித்த நிலைமைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பிரேரிப்பதாக சமூக ஊடகப் பதிவுகள் அமைவது காத்திரமான சமூக ஊடக கலாச்சாரத்தை (Positive social media culture) பேணிக் கொள்ள வழிதுனையாக அமையும்.அதேவேளையில், 3.773 பில்லியன் மக்கள் தொகையினர் இனைய பயனாளிகளாக உள்ள அதேசமயம் 2.789 மக்கள் தொகையினர் சமூக ஊடக பயனாளிகளாக உள்ளதாக ஓர் ஆய்வின் முடிவு கூறுகிறது.அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் போது "Twitter என்ற சமூக ஊடகம் இல்லாவிட்டால் நான் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது"என்று கூறுகிறார். இது சமூக ஊடகங்களின் செல்வாக்கினையே எடுத்தியம்புகின்றது.அத்துடன் Twitter சமூக ஊடக தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் டொனால்டு ட்ரம்பினை 41.7 பில்லியன் பேர் பின்தொடர்கின்றமையும்(Following)குறிப்பிடத்தக்கது.இதேவேளை,அச்சு ஊடக இதழியல் மற்றும் இனைய இதழியல் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளி குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.அந்தவகையில், அச்சு ஊடகங்களில் செய்தி கதை சொல்லும் பாணியிலும் இனைய ஊடகங்கள் செய்தி செய்முறை வடிவில் காணப்படுகிறது.மேலும் அச்சு ஊடகங்களில் வரும் ஆக்கங்கள்,செய்தி விநயோகம், அதிகாரம், பார்வையாளர்களின் பங்கு என்பன இனைய ஊடகங்களில் பண்பில் இருந்து மாறுபட்டது.இன்றைய காலத்தில் அனைவரும் சமூக ஊடகங்களில் தமது பொன்னான நேரங்களை செலவழித்து வரும் நிலையில் அந்த நேரம் எம்மை சரியான முறையில் வளப்படுத்தி கொள்ள சரியான முதலீடாக அமைய வேண்டுமே தவிர நாம் சமூக ஊடகங்களிற்கு பகடைக்காயாகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி,நிறைவாக,கவிஞர் வாலி ஐயா கூறிய "காலம் தமக்கு தேவையானவர்களை தாமே உருவாக்கும்"என்ற தத்துவத்துடன்(Philosophy )இந்த பெறுமானம் மிக்க சிறிய வலைப்பூ பதிவை நிறைவு செய்கிறேன்.மீண்டும் மற்றொரு பெறுமதியான வலைப்பூப்பதிவில் சந்திப்போம் நண்பர்களே! இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் சிறப்பு மாணவன்.
அறிவைநாடல்
அறிதலார்வம்
சனி, 4 நவம்பர், 2017
வெகுஜன ஊடகப்பண்பாட்டில் புதிய திருப்புமுனையாக அமையும் பிரஜைகள் ஊடகவியல்!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
செவ்வாய், 26 செப்டம்பர், 2017
ஆங்கில மொழி என்பது அறிவல்ல;மேலதிக அறிவை பெறுவதற்கான ஓர் ஊடகமே?
பாடசாலை மாணவர்களிடையே ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த வருடம் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு ஆங்கில பாடப்புத்தகத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில் தரம் மூன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில பாடப்புத்தகம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்த வகையில்,குறித்த புதிய மாற்றத்துடன் ஆங்கில மொழியின் தற்கால அவசியம் தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே குறித்த பதிவு அமையப்போகின்றது.தகவல்கள் மற்றும் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள மொழி ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றது.மொழி என்பது சிந்திக்க அவசியம் அல்ல மாறாக சிந்தனையை எளிமைப்படுத்துவதாக அமைவதாக மொழியியல் வல்லுநர்கள்(Linguistic experts)கூறுகிறார்கள். மேலும் சில சீர்திருத்த சிந்தனையாளர்கள் மொழி தொடர்பாக தமது கருத்தியல்களை பதிவு செய்கிறார்கள்.R.C.Trench என்பவர் "Language is the closest fitting dress of thought " மொழிபெயர்ப்பு சிந்தனையின் மிக நெருக்கமான ஆடையே மொழி என்கிறார்.அதேபோன்று, Ahmed Deedat என்பவர் "Language is the key to the heart of people "மொழிபெயர்ப்பு மக்களின் இதயவாசலின் திறவுகோல் என்பது மொழி என்று கூறுகிறார்.இதேவேளை,பிற மொழிகளை கற்றல் தொடர்பாக Ray leobond குறிப்பிடும் போது,"A different language is a different vision of life " அதாவது, வேறுபட்ட மொழியினை கற்பது வேறுபட்ட சிந்தனை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்ள உதவும் என்று கூறுகிறார். அதேபோல், Haruki Murakami "Learning another language is like becoming another person "அதாவது இன்னுமோர் மொழியினை கற்றுக் கொள்வது இன்னும் ஒரு மனிதன் என்ற நிலைக்கு சமமானது என்று கூறுகிறார்.அத்துடன், மொழி என்பது சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது. மொழியினை கற்பது என்பது செவிமடுத்தல் வாயிலாக இலகுபடுத்தப்படும்.ஒரு மொழி அறிவின் எல்லையே உலகத்தின் எல்லையாக கருதிக்கொள்ள முடியும்.எமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினை தீர்கபடாமல் காணப்படுவதற்கு மொழியே இடைவெளியை உண்டுபன்னியமையும் மறுக்க முடியாத உண்மை.நமது வாழ்க்கையில் நாம் பிறந்து வளர்கின்ற சூழலில் நிலவும் மொழிகளை நாம் கற்றுக்கொள்கின்றோம்.மாமனிதர் நெல்சன் மன்டேலா மொழி தொடர்பாக கூறும்போது,"ஒருவருடன் உரையாடும்போது இதயபூர்வமாக ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களுடைய தாய்மொழியில் உரையாடுவதே சாலப் பொருத்தமானது" என தாய்மொழியின் சிறப்பை குறிப்பிடுகின்றார்.குறிப்பாக, நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால்,பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட மொழி வழக்குகள் காணப்படுகின்ற தன்மையினை அவதானிக்க முடியும்.யாழ்ப்பாணத்தில் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையகத்தமிழ்,தமிழக தமிழ் என வேறுபட்ட தமிழ் உச்சரிப்பு வேறுபாட்டை அவதானிக்கமுடியும்.தகவல்கள் மற்றும் சிந்தனைகளினை பரிமாற்றம் செய்யும் தொடர்பாடலை இலகுபடுத்துவதாக மொழி காணப்படுகின்றது.மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள மொழித்திறன் அவசியம். அடிப்படை மொழித்திறன்களாக பேசுதல்,எழுதுதல், வாசித்தல்,செவிமடுத்தல் காணப்படுகின்றன.எனினும், உபதிறன்களாக (sub skills ) இலக்கணம், சொல்வளம், உச்சரிப்பு, பயன்பாடு,இரட்டைச் சொல்,உரையாடல் அற்ற மொழி போன்றவை அவசியமானவை.அண்மையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து ஹிந்தி தினத்தை முன்னிட்டு கொழும்பில் உரையாற்றும் போது"ஹிந்தி மொழியை இலங்கையர்கள் கற்பது சுற்றுலா தொழிற்றுறை வளர்ச்சிக்கு உதவும் "என்று தெரிவித்தார். தென்பகுதியில் சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மத்தியில் ஹிந்தி மொழி மீதான ஆர்வம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.களனிபல்கலைக்கழகத்தில் ஹிந்தி மொழிப்பிரிவு காணப்படும் அதேவேளையில் ஹிந்தி சினிமாமீதும் தென்பகுதியில் ஆர்வம் உள்ளமை கட்டுரையாளரின் அவதாணம்.
இதேவேளை,தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்புக்கு கடுமையான எதிர்ப்புள்ளமையும் ஒப்பிடவேண்டியது.ஒருவரின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் கருத்துக்களினை நியாயப்படுத்தி வாதிடுவதற்கு மொழிவல்லமை முக்கியமான பங்குவகிக்கின்றது.அத்துடன், எதிர்வரும் ஆண்டு முதல் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு நாடி செல்பவர்களுக்கு ஆங்கில மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். உலகமயமாக்கல் சூழலில் உலகமயமாக்கலினை இலகுபடுத்தும் ஆயுதமாக ஆங்கில மொழி காணப்படுகிறது.உலகமயமாக்கல் /பூகோளமயமாக்கல்(Globalization) என்பது வணிக,வர்த்தக, பொருளாதார மற்றும் தொடர்பாடல் போன்றவற்றின் உலகம்தழுவிய நகர்வே ஆகும்(Globalization is a process by which business develop international influence or start operating on an international scale/increasing and deepening interactions between individuals and organizations across the globe /The world wide movement towards economic, financial, trade & communications integration).குறித்த உலகமயமாக்கலின் வாயிலாக பல நன்மைகள் காணப்படுகிற அதேவேளையில் சில தீமையான விளைவுகளும் காணப்படுகின்றது.முதலில் நன்மைகளை நோக்கின்;உலகத்தை ஒருங்கினைத்தல்,சமநிலை பேணுதல், தொடர்பாடல் விரிவாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், பொறுப்பு கூறல், வறுமை ஒழிப்பு, அங்கீகாரம், வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கை தரம், புதிய பொருட்களின் வரவு,சுகாதாரம் நலம் முன்னேற்றம், புதிய சந்தைவாய்ப்பு,சுற்றுலா துறை வளர்ச்சி, பண்பாடு ஒருங்கிணைப்பு, சர்வதேச வர்த்தக வியாபாகம், அரசியல் பொருளாதார ரீதியாக நாடுகள் இடையே உறவு,சர்வதேச சட்டம்,முதலீட்டு வாய்ப்புகள்,இராஜதந்திரம்,அதிக தகவல்களை கற்றுக் கொள்ளலாம், எல்லா வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் காணப்படும் போன்றவற்றிற்கு உதவுவதாக உலகமயமாக்கல் விளங்குகிறது.இதேவேளை,பண்பாட்டுகலப்பு ஏற்படுத்தும், போலிகள் மலிந்து காணப்படும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,வர்த்தக பாதுகாப்பு இன்மை,வளங்கள் சுரண்டல், குறைந்த சம்பளம் போன்றன உலகமயமாக்கலின் எதிர்மறையான தாக்கங்களாகும்.இவ்வாறான உலகமயமாக்கல் தாக்கத்திலும் தொடர்பாடலிற்கான ஊடகமொழியாக ஆங்கிலம் காணப்படுகிறது.சீனாவானது உலகளாவிய ஆங்கில மோகத்தை நன்கு உணர்ந்து ஆங்கிலத்தில் தமது படைப்புகளை வெளியிடுவதில் கரிசனை கொண்டுள்ளது. உலக மொழியாகவும் உலக இணைப்பு மொழியாகவும் ஆங்கில மொழியாகவே காணப்படுகிறது.அத்தகைய ஆங்கில மொழியின் அவசியத்தை சிந்திப்போம். அடிப்படை மென்திறனை வளர்த்து கொள்ள உதவுகிறது. தொழில் சார் கதையை மற்றும் சந்தர்ப்பத்தை வளர்க்க உதவுகிறது.ஆக்க சிந்தனைக்கும் வழிகோலுவதாகவும் அமைகிறது.53 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாகவும் 400 மில்லியனிற்கு மேற்பட்ட மக்களின் முதன்மை மொழியாகவும் உள்ளது.தொழில்நுட்பம், கணினி, இனணயம், சுற்றுலா தொழிற்றுறை, இராஜதந்திரம் போன்றவற்றின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அண்மையில் காலிமுகத்திடலில் wi-Fi பனல் கருவிகளை அறிமுகம் செய்யும் விழாவில் உரையாற்றிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இது எதிர்காலத்தில் ஆங்கில மொழியின் பெறுமானதினை மேலும் உயர்த்த போகிறது என்பது கணிப்பு.டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடக மொழியாக காணப்படுவது ஆங்கிலமே ஆகும்.பெரும்பாலான அறிவியல் தகவல்கள் கொட்டிக் கிடப்பதும் ஆங்கில மொழியிலேயே! உலகில் 65% மானவர்கள் ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றனர்.அதேபோல, ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளாதவர்கள் உலக அறிவியலில் அரைவாசியையே கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான ஆங்கில மொழியானது மேலதீக அறிவினை பெற்றுக்கொள்வதற்கான வழியாக காணப்படுகின்றதே அன்றி ஆங்கிலம் மட்டுமே அறிவு என்ற கணிப்பு தவறானது.ஆங்கில மொழியில் உள்ள நல்ல விடயங்களை மொழிபெயர்ப்பு வாயிலாக எமது மொழியில் இணைத்துக் கொள்வது எமது மொழியின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.அத்துடன்,ஒரு மொழியின் இருப்பை தக்கவைப்பதணூடாகவே இனத்தின் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். நிறைவாக,"ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒரு சொற்கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் மகிமை இல்லை;திறமையான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."என்ற பாரதியின் தமிழ் முழக்கம் செய்வீர் என்ற கவிதையை நினைவுபடுத்தி இச் சிறிய வலைப்பூப் பதிவை நிறைவுசெய்கின்றேன்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.