அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
solutions journalism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
solutions journalism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 மார்ச், 2018

சமூகஊடகங்களை முடக்குவதை காட்டிலும் ஒழுங்குபடுத்துவதே புத்திசாலித்தனமானது!

          தற்போதைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களினை பரிமாற்றம் செய்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகங்களாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்கள் தொழில்நுட்பம், தொலைபேசி மற்றும் இணையத்தின் வரவுகள் காரணமாக நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.
     2000 ம் ஆண்டிற்கு முன்பு சமூக ஊடகங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அகராதியைதான் நாடவேண்டிய நிலைமை இருந்தது. மாறாக, தற்போது நிலமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது.அரசியல், வணிகம்,தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டல் மற்றும் சமூகம் சார் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகமாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.
       உண்மை ஆரம்பிப்பதற்கு முன்னரே பொய் உலகத்தை சுற்றி வந்து விடும் என்பதே வெளிப்படை. இதற்கு தக்க வாய்பாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலிற்கான தூண்டுகோலாக சமூக ஊடகங்கள் காணப்படும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டே இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களான Facebook, Viper மற்றும்  What's app போன்ற சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பு ஆனைக்குழுவினால் தற்காலிகமாக தணடசெய்யப்பட்டது.இதேவேளை,சமூக ஊடகங்களில் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவிற்கும் கருத்துக்களை பதிவு செய்த 18,19 வசதியை சேர்ந்த  இருவர் கைது செய்யப்பட்டதுடன் சமூக ஊடகங்களில் இனரீதியிலான பதட்ட சூழ்நிலைய உருவாக்குபவர்கள் கண்கானிக்கப்படுகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
         சமூக ஊடகங்களின் மிகப்பெரிய பலம் யாதெனில் ஒருகருத்தை அல்லது செய்தியை சொற்ப நொடிகளில் பல மில்லியன் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும்.இதேபோன்றே,உண்மை பரவும் வேகத்தை காட்டிலும் பொய் பரவும் வேகம் அதிகமாகும்.இனைய ஊடகங்களின் உண்மை நிலையாதெனில் யார் வேண்டுயானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் இந்நிலையே பாரிய ஆபத்தான நிலையாக அமைவதுடன் இன அடிப்படை வாதிகள் தமது சுயலாப அரசியலை சாதகமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தடைசெய்யபடவேண்டும் என்ற நிலையில் கருத்துக்கள் காணப்பட்டாலும் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்படுத்துவதே சிறந்தது.இலங்கையில் தற்காலிக தடை சமூக ஊடகங்களிற்கு காணப்பட்ட காலகட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் facebook என்பது சிறந்த தொழில்நுட்பம் எனினும் மோசமான வன்முறைகள் இடம்பெறுவதற்குரிய களமாக இது அமையக்கூடாது.இதேவேளை,எத்திரியா,வடகொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் Facebook ற்கு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, சமூக ஊடகங்களில் ஒன்றான Facebook நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் எவ்வாறு எதிர்காலத்தில் இன மத குரோத பதிவுகளை நீக்கலாம் என்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.
      அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளூர் அதிகாரங்தேகளிற்கான தேர்தல் மற்றும் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தல்கள் கூட சமூக ஊடகங்களின் செல்வாக்கை சான்று பகர்வனவாக அமைந்துள்ளது.மேலும், கண்டி தெல்தேனியாவில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதும் VPN மற்றும் Proxy servers வாயிலாக ஒரு சிலர் சமூக ஊடக பா வனையில் ஈடுபட்டனர்.அதேசமயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ன சமூக ஊடகங்கள் கருத்துக்களை பரிமாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      மேலும்,போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன என்ற உண்மையை நீண்டகாலமாக எதிர்த்து வந்த Facebook CEO மார்க் அண்மையில் உண்மையை ஒத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அதன் விளைவாகவே, Facebook நிறுவனமானது அரசாங்கங்களுடன் இனைந்து தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க கூடிய செய்திகள் தடைசெய்யபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களினை தற்காலிகமாக இனமுறுகலை தணிக்க தடைசெய்தமை சரியானதா? என்று Twitter ல் நடாத்தப்பட்ட கருத்துகணிப்பு ஒன்றில் "yes" என்கிற பதிலே அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் விருப்பு இடமுன்னரும் குறித்த செய்தியின் உண்மை தன்மை குறித்து(fact checking)ஆழமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும்.காரணம், ஒவ்வொரு செய்திகளின் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரவல் ஒன்று உள்ளது.தனிநபர்,சமூக மற்றும் நாடுகளிற்கெதிராக வெறுப்பை உண்டாக்கும் வகையில் செய்திகளை வடிவமைக்கும் அதிகாரம் சமூக ஊடகங்கள் வாயிலாக இலகுவாக கிடைக்கின்றது.ஏதாவது ஒரு செய்தி பொய்யானது என்று உணரும் சமயத்தில் அந்த செய்திகளினை பரிமாறாமல் விடுவது புத்திசாலித்தனமானது.சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்கள் பங்கு காத்திரமானது என்று பலர் வாதிட்டாலும் உண்மையான சமூகமயமாக்கலிற்கு கிடைத்த சாபக்கேடாகவே சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்களின் பாவனை தொடர்பாக சரியான விழிப்புணர்வை பயனாளிகளுக்கு ஏற்படுத்தாதவரை சமூக ஒருமைப்பாடு முரண்பாடானதே?

இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர்)

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

தீர்வு காணும் இதழியல் தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாகுமா?

உலகமயமாக்கலினை தற்காலத்தில் இவ்வளவு வலிமையாக்கியதாக ஊடகங்களே காணப்படுகிறது.சிறிய விடயங்களினை ஊதிப்பெருப்பிப்பதும் மிகப்பெரிய விடயங்களை மூடி மறைப்பதுமாக ஊடகங்கள் கானப்படுகின்றது.இது (Issues'evidences based journalism )ஆதார அடிப்படையில் அமைந்த இதழியலின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.உலகமயமாக்கல் பல்வேறு சாதகமான நல்ல விடயங்களினை தந்தாலும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் பாரதூரமானவை.மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்தே கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் சுவாரசியமாக இருக்கமாட்டாது.பிரச்சனைகளினை எவ்வாறு சவாலாக எடுத்துக் கொள்கின்றோம் என்பதிலே சாதனை தங்கியுள்ளது.பிரச்சனைகளினை சவாலாக நினைத்து தகர்ப்பவர்களையே வெற்றி அடிக்கடி விரும்பி சந்தித்து கொள்கின்றது.இந்தச் சிறு பதிவு பிரச்சனைகள் தொடர்பாகவோ உலகமயமாக்கல் தொடர்பாகவோ நுணுக்கமான சிந்திக்கபோவதில்லை.எமது ஊடகங்கள் மத்தியில் காணப்படும் செயற்கையான முறையில் மக்களை பிரச்சனைகளிற்குட்படுத்தி மக்களை பீதிகுட்படுத்தும் இதழியல் மரபினை கட்டுடைத்து தீர்வுகானும் இதழியல்  (Solutions journalism )தொடர்பாகவே  சிந்திக்க வைப்பதாகவே அமைகிறது.தற்போதைய இதழியல் பரப்பில் காலப்பொருத்தப்பாட்டிற்கு ஏற்ப ஏராளமான இதழியல் வகைகள் காணப்படுகின்றன.பொழுதுபோக்கு இதழியல்,விளையாட்டு இதழியல்,புலனாய்வு இதழியல்,அபிவிருத்தி இதழியல், முரண்பாடு உணர்திறன் மிக்க இதழியல், சுகாதார இதழியல், விவசாய இதழியல்,குடிமக்கள் இதழியல்,மஞ்சள் இதழியல்,அணர்த இதழியல்,வணிக இதழியல்,சமாதான இதழியல்,ஒலி மற்றும் ஒளிபரப்பு இதழியல்,சஞ்சிகை இதழியல்,பன்னாட்டு இதழியல் போன்றவற்றுடன் தற்போது பிரஜைகள் ஊடகவியலும் முக்கியமானதாகக் காணப்படுகிறது.அத்துடன்,தற்போது constructive journalism and mobile journalism(கட்டமைப்பு இதழியல் & நடமாடும் இதழியல்)போன்றன பிரபல பேசு பொருளாக பன்னாட்டு ஊடகவியலில் காணப்படுகின்றது. அதேபோன்று, தீர்வு கானும் இதழியல் என்ற சொல்லாடல் மேற்குலக தொழில்சார் ஊடகவியலில் 1998 இல் இருந்து விவாதிக்கப்பட்டாலும்,அதன் அவசியம் தற்போதைய நிலையில் உணரப்பட்டுளளது.தீர்வு காணும் இதழியல் என்பது மக்களிடையே பிரச்சனைகள் தொடர்பான அறிக்கையிடலினை செய்யாமல் குறிப்பிட்ட பிரச்சனைகளிற்கான நம்பகமான ஆதாரங்கள்,யார் இந்த பிரச்சனைகளிற்கான காரணம்? யாரால் இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்? எப்படி பிரச்சனைகளினை தீர்கலாம்? போன்றவற்றிற்குரிய பதில்களை முன்வைத்து மக்களிற்கு தெளிவூட்டுவதும் புதிய வகையான சிந்தனை,திறனாய்வு தளத்திலான அணுகும் ஆற்றல் போன்றவற்றை விருத்தி செய்வதாகும். குறித்த இதழியலின் இயல்பின் படி,ஊடகவியலாளர் பிரச்சனைகளினை உண்டாக்குபவராக இல்லாமல் தீர்த்து வைப்பவராக/தீர்வுகளை முன்மொழிபவராக காணப்படவேண்டும் என்று கூறுகிறது.அதேபோல்,பக்கசார்பற்ற போலி தர்கங்களைத் தவிர்த்து புதிய பாணியில் செய்திகளை கூறும் தன்மையும் காணப்படவேண்டும் .குறிப்பாக,இங்கு,பிரச்சனைகளிற்கு தீர்வு காணும் பண்பு நிறைந்தவராக ஊடகவியளாளர் காணப்படுவார்.பிரச்சனைகளை தீர்த்து வைக்க பல வழிமுறைகளினை  தனிப்பட்ட திறமை,ஆளுமை,நுண்ணறிவு, அனுபவம்,மென்திறன்,எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு என்ற   அடிப்படையில் வேறாக காணப்பட்டாலும் பொதுவாக பின்வரும் வழிமுறை அடிப்படை ஆகும்.பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளுதல், எப்படி தீர்த்து வைக்கலாம் என விளக்குதல்,தீர்வுக்களிற்கான ஆதாரங்களை காரண காரிய அடிப்படையில் விளக்குதல்,முடிவின் தாக்கத்தை விளக்குதல்,நிபுணர்களின் அறிவுரை,ஆய்வுக் கண்ணோடு அணுகி அறிக்கை தயாரித்தல்,மக்களை செயற்திறன் மிக்கதாக்குதல்,நிறைவான தகவல் மற்றும் தரவு சேகரிப்பு,நேர்த்தியான முற்போக்கு சிந்தனை போன்றன ஆகும். எமது நாட்டினை பொறுத்தவரை யுத்தம் முடிவடைந்த நிலையிலும் போர்கால இதழியலில் மாற்றம் ஏற்படவில்லை. அது சிங்கள தமிழ் ஊடகங்கள இரண்டுமே பின்ளற்றவே செய்கின்றன.இலங்கையில் மாத்திரம் அல்ல வடகொரியா மற்றும் அமெரிக்கா போர் பதட்டம் கூட ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளும் வார்த்தைக் போரே!வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இதழியலின் பண்புகள் அமையும்.தற்போதைய நிலையில் அனைவரும் ஊடகவியளாளர் என்ற நிலையை பிரஜைகள் ஊடகவியல் தோற்றுவித்து உள்ளது. இதனால், ஊடக அறம் தொடர்பான அறவே அறிவற்ற நிலையில் ஊடகங்களினை அணுகுவதால் பிரச்சனைகள் அதிகமாக காணப்படும் நிலைமையே காணப்படுகிறது.சரியான கேள்விகளை கேட்காத வரையும்,தனித்துவமான சிந்தனை அல்லாத வரையிலும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது தீர்கமான கருத்து.இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வாக தீர்வுகாணும்/தீர்வை முன்மொழியும் இதழியல் (Solutions journalism)இதழியல் காணப்படுகின்றது.இலகுவாகக் கூறினால்,தீர்வு கானும் இதழியல் நோயைப் பற்றி உரையாடுவதை விட சுகாதாரம் தொடர்பாக உரையாடுவது சிறந்தது என்று கூறுகிறது.தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாக தீர்வு காணும் இதழியல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.