அறிவைநாடல்
அறிதலார்வம்
வெள்ளி, 19 ஏப்ரல், 2019
ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.
இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130 ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.
இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை 131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்றம் பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.
அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலையத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .
எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.
இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.
ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.
ஆக்கம்
இ.தனஞ்சயன்
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 6 அக்டோபர், 2018
உளநலம் என்பதே உங்கள் மிகப்பெரிய சொத்து!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018
சமாதான உருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபாகம்!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 8 செப்டம்பர், 2018
மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும் நல்லூரானின் தேர் பவனி .......
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 25 ஆகஸ்ட், 2018
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான இலங்கை அணியின் தயார்நிலை!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 18 ஆகஸ்ட், 2018
ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!
இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 4 ஆகஸ்ட், 2018
அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 28 ஜூலை, 2018
குறைந்த கணத்தில் பெரும் திரளான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி சமூக மயமாக்கலிற்கான வரப்பிரசாதமே!
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வெகுஜன ஊடகங்களில் இரண்டாவது மிகப்பெரிய ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் உலகம் பூராகவும் அதிகரித்து செல்வதனை காணமுடிகிறது. அதனுடைய காட்சி வடிவில் கதைகூறும் பானியானது மக்களிடையே பெரும் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் வழமைக்கு மாறான சம்பவங்களை மக்களிற்கு கொண்டு செல்லும் ஓர் சாதனமாகும்.
ஊடகவியலாளர்கள் மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் செய்தியாக்கம் செய்வார்கள். செய்தி மாத்திரம் அல்ல மக்களிற்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் ஊடக மாகவும் தொலைக்காட்சி காணப்படுகிறது. பொதுமக்களிற்கு அரசியல், சமுக,கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமாற்ற அவசியம் தொடர்பாக அறிவூட்டும் ஓர் அதிகாரம் மிக்க சாதனம் தொலைக்காட்சி ஆகும். அரசியல், சமூக, கலாசார,அறிவியல், விளையாட்டு,பொழுது போக்கு, கலை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தற்போதைய உலகில் மத்திய கூறாக விளங்குவது தொலைக்காட்சி யாகும்.தொலைக்காட்சியின் ஆங்கில சொல்லான Television லத்தீன் மற்றும் கிரேக்க சொல்லின் கலவையாகும். Tele என்பது கிரேக்க செல்லாகும் 'Far' என்று ஆங்கிலத்தில் அர்த்தமாகும். Visio என்பது லத்தீன் சொல் ஆங்கிலத்தில் sight என்று அர்தப்படுத்தி பின்னர் அதுவே Television எனும் தொலைக்காட்சி யானது. காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
இன்றைய போட்டி மிக்க சூழலில் காட்சி வடிவில் தகவல்களினை வழங்கி பார்வையாளர்களினை விமர்சன கண்னோட்டத்தில் சிந்திக்க செய்வதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்குஉள்ளது. செய்திகளை தொலைக்காட்சி யில் அறிக்கையிடும் பானியானது இன்று விமர்சனத்துக்குரியதாகக் காணப்படுகிறது. இலங்கையில் காணப்படுகின்ற தொலைக்காட்சிகளை பொறுத்தவரை தமது தனிப்பட்ட சுயலாப அரசியலினை முன்னெடுக்கும் பிரச்சார ஊடகங்களாகவே விளங்குகிறது. வானொலியின் ஆதிக்கத்தில் இருந்து முன்னணியினை தொலைக்காட்சி வகித்தாலும் வானொலிக்கான தனித்துவமான நேயர்கள் காணப்படுகின்றமை புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் வானொலிகளின் எண்ணிக்கைகளை கொண்டு அறிய முடிகிறது. அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தொலைக்காட்சியினை மக்கள் உயிரோட்டமிக்க ஓர் இடமாக கருதுகின்றனர் என்று ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆய்வில், வருடத்தில் ஓர் சராசரி மனிதன் 3000 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி அல்லது தொலைபேசியுடன் செலவு செய்கின்றான்.
மேலும், தொலைக்காட்சி யானது அதனுடைய செல்வாக்கு மற்றும் தாக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களின் மனப்போக்கில் தவறான மாதிரிகாட்சி உருக்களை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலகட்டத்திலதற 75 வீதமான சிறுவர்கள் தமது பொழுதுபோக்கிக்காக தொலைக்காட்சியினையே தெரிவு செய்கின்றனர். பெற்றோரும் சிறுவர்கள் தமக்கு தொல்லைஇல்லாமல் இருப்பதற்காக தொலைக்காட்சியினை தமது குழந்தைகள் பார்பதற்கு அனுமதிக்கின்றனர். குழந்தைகள் தொலைக்காட்சி யில் எவ்விதமான நிகழ்சிகளை எவ்வளவு தூரம் பார்கின்றார்கள் என்பது தொடர்பாக பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். தொலைக்காட்சியினை எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட தொலைக்காட்சி எவ்வித தாக்கத்தை உண்டுபண்னுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாளைய எதிர்கால சந்ததியான குழந்தைகளை பாதுகாத்து நேர் சிந்தனைமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும். அரசியல் ரீதியாக கருத்துருவாக்கங்களை இலகுவாக மேற்கொண்டு தமது இலக்கு பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல தொலைக்காட்சி மிக சிறந்த சாதனமாகும். அண்மையில் விஜயகலா மற்றும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தொடர்பாக இலங்கை தொலைக்காட்சி களில் அதிகம் இடம்பிடித்து இருந்தது. அத்துடன் இன்றைய நிலையில், தொலைக்காட்சி பற்றிய அதிகமான விமர்சனங்கள் காணப்பட்டாலும் நவீன காலத்தில் மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாக அரசியல், சமுக, பொருளாதார, காலநிலை, விளையாட்டு மற்றும் விளம்பரம் என்று ஒவ்வொரு பகுதியிலும் தொலைக்காட்சியின் செல்வாக்கு அளப்பரியது. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் நவீன ஊடகங்களின் வரவு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பு காரணமாக தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உள்ளடக்கம் உலகலாவிய ரீதியாக வியாபித்துள்ளது. இதன்காரணமாக, அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள் காணபட்டாலும் பெற்றோர்கள் நேர்சிந்தனை மற்றும் பயனுள்ள விடயதானங்களை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் னை தமது குழந்தைகளினை பார்பதற்கு வழிகாட்டுவதோடு இயலுமானவரை குடும்பமாகவும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். அதிகமான வணிக நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தெரிவு செய்யும் ஊடகமாக தொலைக்காட்சியே காணப்படுகிறது.
மேலும், தொலைக்காட்சி வழங்கும் நன்மையான விடயங்களாக இளைஞர்களினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி மற்றும் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி,உலக நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள்,சமய அற நெறிமுறைகள் தொடர்பான கருத்துக்கள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றன தொலைக்காட்சியின் நன்மைகள் ஆகும். தொலைக்காட்சி செய்திகள் மற்றும் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு அறிவினை வழங்கும் சிறப்பான படைப்புகள் ஆகும். பொழுது போக்கு மற்றும் பண்பாட்டுத் தளத்தில் 21ம் நூற்றாண்டில் சிறந்த தாக்கத்தை உண்டுபன்னுகின்ற தொலைக்காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
ஆக்கம் : இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
ஞாயிறு, 27 மே, 2018
ஊடகங்களினை விளங்கிக் கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்!
சமூகத்தில் பரந்த மற்றும் பலதரப்பட்ட பங்கினை வகிக்கும் ஊடகங்கள் பற்றிய அறிவுத்தெளிவு இல்லாதன் காரணமாக நாம் பல்வேறு வகையான தகவற்தெளிவு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது . தற்போதைய நிலையில் இன,மத குரோத சிந்தனையை தூண்டும் வகையில் ஊடகங்கள் தமது விற்பனையை பெருக்கி கொள்ள மஞ்சள்இதழியல் பண்புகளை உள்வாங்கிக்கொண்டே கொண்டே தமது ஊடக வியாபாரத்தை செய்கிறது.
ஊடகங்களில் வரும் தகவல்கள் உண்மையானது என்ற முற்கற்பிதம் பார்வையாளர்கள் மத்தியில் காணப்படுவதால் பல்வேறு வகையான சிக்கல்களை சமூக மட்டத்தில் தோற்றுவிற்கின்றன. ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் ஓர் உபாயம் ஊடகங்கள் எனலாம். ஆங்கிலத்தில் "The Media is an important source of information through its news segments, entertainment and allows for exchange of ideas, suggestions and comments ".நவீன உலகில் சராசரியாக ஒன்பது மணித்தியாலங்களினை ஒருவன் தனது தொலைபேசியில் செலவு செய்கின்றான் என அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது நாளாந்த வாழ்வில் அதிகமான நேரத்தை தொலைபேசியில் செலவு செய்யும் நாம் அவற்றின் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இணைய ஊடகங்களில் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினையை அவதானிக்க முடிகின்றது. ஊடகங்களின் செல்வாக்கு(Media influence ) தற்காலத்தில் மிகவும் இன்றியமையாதாகி விட்டது.
பெரும்பாலானவர்கள் தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் தங்கியிருப்பதன் காரணமாக, அனைத்து செய்திகளையும் உண்மை என்று நம்புகிறார்கள். இந்த உண்மைத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் விடயம் ஒன்றாகவே ஊடக எழுத்தறிவு காணப்படுகிறது. தற்போதைய நிலையில்,தகவல் பரிமாற்றத்தில் வேகம் மற்றும் விரைவு காரணமாக நம்பகத்தன்மை குறித்து அதிகம் சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் தோண்றியுள்ளது.
எம் கண் முன்னே உலகின் உண்மை விடயங்களை படம்பிடித்து காட்டுவது ஊடகங்களாகும். தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு ஊடகங்களும் இல்லாத நிலையினை கற்பனை பண்ணி பாருங்கள். எங்களால் வட கொரியா,தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருகின்ற தகவல்களின் பெற்றுக் கொள்ள முடியுமா? இன்று நாம் அனைத்து தகவல்களையும் வரலாறு, புவியியல், மதம்,தொழில்நுட்பம் போன்றவற்றை Google.com மில் தேடி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஊடகங்களின் செல்வாக்கு பரந்து காணப்படுவதால்,எமது நாளாந்த வாழ்விலும் அதேசமயம் மக்களின் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஊடகங்கள் மக்களின் வாழ்வியலில் சாதக பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது. இத்தகைய ஊடகங்களை சாதகமான விடயங்களிற்கு பயன்படுத்தும் போது, ஆரோக்கியமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும். ஊடகங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரம் வாய்ந்தது. ஊடகங்களில் கேட்கும் பார்கும் செய்திகளை மக்கள் நம்புகின்றனர். இதனையே ஊடக விமர்சகர், Marshall Macluhan "Media is the message "என்கிறார். அதாவது ஊடகம் என்பது செய்தியே ஆகும்.
21ம்நூற்றாண்டில்ஊடகத்துறையின் தாக்கம் காரணமாக ஊடக எழுத்தறிவு கல்வியுடன் நெருக்கமானதொன்றாக பார்கப்படுகின்றதது. As pen media literacy leadership institute "The ability to access, analyze, evaluate and create media in a variety of forms "என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. அதாவது தமிழில் கூறினால் ஓர் தகவலை வெவ்வேறு பட்ட வடிவில் மதிப்பிட்டு,ஒழுங்கு படுத்தி அணுகும் ஆற்றலே ஊடக எழுத்தறிவு என்று வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் ஊடகத்தின் பங்கினை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஊடக எழுத்தறிவு என்று மேலும் ஒரு வரைவிலக்கனம் காணப்படுகிறது.
21 ம் நூற்றாண்டில் ஊடகத்துறை தனித்துறையாக வளர்சியினை உலகளாவியரீதியில் எட்டிய போதும் எமது இலங்கை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஊடகத்துறை இன்றும்கூட தமக்குரிய துறையாக பெரும்பாலானவர்களால் கருத்தில்கொள்ளாதமை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆக்கம்
இ.தனஞ்சயன்.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
திங்கள், 20 நவம்பர், 2017
பன்னாட்டு அரசியல் கருத்துருவாக்கத்தில் தொலைகாட்சியின் பங்கு காத்திரமானது!
இன்றைய தினம் உலக தொலைகாட்சி தினமானது சர்வதேச ரீதியாக கொண்டாடப்படுகிறது.குறித்த தினத்தை முன்னிட்டு தொலைகாட்சியின் கருத்துருவாக்கம்(Opinion making) மற்றும் ஜனநாயகத்தினை வலிமைப்படுத்ல் போன்றன குறித்து சிந்திக்கப்போவதாகவே குறித்த பதிவு அமையவிருக்கின்றது.சமுக விஞ்ஞான துறையில் முக்கியமான துறையாக தற்போது தொடர்பாடல்த்துறை விளங்குகிறது.20ம் நூற்றாண்டின் 60களின் பிற்பகுதியில் பிரசித்திபெற்றதாகக் காணப்படுகிறது. இதில் ஊடகங்களின் இயல்பு, பயண்பாடு, தாக்கம் ஆகியவை மிக ஆழமாக ஆராயப்படுகின்றன.குறித்த தொடர்பாடல் ஊடகத்துறையில் மிகப் பெரிய புரட்சிகளினை உண்டுபண்னியதாக தொலைக்காட்சி காணப்படுகிறது.கல்வி, அரசியல், பொருளாதாரம், பொழுதுபோக்கு, வணிகம், செய்தி,விளையாட்டு,ஆன்மிகம் மற்றும் சமுகம் போன்றவற்றிற்கான சிறந்த ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது.ஏனைய வகையான ஊடகங்களில் இருந்து குறிப்பாக அச்சு ஊடகங்களான பத்திரிகை, சஞ்சிகை போன்றவற்றில் இருந்தும் செவிநுகர் ஊடகமான வானொலியில் இருந்து தொலைக்காட்சியின் சுபாவங்கள் வேறுபடுகிறது.ஐம்புலன்களினையும் இயக்கத்தில் முழுமையாக வைத்துஇருப்பதற்கு தொலைக்காட்சி முக்கிய பங்காற்றுகின்றது.இதன்காரணமாகவே,அனைவருடைய இல்லங்களிலும் தொலைக்காட்சியினை காணமுடியும்.குறித்த தொலைக்காட்சியினானது பூகோள மயமாக்கல் சூழலில் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு ஐக்கிய நாடுகள் சபையானது 1996ம் ஆண்டு முதற்கொண்டு உலகத்தொலைக்காட்சி தினத்தை உலகளாவிய ரீதியில் சமாதானம் ,பாதுகாப்பு,பொருளாதாரம்,சமுக அபிவிருத்தி,தொடர்பாடல் மற்றும் பண்பாட்டு மாற்றம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்குடன் பிரகடனப்படுத்தி ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.உலக அரசியலினை ஓர் ஒழுங்கு முறைக்குள் இட்டு செல்லும் தொலைக்காட்சிகளாக Reuter,BBC,CNN, AFP,APA,CPS,RT,CGTN,Aljazeera,Thass, Telegraph, The guardian, India today,ABC,Fox news,Sky news,NDTV போன்றவற்றை குறிப்பிடலாம்.இவை சர்வதேச அரசியலில் உள்ள தொடர்பாடலை இற்றைப் படுத்தும் ஊடகங்கள் ஆகும்.இன்றைய காலத்தில் சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா ஊடகங்களின் பெறுமதியை விளங்கிக் கொண்டு பல மொழிகளில் தொலைக்காட்சி சேவையை உருவாக்கியுள்ளது.இதன் மூலமாக சீனா தொடர்பாக சர்வதேசம் அறியாத பல தகவல்களை உலகத்திற்கு சீனா உணர்த்தி வருகிறது. போர் முனைகளில் கூட அவற்றின் பங்கு கணிசமானது.இதேவேளை, 1996 ல் நடைபெற்ற கொசொவா போரின் போது கேட்டோம் படைகளிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் ஒழுங்கு செய்த போதெல்லாம் அமெரிக்கா சார்பு தொலைக்காட்சிகள் அமெரிக்கா சார்ந்த தொலைக்காட்சிகள் அங்கு நீச்சல் உடையில் கவர்ச்சியாக பெண்கள் பலர் நடிக்கும் பெவோச் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரை ஒலிபரப்பி மக்களை வீடுகளுக்குள் முடங்கி வைத்தன.சீன நிறுவனமான Chinxuva சர்வதேச ரீதியாக 160 தொலைகாட்சி நிலையங்களை உருவாக்கியுள்ளது.2020ம் ஆண்டளவில் மேலும் 40 தொலைகாட்சி நிலையங்களை நிறுவவுள்ளது.2016ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் பன்னாட்டு அரசியலை பேசும் முன்னணித் தொலைகாட்சியான CCTV என்ற பெயரைச் CGTN என்று மாற்றியுள்ளது.இதன் விரிவாக்கம் China Global Television Network ஆகும். இதிலிருந்து சீனா (Globalization)உலகமயமாக்கலிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவத்தை எவ்வளவு தூரம் விளங்கி வைத்துள்ளது என்பதை உணரமுடியும்.இதேவேளை குறித்த தொலைகாட்சியானது ரஸ்யமொழி,ஆங்கில மொழி, அரபு, பிரென்சு மற்றும் ஜப்பானிய மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறமை கவனத்திற்குரியது. இதேசமயம், கடந்த நாட்களில் ஆபிரிக்க நாடொன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வு தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்புகின்றது.அதாவது, 37வருட சிம்பாவே ஜனாதிபதி ரோபேட் முகாபே பதவியில் இருந்து இராணுவ புரட்சியின் மூலமாக கவிழ்கப்ப்பட்டமை குறித்த ஆட்சி கவிழ்பிற்கு இராணுவம் குறித்த நாட்டின் அரச தொலைகாட்சி நிறுவனத்தையே முதலில் தனது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்து அதன் பின்னர் நாட்டு மக்களுடன் தொலைகாட்சியில் தம்மை நியாயப்படுத்தி மொகாபேயை வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலத்தில் மக்களின் ரசனைக்குரியவகையில் (Taste culture) நகைச்சுவைக்கென தனியான தொலைக்காட்சிகள்,ஆன்மிகத்திற்கென தனியான தொலைகாட்சிகள்,விளையாட்டுக்கென தனியான தொலைகாட்சிகள்,செய்திக்கென தனியான தொலைக்காட்சிகள்,பாடலிற்கென தனியான தொலைகாட்சிகள் அத்துடன் சிறுவர்களிற்கென பிரத்தியேக தொலைகாட்சிகள் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ்நாட்டினை பொறுத்தவரை அரசியலில் கால்பதிக்க வேண்டுமாயின் தொலைகாட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது எனலாம். கட்சிகளிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற நிலை.அச்சு ஊடகங்கள் என்பது எழுத்தறிவு படைத்தவர்களாலேயே விளங்கிக் கொள்ள முடியும்.மாறாக,தொலைகாட்சி சாதாரண பாமரர்களாலேயே புரிந்து கொள்ள முடியும். இது தொலைகாட்சியின் மிகப்பெரிய பலமான அம்சம் ஆகும்.இலங்கையை பொறுத்தவரை அரச தொலைகாட்சிகள்(State media)தனியார் தொலைகாட்சிகள் என்ற பிரிப்புக்குள் உள்ளடக்க முடியும். அரச தொலைகாட்சிகள் மக்களிற் கான ஊடகங்கள் என்பதை மறந்து ஆளும் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்பாட்டு வருவதும் தனியார் தொலைகாட்சிகள் தமது நிர்வாகத்தின் அரசியலிற்கு தாளம் போடுவதுமே வழமையானது.எனினும், இலங்கையில் எந்தவொரு தொலைகாட்சியும் இன்னமும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவில்லை என்பதுடன் ரஸ்யாவில் ஒரு தொலைகாட்சிநிறுவனமானது 7D தொழில்நுட்பத்தை பரிசீலித்து வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும்,தொலைகாட்சிகளின் சுபாவங்களில் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும் சாதகமான முறையில் சிந்திப்பே சாதகமான விடயங்களினை வாழ்வில் பெற்றுக்கொள்ளவழிவகுக்கும்.தொடர்ந்து சிந்திப்போம்!இ.தனஞ்சயன் ஊடகத்துறை.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
