அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சமாதான உருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபாகம்!

           
           சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை வெளிக்கொண்டுவருவதற்கு துணிவற்ற  செய்தி ஊடகம் இருக்கும் வரை, சமாதானம்,நல்லிணக்கம்  மற்றும் இன ஒற்றுமை தொடர்பாக உரையாடுவது சற்று கடினமானதே. பொதுவாக,  ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்ற போது, பெரும்பாலும் பரபரப்பான  மற்றும் சந்தைவாய்புக்களுகேற்பவே, செய்திகளை வெளியிடுகின்றது. 

            யுத்தத்திற்கு பின்னர்  அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் எமது அரசாங்கம் பாரிய அளவில் முயற்சித்தாலும் இன்றளவிலும் அதன் முயற்சி தோல்வியே. காரணம், சமாதானம் மற்றும் நல்லிணக்க கருத்துக்களினை மக்களிடம் கொண்டு சேர்கும்  ஊடகத்தின் பங்கு திருப்திகரமாக இல்லை. ஊடகங்கள் பிரபலமடைய வேண்டுமானால் இனவாதத்தை தமக்கு சாதகமாக்கவேண்டும்,நாட்டின் அபிவிருத்திக்கு அமைதி மற்றும் நல்லினக்கம் அவசியம்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக,எமது நாட்டில்  ஊடகங்கள் அதை நாசப்படுத்துகின்றன. 

                இன்றைய தினம் மின்னணு ஊடகங்கள் மற்றும் ஏனைய  ஊடகங்கள்  மூலமும்  தகவல்கள் விரைவில் பரவலடைகின்றது. எகிப்து மற்றும் துன்சீனிய புரட்சிகள், இந்தியாவின் அண்ணா ஹசாரேவின் போராட்டங்கள்  பொதுவாக, இவற்றை  கட்டுப்படுத்த முடியாதவை. இவற்றின் முலமாக சில சமயங்களில் தேசியப் பிரச்சினைகள் சில தனிநபர்களின் விருப்பங்கள் மற்றும் தமது சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில்தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, அண்மையில் நடைபெற்ற கண்டி இடம்பெற்ற இனவெறி தாக்குதல்களை குறிப்பிடலாம். 
           
                 இணையத்தின்   விரைவான பரவல் மற்றும் அர்ப்பணிப்பு சமூக வலைத்தளங்களின் தளங்களின் எழுச்சி ஆகியவை சமூக இணைப்புகளின் உள்கட்டமைப்பை  வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. இன்றைய தினம் எந்த  செய்தியாக இருந்தாலும்  விரைவாக  பரப்பப்படகூடிய திறன் கொண்டது, அதன் தொலைநோக்கு விளைவுகளைத் தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களின் ஆர்வம் மற்றும் சமூக மதிப்புகள் என்பவற்றை பொருட்படுத்தாமல் சில சமயங்களில் ஊடகங்கள் செயற்படுகிறது.

                நாட்டில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி ஊக்குவிப்பதில் ஊடகங்கள் ஒரு முக்கிய பங்கை செய்ய வேண்டும் என்று ஒரு குரலில் சமூக அக்கறையாளர்கள் வாதிட்டாலும் தேசியவாதத்தின் பெயரில் உள்ள சிக்கல்களின் சிந்தனையை மதிப்பிடுவதற்கு சில ஊடக செய்தித் தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் செயற்பாடுகள் பற்றி  தவறாக விமர்சிக்க வேண்டியுள்ளது. செய்தி ஊடகத்தில் சுய கட்டுப்பாடு மற்றும் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் சுமத்தப்படக்கூடாது என்று ஊடக ஒழுக்கவியலை  ஒப்புக் கொண்டாலும், ஊடகங்களினுள் அதன் சமூக கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்கின்றதா என்பது சற்று கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். 
         
            நாட்டின் தற்போதைய நிலையில், சமாதான மற்றும் இன நல்லிணக்கத்தை பராமரிப்பதற்காக ஊடகங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டிய கடப்பாடு  உள்ளது. ஆனால் ஊடகங்களின் ஒரு பகுதியினர் தங்களது கொள்கைகளிலிருந்து தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்தும் முரண்பாடு இதழியல் அம்சங்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனினும் சமாதான இதழியல் பண்புகள் இன்னும் எமது நாட்டு ஊடகத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இ.தனஞ்சயன் 
                  

சனி, 8 செப்டம்பர், 2018

மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும் நல்லூரானின் தேர் பவனி .......

"அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்! முருகா என்று ஓதுவார் முன்" வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அலங்கார கந்தன் என்று வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாண நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்றைய தினம் 08/09/2018 அதிகாலை 7.30 அளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் அடியார்கள் வருகைதந்ததுடன் தேர்த்திருவிழா சம்பிரதாயப் பூர்வமாக இடம்பெற்றது. இதன்படி, நல்லூரில் ஊடக நிறுவனங்கள்,வியாபார நிறுவனங்கள் என நல்லூரை மையப்படுத்தி நிறுவன மேம்படுத்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றன. இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குகின்ற வரலாற்று சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா வழமைபோன்று சிறப்பாக இடம்பெற்றதுடன் இம்முறை ஆலயத்திற்கு பொற்கூரை இடப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 'என்னே விதியின் பயன் இங்கு இதுவோ. . . . பொன்னே மணியே பொருளே அருளே...... மன்னே மயிலேறியவனே. .....' கந்தனுபூதி இ.தனஞ்சயன்

வியாழன், 28 டிசம்பர், 2017

கால மாற்றத்தின் காரணங்கள் கண்டனத்திற்குரியவை!

"The early Bird catches the worm" என்பது ஆங்கிலத்தில் காணப்படும் ஒரு பழமொழியாகும்.பழமொழிகள் என்பது அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களின் அடிப்படையில் எழுபவவை.சொற்கள் குறைவாகவும் கருத்தாழம் நிறைந்ததாகவும் பழமொழிகள் காணப்படும்.அந்த வகையில், மேற்கண்ட பழமொழியின் கருத்து அதிகாலையில் இரைதேடும் பறவை  இரையை பெற்றுக்கொள்ளும் என்பதாகும்.இதற்கு ஒத்ததான கருத்தையே பெஞ்சமின் பிராங்க்ளின்"Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise" என்கிறார். அதாவது முட்கூட்டியே படுக்கைக்கு சென்று முட்கூட்டியே நித்திரை விட்டு எழுவது மனிதனை சுகதேகியாகவும்,செல்வந்தராகவும் மற்றும் புத்திசாலியாகவும் உருவாக்கும்.
              மேலும், அதிகாலையில் விழித்துக்கொள்வதன் காரணமாக குறிப்பிட்ட சில நன்மைகள் காணப்படுகிறது.நாளாந்த காரியத்தை இலகுவாகவும் நிதானமாகவும் மேற்கொள்வதற்கும்,சிறந்த முறையில் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்யமுடியும்,பதட்டம் இன்றி மிகவும் நிதானமாக மேற்கொள்ள முடியும், பயனுள்ள விசயங்களை செய்வதற்கு, மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு, மனஅழுத்தமின்றி தெளிவான சிந்தனையுடன் காணப்படுவதற்கு,குறித்த நாளினை வெற்றிகரமான நாளாக நிறைவு செய்ய அதிகாலையில்எழுவது முக்கியமானது.
          இவ்வாறு பல்வேறு நன்மைகள் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, பாட சாலைகள் செல்லும் மாணவர்கள் அதிகாலையில் எழும் போது புத்துணர்ச்சி பெற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் பாடசாலை செல்லும் மாணவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை செல்லும் நேரத்தை மையப்படுத்தியே பெரும்பாலான வீடுகளின் திட்டமிடல் இடம்பெறும்.இந்த நிலையில்,அண்மையில், வடமாகாணசபையில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர்களால் மாகாண சபை முதலமைச்சரின் கவனத்திற்கு கொன்டுவரப்பட்டுள்ளது.
          இந்த வி பயம் தொடர்பாக வடமாகாணசபை மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில் வடக்கில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக அனைவர் மத்தியிலும் அதிருப்தி நிலை காணப்படுகிறது. காலை 7.30க்கு பாடசாலை ஆரம்பிப்பது என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடினமான உள்ளது.யுத்தம் காரணமாக தாய்மாரை இழந்த சிறுமிகள் குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலையில் உள்ளார்கள்.இவர்கள் காலை நேரம் உண்பதுகூட இல்லை. இதனால் கற்பித்தலினை கிரகிக்கும் நிலையில் இல்லாத பாடசாலை சென்று வருகிறார்கள்.ஆசிரியர்களும் இவ்வாறு பல்வேறு இடர்பாடுகளினை சந்திக்கிறார்கள்.ஆகவே பாடசாலை ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.இதேபோல், காலையில் தூர இடங்களிற்கு செல்லும் பாடசாலை ஆசிரியர்களும் பல்வேறு  இடர்பாடுகளினை எதிர்கொள்வது தொடர்பாக வடமாகாணசபை அவைத்தலைவர் கவலை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
        வடமாகாணசபையில் இவ்வாறான விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது வேடிக்கையானது. எனினும் வடமாகாணசபை இவ்வாறு பல சம்பவங்களினை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.உண்மையில் தூர இடம் சென்று கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதற்குரிய மாற்றுவழி பாடசாலை நேரம் மாற்றுவது அல்ல மாறாக ஆசிரியர்களினை அருகில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குவதே ஆகும்.மாறாக நேரமாற்றம் என்பது செருப்பின் அளவுக்காக காலை வெட்டுவதற்கு ஒப்பான செயல் ஆகும்.
             இதேவேளை தாய் தந்தையை இழந்த பிள்ளைகளிற்கு கல்வியை சிறந்த முறையில்தொடர்ந்து செல்ல அவர்களின் பொருளாதார நிலையை வளப்படுத்த வேண்டும்.அத்துடன் இலங்கையை பொறுத்தவரை வடமாகானத்தில் மாத்திரமல்ல ஏனைய மாகாணங்களில் கூட வறுமையுடன் காலை உணவை உண்ணாமல் பல மாணவர்கள் பாடசாலை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.குறித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நேரத்தினை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை.
         இதேவேளை,நுவரெலியா மற்றும் ஹட்டன் போன்ற கடுமையான குளிர் பிரதேசங்களில் கூட பாடசாலை மாணவர்கள் காலையில் செல்லுகின்றமை கவனிக்கத்தக்கது.அண்மையில் வெளியான பொதுப் பரீட்சையில் கல்வி பெறுபேறுகள் ஏனைய மாகாணங்களினை விட மிகவும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளதற்கான பல காரணங்களில் முக்கியமானதொன்று நம்மிடையே காணப்படும் சோம்பேறித்தனம் முதன்மையானது. ஆகவே, குறித்த பாடசாலை நேர நடைமுறையில் மாற்றத்தை உண்டுபண்னி எமது சமூகத்தை மந்தமானவர்களாக ஆக்க முயற்சிக்க கூடாது என வினயமாக கேட்டு கொள்கின்றோம். இ.தனஞ்சயன்
     
        

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கருத்தின் ஆழம் குறைவுபடாமல் இருப்பதே கவிதை!

படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்ற மன உணர்வுகள் படைப்பாக வெளிவரும் போதே படைப்பாளி சுயதிருப்த்தி அடைகின்றான்.படைப்பாளி தனது திறமைகளை ஏதோஒரு வகையில் தனது ஆக்கப் படைப்புகளை வெளிஉலகிற்கு வெளிக்கொணர முயல்கின்றான்.சில சமயங்களில் வெற்றி பெறும் படைப்பாளி பல சமயங்களில் காணாமலே போய்விடுகின்றான்.படைப்பாளி தனது சூழலில் இருந்தே தனது ஆக்கப் படைப்புகுரிய கருப்பொருளை பெற்று கொள்கின்றான். சூழல்கள் மாறும் போது படைப்பின் தன்மைகளும் மாறுபடுகிறது.அந்தவகையில், இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் முக்கியமானதாக கவிதை விளங்குகிறது. இது சிறுகதை,நாவல், கட்டுரை போன்றவற்றின் சுபாவங்களில் இருந்து மாறுபட்ட இயல்பு கொண்டது.கவிதையானது ஒருவரின் உளக்குமுறல்கள் மொழி வடிவம் பெறும் போது தோற்றம் பெறுவதாகும்.கவிஞர் பிறைசூடன் கவிதை தொடர்பாக கூறும் போது பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் தமிழ் கவிதை உலகில் அனைத்தையும் தொட்டுவிட்டார்கள்.நாம் வரிவடிவம் மற்றும் வார்த்தைகளில் மாத்திரமே மாற்றம் செய்து வருகின்றோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. கவிதையானது எந்த அடக்குமுறை சூழலில் இருந்தாலும், ஏதோஒரு குமுறலாக வெளிவந்துவிடுவது அதன் சிறப்புத்தன்மையாகும்.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பான"விரியும் போராடும் அரும்புகள்" ஒக்ரோபர் மாதம் 11ம் தி கதி கைலாசபதி கலையரங்கில் வெளியீடு தெரிவுசெய்யப்பட்டு இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.கவிதை வெளியீடு விழாவுக்கு அழைப்பு வந்தும் அண்றைய வெளியிட்டு விழாவில் தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆயினும், கவிஞரினை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகசந்தித்து கவிதைபுத்தகத்தை பெற்று வாசித்த அனுபவித்த உணர்வுகளை திறனாய்வுத்தளத்தில் வலைப்பூபதிவாக்கலாம் என எண்ணுகிறேன்.கவிதை என்பது சமூகத்தின் உணர்வு பிரவாகம் எனலாம்.கவிஞர் அஸ்கர் தனது உணர்வுகளை விரியும் போராடும் அரும்புகள் என்று கவிப்புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். காரணம், உணர்வுகள் ஓர் ஒழுங்கு முறையில் வார்த்தைகளாகி வரியாகி கவிதையாகின்றது எனலாம்."விரும்பிகள் கொடுத்த காலம் திருடித்தின்னும் காலமே இச் சீர் வரிசை"என்று சீதனம் கொடுமையை சீர் வரிசை எனும் சீதனம் எனும் கவிதையில் கூறுகிறார்.விழுந்தாலும் விதையாகிடு எனும் கவிதையில் "துச்சமும் அச்சமும் உன் இதயங்கள் எனக்கும்வேண்டும் தோழா வீரநடை போட்டதால் நீ மண்ணிலே இன்றும் மணம் வீசுகின்றாய் "என்ற கவிவரிகளில் சோசலிச சித்தாந்ததை வலியுறுத்தியுள்ளார்.

முன் பக்க அட்டைப்படத்திலேயே கவிஞன் கவியின் கருப்பொருளின் ஆழத்தை உணர்த்தியுள்ளதோடு மலையகமக்களின் எதிர்பார்ப்புகளை அரும்புகளாக உவமைபடுத்தியுள்ளமை சிறப்பு.இதே சமயம் ஒரு இளம் கவிஞராக அஸ்கர் கூட ஒரு வகையில் விரியப்போராடும் அரும்பு என்று அர்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை,உழைப்பே உயர்வு என்ற ஒரு கவிதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது "மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டு முடியும் என்ற முடிவோடு வா தோழனே" என்ற கவி வரியானது தன்னம்பிக்கையூட்டும் வரிகளாக அமைகிறது.மேலும், மற்றொரு கவிதையில்
"காலம் காலமாய்
மீட்சி இல்லாப் போராட்டத்தில்
தூளாய் போகின்றது....."மலையகமக்களின் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை சலித்து கவிதை வாயிலாகசொல்கிறார்.காணாமல் போன கணவுகள் எனும் கவிதையில்"காலமெல்லாம் காணாமல் போய் கனவுகள் கூட கஞ்சத்தனம் காட்டுகின்றன "எவ்வளவு சோகம் ஏமாற்றம் கணவுகள் கான்பதற்கே நம்பிக்கை அற்ற தன்மை. ஆழ்ந்த சிந்தனை மிக்க வரிகள்.உன்மை நட்பு எனும் கவிதையில் "பாலினம் தடையில்லை உணர்வுகள் ஒன்றானால் தோழன் துனைநிற்பான்"ஆன் பென் நட்பின் புனிதமான தன்மையை குறிப்பிடுகிறார்.பெண்ணின் கொடுமை எனும் கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு இறுதி வரிகளில்"தடுத்து எதிர் நிற்க தூக்குதண்டனையை வரச்சொல்லங்களே"என பெண்களின் விடுதலைக்கான அவசியத்தையும் அதற்கு தீர்வாக தூக்குத்தண்டனையும் தனது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.தோட்ட தொழிலாளிகள் எனும் கவிதையில் "கட்டைகள் காற்சட்டை வெள்ளையனின் அடி மட்டம் போனபின்னும் போகவில்லை "என்று மலையக மக்கள் தொடர்ந்தும் அடிமைத்தனம் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். நிதியும் நீதியும் எனும் கவிதையில் "நிதி தான் நீதியா இது தான் நியதியா"என நீதி நிதிக்கு பின்னால் என்ற தற்கால நிலமையை கவிதையில் சொல்கிறார்.

"புயலோடு போராடும்
தூக்கணாம் குருவி கூட்டைப் பார்
உழைப்பால் உயர்ந்து போய்
உயரத்திலேயே வாழ்கிறது
மகுடிக்கு வளைந்தாடும்
பாம்பாக ஆகாதே
முடிவின் ஆரம்பத்திலும்
முதுகெலும்போடு உழைத்து வாழ்"
என்று உழைப்பின் அவசியத்தை உழைப்பே உயர்வு எனும் கவிதையில் உணர்த்துகின்றார்.உழவனின் உழுத மனம் எனும் கவிதையில் "உழவன் மனம் ஓயந்து விட்டால் உண்பதற்கு சோறிறின்றி நாற்றோடு சேற்றில் இறங்குவதே மனிதனின் விதி ஆகிவிடும் "விவசாயத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்கவிஞரின் தொலைநோக்கு பாராட்டுக்குரியது.வடுக்கள் எனும் இன்னொரு கவிதையில்"இறுதி சடங்கு செய்து கொள்ளி வைக்கப் பெற்றெடுத்த மகளைத் தொலைத்து துடிக்கும் பெற்றவரின் கதறல்கள்"என்று போர்காரணமாக இறந்த இளைஞர்களின் பெற்றோரின் மனவருத்தத்தை கவிஞர் அழகாக பதிவு செய்கிறார்.நாகரீகம் உட்புகுந்த மானிடம் எனும் கவிதையில் "சுகங்களை சுத்தமாக காணோம் சூனியமாய் ஆனது உலகே"என்று உலகமயமாக்கலின் தாக்கத்தை கூறும் கவிஞர் குறித்த கவிதையின் இறுதி வரியில் நமக்கெல்லாம் ஆகுமா நாகரீகம்? என்று முடிக்கிறார். இது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல்என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதாகவே கருத்து கொள்ளவேண்டியுள்ளது.

"கல்வி உன் உயர்வெனவும்
ஒழுக்கம் உன் சிறப்பெனவும்
இவையோடு மலர்தலே
உன் புகழ் எனவும் உரைத்திட வேண்டும்"
என்று விளையும் பயிர் எனும் கவிதையில் கல்வியின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றார்.அத்துடன், செல்லாக்காசு எனும் கவிதையின் இறுதியில் "புரிதல் வேண்டும் உலகே-காசு புதிதாய் இனிக்கும் நஞ்சே"என்று காசின் தன்னம பற்றி சிந்திக்க வைக்கின்றார்.

நான்,தமிழோடுவிளையாடுமனமே,உழைப்பே உயர்வு,கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்தபறவை,
விளையும் பயிர்,தூரத்து நிலா,விளையும் பயிர்,
யார் குற்றம்,தேம்பியழும் சுவர்கள்,
விரிய போராடும் அரும்புகள்,ஒரு மயிலிறகால்,
பாலஸ்தீனக் குரல்,குருவிக்கூடு,
காணி நிலம் வேண்டும்,
கடல்வாழ் காகித ஓடம்,முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம்,
என் உயிர் தங்கை,கடல்வாழ் காகித ஓடம்,கடைசி முத்தம்,உயிருள்ள மரணம்,வறுமை விலகாதோ,
புறப்படு புதுமைப் பெண்ணே,
வடுக்கள்,காணாமல் போன கனவுகள்,உண்மைநட்பு,தோட்டத்தொழிலாளிகள்,பெண்ணினக் கொடுமை
வட்டியில்லா கடன்,
மீளாத மியன்மார்ப் படகுகள்,உழவனின் உழுத மனம்,மொட்டின் மொழி ,வறுமை விலகாதோ,அவசரக் கல்யாணம்
சதுரங்க வேட்டை,இறுதி நாழிகை என்று சமூககவிதைகள்,பொருளாதார,அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதை அமைந்துள்ளது.கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார்"கவிஞ்ஞனின் கற்பனையை இலக்கனம் கற்பிக்க முடியாது இது தான் அதுவென்றாலும் அது கவிதான்"என்று கூறுகிறார். கவிதையின் வரிகள் அற்புதமானது.கன்னி படைப்பினை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. கவிஞர் முகமது அஸ்கரின் முக நூல்களில் பார்த்து ரசித்த கவிதைகள்
இன்று நூல் வடிவில் உருவாகி இருப்பது மிகவும் பொக்கிஷமான விஷயமாகும். முகப்புத்தகத்துக்குள் தனது கவிதையை சிக்கவிடாமல் அச்சு வடிவில் வெளி உலகிற்கு கொண்டு வந்தமை சிறப்பானது.அச்சு வடிவில் கவிதை வாசிப்பு அனுபவம் அலாதியானது.விரியப் போராடும் கவிதைகள் என்ற கவிஞர் முகமது அஸ்கரின் கவிப்புத்தகம் கவிஉலகிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. இறுதியாக மொட்டின் மொழி எனும் கவிதையில் கவிஞர் குறிப்பிட்ட "உலகம் இன்று இருட்டறையில் இனி நீயாவது விழித்துக்கொள்"என்ற வரிகளை சிந்தித்துக்கொண்டு எனது இச் சிறு வலைப்பூப்பதிவினை நிறைவு செய்து மற்றும் ஓர் வலைப்பூப்பதிவில் விரைவில் சந்திக்கின்றேன். இ.தனஞ்சயன்.ஊடகத்துறை

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

கல்விக்கு விளம்பரம் அத்தியஅவசியமா?

வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ள விளம்பரம் வாழ்க்கையினை புரிய வைக்கும் கல்வி துறையியினை விட்டு வைக்கவில்லை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Roosevelt என்பவர் விளம்பரம் என்பது எண்ணற்ற மக்களிற்கு பயனுள்ள பொருட்கள் தொடர்பான உண்மையான அறிவை தருவது.இது ஒரு வகையில் கல்வி ஆகும். நாகரீக வளர்ச்சி இக்கல்வி அறிவை சார்ந்தாகும் என கூறுகின்றார்.பத்திரிகைகளின் விளம்பரம்பரங்களை பொறுத்தத மட்டில் கல்வி சார்ந்த விளம்பரங்களிற்கென தனித்த இடம் உண்டு. ஏனைய ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது பத்திரிகையில் கல்வி சார்ந்த விளம்பரங்களினை அதிகம் அவதானிக்கலாம்.விளம்பர வகைகளாக பொருள் விளம்பரம், பொதுமக்கள் சேவை விளம்பரம், நிறுவன விளம்பரம் போன்றன முக்கியமானதாக காணப்படுகிறது. கல்வி சார்ந்த விளம்பரங்களை பொறுத்தவரை யாழ்ப்பாண பிராந்தியத்தை மையப்படுத்தி வெளியாகும் மூன்று பிரதான பத்திரிகைகளினை தொடர்ந்து ஆய்வு செய்த பின்னர் கீழ்கண்ட வகைப்பாடு கட்டுரையாளரால் செய்யப்படுகிறது. ஆங்கில கற்களை நெறி விளம்பரம், கணினி கற்கைகள் விளம்பரம்,போட்டி பரீட்சை விளம்பரம், ஜேர்மன் மற்றும் பிரைன்ச் மொழி கற்கைகள் நிறுவனம், ஹொட்டல் பாடப்பயிற்சி நெறி விளம்பரம், பாடசாலை கற்கும் மாணவர்களினை மையப்படுத்திய விளம்பரங்கள் போன்றன இனம் காணப்பட்டன.குறிப்பாக குறிப்பிட்ட விளம்பரங்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு தம் பக்கம் நுகர்வோரினை இழுக்க முயற்சி செய்கின்றன. கவனகுவிப்பு,நம்பிக்கைஊட்டல்,நினைவில் நிறுத்தல்,கருத்து தெரிவிக்கும் தன்மை போன்றன குறிப்பிடத்தக்கது. விளம்பரம் என்பதன் நோக்கம் தூண்டி செயற்பட வைக்கும் ஆற்றல் ஆகும். இதனை விளம்பர கோட்பாட்டு சட்டகமான AIDAS அதாவது Attention-கவனம் Interest-ஆர்வம் Desire-ஆசை Action-செயற்பாடு Satisfaction-திருப்தி குறித்த தாக்கத்தை விளம்பரம் ஏற்படுத்தும்.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கல்வி சார்ந்த விளம்பரங்களின் நுட்பமாக வார்த்தை பயன்பாடே காணப்படுகிறது.அவற்றில் சில பிரபல ஆசிரியர், முன்னனி ,அனுபவம் மிக்க ஆசிரியர் குழாம், சர்வதேச அரசு அங்கீகாரம்,30 நாடகங்களில் ஆங்கிலம், இலவச கற்றல் கையேடுகள்,நவீன கற்பித்தல் வசதிகள், Diploma,Certificate, ஆங்கிலம் இலகுவாக பேசலாம், பதிவு களுக்கு முந்துங்கள் ,இலகுவாக அடிப்படையில் இருந்து ஆங்கிலம்,No1,எதிர்பார்கை வினாக்கள், இலகு மீளூட்டல் வகுப்புகள், முதல் தரம்,விசேஷ,தனிபட்ட, பிரத்தியேக, வெளிநாட்டில் கற்பதற்கு ஆசை இல்லையா?அனுமதிகளுக்கு,முதல் வகுப்பு இலவசம், ஒரு பிரிவில் 20 பேர் மட்டுமே, முதல் பதிவு செய்பவர்களுக்கு 60%கழிவு, இலங்கையில் புகழ் பூத்த,கட்டண சலுகை, ஆங்கில பாடநெறியில் இனைபவர்களுக்கு சிங்கள பாடநெறியில் இனையும் வாய்ப்பு,என்னிடம் இனைவோர் உயர் பெறுபேறு பெறுவர், A என்ற அருங்கனியைப் பெற்றிட,அனுமதி கட்டனம் இல்லை, ஆங்கில மொழியை தமிழில் கற்றல்,முன்னாள் ஆசிரியர், அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது,free English course, 70000 ரூபாய் பெறுமதியான 5 கற்களை நெறிகளை 20000 ரூபாய் மட்டும் செலுத்தி ஆங்கில சிங்கள மொழி அறிவைப் பெருக்கி கொள்ளுங்கள், பெறுமதிமிக்க கற்கை, மிக குறுகிய காலத்தில் சரளமாக எழுத பேசக்கூடிய ஆங்கில பாடநெறி,இலவச கருத்தரங்கு, வடக்கில் முதலாவது, 2016 A/L பரீட்சை எடுத்தவரா?புதிய பிரிவு ஆரம்பம், விழிப்புணர்வு அமர்வு, பிரித்தானிய பட்டத்திற்கான முதல் உங்கள் கட்டம்,நவீன மயப்படுத்திய விரிவுரை மண்டபம், செயன்முறை தேர்வுகள் விரிவினை விடயங்கள குறிப்புகள் இவ்வாறான வார்த்தைகள் மதி மயக்கம் கூடியது. இவற்றில் இருந்து தெளிவு பெறவேண்டும்.நல்ல பொருளிற்கு விளம்பரம் அவசியம் அற்றது என்பார்கள். ஆனால், உலகமயமாக்கலின் தாக்கம் விளம்பர பொருளே தரமானது என்றாகிவிட்டது. ஊடகங்களின் பிராண வாயுவாக விளம்பரங்களே உள்ளமையால் ஊடகங்களில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை.எனினும் இலவச கல்வி இலவச கல்வி என்று கூறும் நமது நாட்டில் கல்வி சார் விளம்பரங்களின் அதிகரிப்பு கவலை யான விடயமாகும்.ஆக்கம் -இ.தனஞ்சயன்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஊடகபாவனையின் அதிகரிப்பு ம் விதைக்கப்படவேன்டிய ஊடகஅறிவும்!

ஒரு நாட்டின் அபிவிருத்தியினை அளவிடும் சுட்டென்னில் முக்கியமான ஒன்றாக எழுத்தறிவு காணப்படுகின்றது.எனினும், தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு ஊடகங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. ஆனால், அவ் ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படாமல் தவறான பாதைக்கு திசை திருப்புகின்றது.கடந்த பல ஆண்டு காலமாக எழுத்தறிவு என்பது எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஆன இயலுமையை குறிப்பிடலாம். ஊடகங்கள் வாயிலாக பல தகவல்களினை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனாலும், அவை உண்மையானவையா?நடுநிலையானவையா?அறத்திற்கு உட்பட்டதா?புறவயமானதா? போன்ற அடிப்படை கேள்விகள் வினாவப்படவேண்டியது கட்டாயம். 21ம் நூற்றாண்டில் ஊடக எழுத்தறிவு என்ற பதம் பாவனைக்குரியதாக காணப்படுகின்றது. ஊடகத்தை எப்படி அணுகுதல்,பகுப்பாய்வு செய்தல்,மதிப்பிடுதல் மற்றும் திறனாய்வு செய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். ஊடக எழுத்தறிவு என்பது ஊடகங்களில் வரும் நுட்ப அரசியல் சார்ந்த செய்திகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் ஆகும். இது கற்றஅறிவு,அனுபவம், சமூக சூழல், பண்பாடு, மொழிமாற்றம் மற்றும் மதசார்புகளிற்கு ஏற்ப மாறுபடும்.தற்போதைய நேரத்தில், ஊடகளிற்கென ஒழுக்ககோவை காணப்பட்ட போதிலும் அவை எவ்வளவு தூரம் பிரயோகிக்கப்படுகின்றன என்பது ஆழமாக சிந்திக்கத் கூடிய விஷயமாகும்.நவீன ஊடகங்கள் இவற்றை கண்டுகொள்ளாதமை கண்டிக்கத்தக்கதாகும்.ஊடகத்தை விளங்கிகொள்வதால் ஏற்படும் சாத்தியமான அம்சங்களாக இவற்றை சிந்திக்கலாம். திறனாய்வு திறன் விருத்தி, வணிக தந்திரத்தை புரிதல், கோட்பாட்டு ரீதியில் ஊடகங்களினை அனுகுதல்,ஊடக நீதிக்காக வாதிடல், ஊடக ஒழுங்கீனங்களை கண்டித்தல், ஊடக திசைதிருப்பும் விடயங்களினை அறிதல்,பண்பாடு மற்றும் சமூகத்தை ஊடகங்கள் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கின்றன போன்றவற்றை சிந்திக்கலாம். எமது நாட்டின் ஊடகங்களினை புரிந்து கொள்ளும் ஆற்றல் வட பகுதியை காட்டிலும் தென்பகுதியில் அதிக புரிதல் ஊடக கல்வி பல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வி வாயிலாக புகட்டபட்டு வருகிறது. இங்கு அதற்கான நிலை மந்தமான நிலையில் உள்ளது. பின்வரும் கேள்விகள் ஊடகங்களினை அணுகும் போது எப்பை நாமே கேட்க வேண்டும். 1)குறித்த செய்திகள் யாரால் உருவாக்கப்பட்டது? 2 )யாரை இலக்கு வைத்துள்ளது? 3)இவ்வாறான தந்திரத்தை பின்பற்று கின்றது?4 )எவ்வாறு கருத்துருவாக்கம் செய்யக் கூடியது?5)மொழி பயன்பாடு எப்படியுள்ளது? 6)வாழ்வியல் பண்பாடு எப்படி பிரதிபலிக்கிறது?  போன்ற கேள்விகள் துல்லியமான தகவலினை அறிய முடியும். ஊடகங்களினை புரிந்து கொண்டு சிறந்த முன்மாதிரியாக ஊடக பண்பாட்டினை உருவாக்கிக் கொள்ள முடியும்.சிந்தை மகிழ ஊடகத்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் இ.தனஞ்சயன் .