அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
எழுத்தறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்தறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

சாகடித்த கல்வி முறைமை வாழவைக்குமா?

"உலகை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம் கல்வி" என்பது மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் அற்புதமான கருத்தும் தத்துவஞானி  சோக்கிரட்டீஸின் "எனக்கு கற்பிக்க தெரியாது சிந்திக்க வைக்கவே முடியும்". குறித்த சிந்தனைகளை அடிப்படை ஆதார சிந்தனைகளாக் கொண்டு எமது கல்வியின் எதிர்காலம் குறித்து சிந்திக்க போவதாகவே இச் சிறிய பத்தி வடிவில் அமையப்போகின்றது.நீண்ட காலத்திற்கு முன்னர் திரைப்படங்களில் ஆர்வமாக இருந்த சமயத்தில் பார்த்து ரசித்த திரைப்படம்,பிரமாண்டமான இயக்குனர் என்று தற்போது சொல்லப்படுகின்ற ஷங்கரின் முதற் படம் ஜென்டில்மேன் ஆக்சன் கிங் அர்ஜுனின் அசத்தலான நடிப்பு இசைபுயலின் 90கால மெல்லிசை குறிப்பாக ஒட்டகத்தை கட்டிக்கோ......என்ற பாடல் செந்தில் கவுண்டமணி கூட்டனியிலான நகைச்சுவை மற்றும் மனோரமா, நம்பியாரின் பாத்திர வார்ப்பு பிரமாதம்.எனினும், அத்திரைப்படத்தின் திரைக்கதையானது கல்வித் துறையில் லஞ்சம் இருக்ககூடாது எனவும் குறித்த லஞ்சம் வாங்குவதால் அர்ஜுன் மற்றும் நண்பன் மருத்துவ படிப்பை இழப்பதும்,இதனால் ஏமாற்றத்தில் வலிதாங்காது அர்ஜுன் தாய் மற்றும் நண்பன் தற்கொலை செய்வதும் அதைத் தொடர்ந்து அர்ஜுன் கொள்ளை காரன் ஆவதுமாக திரைப்படத்தில் ஆழமான கருத்துக்கள் உரையாடப்படுகின்றது.இறுதியில் மருத்துவ பட்டப்படிப்புக்கு தகுதி இருந்தும் கையூட்டால் ஏமாற்றம்மடைந்த ஒருவன் குறித்த அரசியல் வாதியை தற்கொலை அங்கி தாங்கி தன்னை தானே அழித்தும் அரசியல் வாதியையும் கொல்கிறார் எதிர்கால தனது சகோதர சகோதரிகளின் உயர்ந்த லட்சியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக அத்தோடு படமும் முடிவடைகிறது.சக்கைபோடு போட்ட படம் வெளியாகி 20 வருடமாகி விட்டது. அதே தமிழகத்தில் அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என்ற செய்தியானது மிகவும் வேதனையும் கல்வியின் பெறுமானம் மீதான தொலைநோக்கு அற்றஅரசின் போக்கு அரசியல் வாதிகளின் பொதுஅறிவற்ற தன்மையையே காட்டி நிற்கிறது.அனிதாவின் மரணம் தொடர்பாக இரங்கல் மற்றும் அனுதாபம் தெரிவித்து அரசியல் சுயலாபம் பெறும் முயற்சியில் தமிழக வெட்கம் கெட்ட அரசியல் வாதிகள் இறங்கியிருக்கிறார்களே தவிர தீர்வு காணும் வகையில் அல்ல.எமது நாட்டில் கூட சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பினை ஏழு மாதங்களுக்கு  மேலாக மேற்கொண்டு வருவதும் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிக்கு உரிய பெறுபேறு பெற்றும் தெரிவு செய்யப்படாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரனம் கூறிவிட்டு சென்று இருக்கின்றது.மேலும், மிக அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவி மற்றும் இந்த வருடம் உயர் தரம் எழுதிய மாணவர்கள் கடலில் மூழ்கி மரனமானவை குறித்து சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தன்னை பாதுகாத்து, தன் நம்பிக்கை அளித்து,பிரச்சனைகளிற்கு தீர்வு கண்டு,குழுவாக பணியாற்றும் ஆற்றல்,தலைமைத்துவ பண்பு விருத்தி,நுண்னறிவுத்திறன்,உலக ஓட்டத்தில் நாமும் போட்டி போட்டு வெற்றி பெற்று,தொழில் திறன்களை வளர்க்கும் வகையான கல்வி முறைமை இலங்கை பல்கலைக்கழக வரையிலான கல்வி முறையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.இதன்காரணமாகவே,இன்று பட்டதாரிகள் போராட்டம், அரசாங்க வேலை இல்லாபிரச்சினை,அரசியல் வாதிகளை வால்பிடித்தல்,வெளிநாட்டு மோகம்,இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் நாட்டம் செலுத்தல் போன்றன அடிப்படையில்,கல்வி முறையில் காணப்படும் குறைபாடே ஆகும்.கல்வியில் காணப்படும் பரீட்சை முறை அளவீடு என்பது கடின உழைப்பை அளவிடுகிறதே தவிர புலமையை அளவீடு செய்வதில்லை.இலங்கையில் காணப்படும் பரீட்சை முறைகளான புலமைபரிசில் என்னும் மாணவர்களை உணர்ச்சியற்ற எந்திரனாக நினைக்கும் பரீட்சையை தடை செய்து கா/பொ/த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளை மாற்றி அமைத்து அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கல்விமுறையை சவால்களினை தகர்த்து அமுலாக்க வேண்டும்.அத்துடன் தேசிய கல்வி னைக்குழுவால் முன்மொழியப்பட்ட பாடசாலை படிக்கும் காலப்பகுதியை குறைத்து பாடசாலை காலப்பகுதியில் புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை தாண்டிய உலகை எதிர்கால மானவர்கள் சமுதாயத்திற்கு காட்டும் போதே உலகை வெற்றி கொள்ளும் மாணவர் சமூகத்தை உருவாக்க முடியும் அல்லாவிடில் மேற்குலத்தை பார்த்து கைதட்ட வேண்டிய நிலையே முடிவாகும் என்பது கண்கூடு.அத்துடன், கல்வி யானது  வளமான எதிர்காலதிற்கான கடவுச்சீட்டாக அமைய வேண்டுமே தவிர,தற்கொலைக்கான கடவுச்சீட்டாக அமையக்கூடாது.இ.தனஞ்சயன்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஊடகபாவனையின் அதிகரிப்பு ம் விதைக்கப்படவேன்டிய ஊடகஅறிவும்!

ஒரு நாட்டின் அபிவிருத்தியினை அளவிடும் சுட்டென்னில் முக்கியமான ஒன்றாக எழுத்தறிவு காணப்படுகின்றது.எனினும், தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு ஊடகங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. ஆனால், அவ் ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படாமல் தவறான பாதைக்கு திசை திருப்புகின்றது.கடந்த பல ஆண்டு காலமாக எழுத்தறிவு என்பது எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஆன இயலுமையை குறிப்பிடலாம். ஊடகங்கள் வாயிலாக பல தகவல்களினை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனாலும், அவை உண்மையானவையா?நடுநிலையானவையா?அறத்திற்கு உட்பட்டதா?புறவயமானதா? போன்ற அடிப்படை கேள்விகள் வினாவப்படவேண்டியது கட்டாயம். 21ம் நூற்றாண்டில் ஊடக எழுத்தறிவு என்ற பதம் பாவனைக்குரியதாக காணப்படுகின்றது. ஊடகத்தை எப்படி அணுகுதல்,பகுப்பாய்வு செய்தல்,மதிப்பிடுதல் மற்றும் திறனாய்வு செய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். ஊடக எழுத்தறிவு என்பது ஊடகங்களில் வரும் நுட்ப அரசியல் சார்ந்த செய்திகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் ஆகும். இது கற்றஅறிவு,அனுபவம், சமூக சூழல், பண்பாடு, மொழிமாற்றம் மற்றும் மதசார்புகளிற்கு ஏற்ப மாறுபடும்.தற்போதைய நேரத்தில், ஊடகளிற்கென ஒழுக்ககோவை காணப்பட்ட போதிலும் அவை எவ்வளவு தூரம் பிரயோகிக்கப்படுகின்றன என்பது ஆழமாக சிந்திக்கத் கூடிய விஷயமாகும்.நவீன ஊடகங்கள் இவற்றை கண்டுகொள்ளாதமை கண்டிக்கத்தக்கதாகும்.ஊடகத்தை விளங்கிகொள்வதால் ஏற்படும் சாத்தியமான அம்சங்களாக இவற்றை சிந்திக்கலாம். திறனாய்வு திறன் விருத்தி, வணிக தந்திரத்தை புரிதல், கோட்பாட்டு ரீதியில் ஊடகங்களினை அனுகுதல்,ஊடக நீதிக்காக வாதிடல், ஊடக ஒழுங்கீனங்களை கண்டித்தல், ஊடக திசைதிருப்பும் விடயங்களினை அறிதல்,பண்பாடு மற்றும் சமூகத்தை ஊடகங்கள் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கின்றன போன்றவற்றை சிந்திக்கலாம். எமது நாட்டின் ஊடகங்களினை புரிந்து கொள்ளும் ஆற்றல் வட பகுதியை காட்டிலும் தென்பகுதியில் அதிக புரிதல் ஊடக கல்வி பல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வி வாயிலாக புகட்டபட்டு வருகிறது. இங்கு அதற்கான நிலை மந்தமான நிலையில் உள்ளது. பின்வரும் கேள்விகள் ஊடகங்களினை அணுகும் போது எப்பை நாமே கேட்க வேண்டும். 1)குறித்த செய்திகள் யாரால் உருவாக்கப்பட்டது? 2 )யாரை இலக்கு வைத்துள்ளது? 3)இவ்வாறான தந்திரத்தை பின்பற்று கின்றது?4 )எவ்வாறு கருத்துருவாக்கம் செய்யக் கூடியது?5)மொழி பயன்பாடு எப்படியுள்ளது? 6)வாழ்வியல் பண்பாடு எப்படி பிரதிபலிக்கிறது?  போன்ற கேள்விகள் துல்லியமான தகவலினை அறிய முடியும். ஊடகங்களினை புரிந்து கொண்டு சிறந்த முன்மாதிரியாக ஊடக பண்பாட்டினை உருவாக்கிக் கொள்ள முடியும்.சிந்தை மகிழ ஊடகத்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் இ.தனஞ்சயன் .