அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
சர்வதேச அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வதேச அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஆகஸ்ட், 2018

அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!

அண்மைக்காலங்களில் விளையாட்டு உலகில் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டி,இலங்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி,இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என போட்டிகள் நடைபெறும் அதேசமயம் போட்டிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்களும் இடம்பிடித்து ஊடகங்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், திலங்க சுமதி பால அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டீ சில்வா மீது சூதாட்டத்தில் தொடர்பு பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததும் அதனைத் காலாவதியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்களுக்கு பதிலளித்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான முதல் பேட்டியில் தோற்றதற்கு திலங்க சுமதி பாலா தம்புள்ள மைதானத்திற்கு விஜயம் செய்தமை சந்தேகப்படவைக்கின்றது என முன்னாள் வீரர்கள் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இலங்கையில் விளையாட்டுத்துறை அரசியலில் மூழ்கி பரிதாபமாக காணப்படும் நிலையில் விரைவில் கிரிக்கெட் சபை தேர்தலினை நடாத்தும் படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்க வேண்டியது. இதேவேளை, 2020 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககார குறித்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் அரசியலில் ஈடுபட வரவேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் குறிப்பிட்டு இருந்தமை கவனிக்க வேண்டியது. இந்த நிலையில், எமது அயல் நாட்டின் பரம எதிரியான நாடான பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1992 உலகக்கிண்ணத்தை பாகிஸ்தானிற்கு பெற்று கெடுத்த அணித்தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணியின் ஆதரவுடன் பிரதமராகின்றார்.65 வயதான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு அரசியலிற்கு நுழைந்தாலும் அரசியலில் 22 வருடங்களாக போராடியே தனது பிரதான இலக்கை (Main Goal) அடைகின்றார். இவருடைய பிரதான கொள்கையாக பாகிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழித்தல் போன்றன காணப்பட்டாலும் பிரதமராக பதவியேற்ற பின்னர், குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படும் என்பது மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானில் இராணுவத்திடம் அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கும். அத்துடன் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் இராணுவத்தின் உழைப்புள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இதேவேளை, பூகோள அரசியல்ரீதியில் பாகிஸ்தான் அமைவிடம் இந்திய, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறான அரசியல் இராஜதந்திர தொடர்புகளை கையாழப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறான சூழலில்,"இந்தியா ஒரு அடி எடுத்தால் நான் இரண்டு அடி எடுப்பேன்" என்று கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவியேற்கவுள்ள ஆவணி மாதம் 15 ம் திகதி நடைபெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் தன்னுடைய காலத்தில் இந்திய அணியில் விளையாடிய கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கருக்கும் அழைப்பு விடுக்க இருக்கின்றமை மேற் சொன்ன கருத்தை உயிரோட்டமிக்க தாக்குகின்றன. சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் முரண்பட்ட கருத்துக்களினை கொண்டுள்ள இம்ரான் எப்படி பாகிஸ்தானினை மாற்றி அமைத்து கொள்வதுடன் சர்வதேச அளவில் வருகின்ற சவால்களை வெற்றி கொள்ள போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேநேரம், குறித்த வெற்றி தொடர்பாக, இம்ரான் கானின் முதல் மனைவி Ms Gold smith குறிப்பிடும் போது 22 வருட தியாகம்,தடைகளை வெற்றி கொள்ளுதல் மற்றும் நிராகரிப்புக்களை தாண்டி பாகிஸ்தானின் புதிய பிரதமரான எனது மகன்களின் தந்தைக்கு வாழ்துக்கள் என்று கூறினார்."22 years later, After humiliation, hurdles and sacrifice, My son's father is Pakistan's new prime minister". நிட்சயமாக, கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிர்கொண்ட சவால்களை விட பாரிய அளவில் சவாலுக்கு முகம்கொடுக்க நேரிடும். எது எப்படியோ, எமது நாட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலிற்கு வந்து பாராளுமன்றம் சென்ற வீரர்களை காணமுடியும். ஆயினும், இம்ரான் தனது போராட்ட குணம் மற்றும் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வெற்றி பெற்ற விதத்தில் இருந்து ஓர் முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆக்கம்: இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

அரசியல் தொடர்பாடலிற்கு களமாக அமைவது ஊடகங்களே!

முறைசாரா வழி முறையில் அரசியலினை மக்களிற்கு கற்றுக் கொடுப்பனவாக ஊடகங்கள விளங்குகின்றன. முறை சார்  வழிமுறைகளை பின்பற்றி அரசியல் விஞ்ஞானத்தை கற்றுக் கொள்பவர்கள் மிகவும் சிலரே.ஆகையால், அரசியல் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபங்கு அளப்பரியது.இவை தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும், மாற்றி அமைத்துக் கொள்ளவும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது.அரசியல் இன்றி ஊடகங்கள் இல்லை ஊடகங்கள் இன்றி அரசியல்   இல்லை எனலாம். அரசியல் இன்று சகல துறையிலிலும் ஊடுவியுள்ளது.விளையாட்டு, கல்வி, பொருளாதாரம்,வைத்தியம்,விவசாயம் என்று அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது இதனால் ஊடகங்கள் அரசியலினை தவிர்க்க முடியாத நிலை. தற்போது ஊடகங்களின் அரசியல் முக்கியமானதாக காணப்படுகிற அதேவேளை மக்களை மூளைச்சலவை செய்து செயலற்றவர்களாக்கும் செயலைப் அரசியல் பின்புல உதவியுடன் ஊடகங்கள் நிகழ்த்திக் காட்டுகின்றன. இன்றைய ஓவ்வொரு ஊடகங்களின் பின்புலத்தில் மிகப்பெரிய அரசியல் நிகழ்சிநிரல் இருப்பது என்பது உண்மையானது.தம்மை உண்மை,நடுநிலை, துணிவு எனக் கூறிக்கொண்டாலும் அரசியல் ஆதாயத்திற்காகவே ஊடகங்கள் செயற்படுகின்றது என்பதே நியாயமான கருத்து.இந்நிலையில், ஊடகங்கள் மற்றும் அரசியலின் வெற்றி மக்களின் கைகளில் தான் சனநாயக விதிப்படி தங்கியுள்ளது. எனவே,அரசியல் வாதிகள் தமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளினை மேற்கொள்கின்றாகள் இதுவே அரசியல் தொடர்பாடலாகும்.அரசியல் செயற்பாட்டில் கருத்துக்கள் /சிந்தனைகள் ஊடகங்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள், கட்சிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் வாயிலாக கடத்தப்படுவதே அரசியல் தொடர்பாடல்(Political communication)என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது.அரசியல் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் "அரசியலில் விபத்து என்று எதுவுமே இல்லை யாவும் திட்டமே என பந்தயம் கட்டலாம் "என அரசியல் திட்டமிடலின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறார்.தொடர்பாடல் என்பது சாதாரணமான வாழ்வியலில் மிக இன்றி அமையாதது. அரசியலில் தொடர்பாடல் இன்றி அரசியல் இல்லை எனலாம்.அரசியல் வாதிகளின் முக்கியமான முதல் இராஜதந்திரமாக பொருத்தமான மிகச்சிறந்த ஊடகங்களினை தெரிவுசெய்வதே ஆகும்.ஊடகங்கள் கோட்பாடு ரீதியாக பார்தால் ஊடக தெரிவு கோட்பாட்டை குறித்த இராஜதந்திர பிரோயகத்திற்கு பயன்படுத்தலாம்.அரசியல் தொடர்பாடலினை மிகவும் திட்டமிட்டு திறம்பட மேற்கொண்டு வருபவராக இந்திய பிரதமர் நரேந்திரமோடியினை குறிப்பிடலாம்.தனது நாட்டு மக்களிற்கு உரையாற்றும் போது, பெரும்பாலும் மம்பாத் என்ற வானொலி நிகழ்ச்சி ஊடாகவே மக்களிடம் தமது திட்ட எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றார்.அத்துடன், தற்காலத்தில் மிகவும் பிரசித்தமடைந்துள்ள சமூக ஊடகங்களினை தனது பிரச்சார கருவியாவும் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.குறிப்பாக, அரசியல் வாதிகள் ஊடகங்களில் தமது பலவீனங்களை மறைத்து முகமூடிகளுடன் தோன்றி தம்மை மக்களின் மீட்பர்களாக,தலைவர்களாக,சீர்திருத்த வாதிகளாக,பேச்சாளர்களாக,தேசப்பற்றாளர்களாக,இன ஆதரவாளராக, உன்னதமானவர்களாக மக்களினை நம்ப வைப்பதற்கு அரசியல் வாதிகளிற்கு ஊடகங்களே மிகவும் சிறந்த களமாக அமைகின்றன.ஆதாரமாக,அரசியல் வாதிகள்/அரசியல்வாதியாக இலக்கு வைத்து இருப்பவர்கள் தம்மை தூய்மையானவர்களாக காட்டி கொள்ள வெள்ளை வேட்டி சட்டை அணிந்து மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் குறிப்பாக பிரபலமான ஆலயத்திருவிழாக்கள்,எதிர்ப்பு ஆர்பாட்டங்கள்,நினைவு தினங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், திறப்புவிழாக்கள்,மரணவீடுகள், திருமண வீடுகள்,விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒரு நிகழ்வுகளும் இல்லாவிடில், தமக்கு தாமே விழா எடுத்தல் போன்றவற்றின் ஊடாக மேற்கொள்கின்ற தொடர் பாடல் அரசியல் தொடர்பாடலே ஆகும். இதேபோன்று, தமக்கு தாமே புற விளம்பரங்களை வீதியில் தொங்க விடுதல்,பொது கல்வெட்டில் தமது பெயர்களை பொறித்தல் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றல்,அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்றன அரசியல் தொடர்பாடலே ஆகும்.தேர்தல் காலங்களில் அரசியல் தொடர்பாடலே மிக இன்றியமையாதது.தேர்தல் பிரச்சார சமயங்களில், அதிகமான மக்கள் தமக்கு ஆதரவாக உள்ளனர் போன்ற பிரக்ஞையை ஏற்படுத்தல் குறித்த கட்சிக் கொடிகளின் நிறத்தை முக்கியத்துவப்படுத்துகின்றன.ஊடகங்களில் கட்டணம் செலுத்தி தமக்கு தாமே விளம்பரம் செய்தல்,ஆங்காங்கே தாம் படத்திற்காக செய்த சிறிய உதவிகளை ஆவணப்படுத்தி மீள மீள ஊடகங்களில் ஒளிபரப்பு செய்து மக்களின் மூளையினை சலவை செய்தல்.போன்றன அரசியல் தொடர்பாடலிற்கான முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.அரசியலில் ஊடகங்களில் அடிக்கடி வருவது கட்டாயமானது.இல்லாவிட்டால், மக்கள் மறந்து விடுவார்கள். இதற்காக, அரசியல்வாதிகள் பல மூலோபாயத் திட்டங்களை மேற்கொள்வார்கள்.அமெரிக்காவில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலை பொறுத்தவரை சமூக ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது.அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்களினை கடுமையாக தேர்தல் காலங்களில் சாடினார். குறிப்பாக, CNN இனை போலி செய்தியை வெளியிட்டு வரும் ஊடகம் என நேரடியாக சாடினார். கடந்த அமெரிக்க தேர்தலில் கிலாரியின் பக்கம் பிரதான ஊடகங்கள்(Mainstream media)சாய்ந்தாலும் ட்ரம்பின் வெற்றி சாதாரணமாக அமைத்ததற்கு சமுக ஊடகங்களே எனலாம்.எனினும்,  ரஷ்யாவின் பங்களிப்பு ட்ரம்பின் வெற்றிக்கு துனைபுரிந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.இதேவேளை,சர்வதேச அரசியலில் ஊடகங்களின் வலிமை /சர்வதேச உறவை பேனுவதில் அரசியல் தொடர்பாடலை உணர்ந்த சீனா தனது ஆதிக்கத்தை பொருளாதார மட்டத்தில் உயர்தினால் மாத்திரம் போதாது. தொடர்பாடலே மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து C.G.T.N (China global television network ) இனை உலகளாவிய ரீதியில் விரிவாக்கி சீனாவுக்கு சார்பான அரசியல் பொருளாதார விஷயங்களை விவாதித்து நியாயப்படுத்தி வருகிறது. சீனாவின் one road one belt திட்டத்தின் வெற்றியில் குறித்த தொலைக்காட்சியின் பங்கு அளப்பெரியது.அத்துடன் பூகோள அரசியலினையும் குறித்த ஊடகம் விளங்கிக் கொண்டு செய்தியுடன் உலக வரை படத்தின் சீனாவின் கேந்திர நிலையை சுட்டிக்காட்டுகிறது. குறித்த ஊடகமொழியாக ஆங்கிலமே காணப்படுகிறது.இதேபோல்,  Aljazeera கட்டாரை தளமாகக் கொண்டு அமெரிக்கமயமாதலுக்கு எதிராக இயங்கி வருகிறது. இதன்காரணமாகவே,அண்மையில் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை கட்டாருக்கு ஏற்பட்டதற்கு மறைமுக காரணம் குறித்த ஊடகமே என்பது நன்றாக நுணுகி சர்வதேச அரசியலை விளங்கிக் கொள்ளும் போது புரியும்.இதேபோல்,Russia Today மற்றும் Tass போன்றன ரஸ்யா சார்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. B.B.C,CNN,APA,AFP போன்றன அமெரிக்காவின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் ஊடகங்களே!சர்வதேச ஊடகங்களின் விம்பிள்டன் கட்டமைப்பு பரந்தது/அளவீட்டிற்கு அப்பாற்பட்டது. பிரசித்தமான ஊடக பண்பாட்டை(Popular media culture )உருவாக்குவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இலங்கையில் அரச ஊடகங்கள் நடப்பு அரசாங்கத்தின் ஊதுகுழலாக அரசியல் தொடர்பாடலை மேற்கொள்கின்ற அதேவேளையில், தனியார் ஊடகங்கள் தமது தனிப்பட்ட இலாப அரசியலிற்காவே குறித்த தொடர்பாடலை முன்னெடுத்துச் செல்கின்றன.தமிழகத்தில் அரசியல் தொடர்பாடல் தொலைக்காட்சி ஊடகவே தற்போது பிரபலமடைந்து வருகிறது. இங்கு, சினிமாவின் தாக்கம் அளப்பெரியது.சினிமாவில் இருந்து அரசியலிற்கு வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றவராக மக்கள் திலகம் என்று கூறப்படும் MGR இறை குறிப்பிடலாம்.பாத்திரம்,பாடல்கள், திரைக்கதை,வசனங்கள் என அனைத்துமே அரசியல் தொடர்பாடலிற்கான ஆதாரங்கள். தற்போதைய கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான உரையாடல்களும் அரசியல் தொடர்பாடலிற்கான சான்றே ஆகும்.விஜய் கூட எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான தொடர்பாடலாகவே சினிமாவினை பயன்படுத்தி வருகிறார். அழகியதமிழ்மகன்,தலைவா,கத்தி தற்போதைய பாடல் ஆளப்போறான் தமிழன் முதல் என்நெஞ்சில் குடி இருக்கும் வரைக்கும் அரசியல் தொடர்பாடலே!குறிப்பாக அரசியல் தொடர்பாக வில் பின்பற்றும் இராஜதந்திரம் தொடர்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகும்.பார்வையாளர்களின் இடம், காலம்,மொழி போன்றவை புரிந்து கொள்ளப்படவேண்டும். இதன்காரணமாகவே,நமது நாட்டின் அரசியல்வாதிகள் தெற்கில் ஒருவிதமாகவும் வடக்கில் ஒருவிதமான கருத்தையும் விதைத்து வருகிறார்கள்.இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி அரசியல் தொடர்பாடலை யுத்தத்தை தானே வெற்றி கொண்டதாகவும்,சிறு குழந்தைகள் மீது பாசம் மிக்கவராகவும்,எளிமையான விவசாயி போன்றும்,தமிழ் கற்றுக் கொள்ளும் ஆசையுள்ளது போன்றும் இதன்காரணமாகவே 'நீங்கள் என்னை நம்பலாம் நான் உங்களை நம்புகிறேன் "போன்ற முறையைக் கையாண்டு வந்தார்.மேலும், இவ்வாறான உடைகளை அணிதல்,எப்படி போட்டோ விற்கு போஸ் கொடுத்தல்,உணர்வுகளை எப்படி முகாமை செய்தல்,நேர்காணலிற்கு எப்படி முகம் கொடுத்தல்,பிரபலமானவர்களை வளைத்துப் போடுதல் போன்றன அரசியல் தொடர்பாடலை மேலும் வலுப்படுத்தும்.என்ன தகவலை ஏன் எப்படி எப்போது எங்கே சொல்கின்றோம் என்பதை பொறுத்தே அரசியல் தொடர் பாடல் வெற்றி அமையும்.எவ்வாறாயினும்,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறியதைப் போன்று "சிலரை பல காலம் ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால், எல்லாரையும் எல்லாவேளையிலும் எங்கேயும் ஏமாற்ற முடியாது "என்ற சிந்தனை அரசியல் தொடர்பாடலிற்கும் சாலப் பொருத்தமானது.அரசியல், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களிற்கேற்ப தம்மை தகவமைப்பவர்களே அரசியல் தொடர்பாடலில்  வெற்றிபெறுவார்கள்.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைகழகம்,ஊடகக்கற்கைகள்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நடுநிலை மாற்று ஊடகங்களில் சாத்தியமா?

இன்றைய காலத்தில் ஊடகங்கள் மக்களுடன் மிக நெருக்கமாகி விட்டது. இரண்டும் ஒன்றை ஒன்று தங்கியே காணப்படுகின்றது.மக்கள் இதழியலின் வருகையுடன் இது மேலும் வலுவானதாக மாற்றம் பெற்றுள்ளது. ஊடகங்களினை மக்கள் தமது பயன் மற்றும் தேவை கருதி தேர்வு செய்வார்கள். ஒவ்வொருவரின் தேவை தத்தமது இலக்கு,எதிர்பார்ப்பு போன்ற தனிப்பட்ட தன்மையின் அடிப்படையில் வேறுபட்ட தன்மைகள் காணப்படுகின்றது. இதனால், ஊடகங்கள் மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் அதேவேளையில், தமது அரசியல் மற்றும் வணிக தேவைகளையும் நிறைவு செய்கிறது.ஊடகங்களின் நடுநிலை என்பது மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகும். மூத்த பத்திரிகையாளர்கள் சோ அவர்கள் நடுநிலை தொடர்பாக குறிப்பிடும் போது "கிரிகெட் விளையாட்டில் நடுவரே நடுநிலை அற்றவர்" என்று கூறினார். இக் கூற்றை ஆழமாக சிந்திக்கவேண்டும். கட்டுரையாளரின் அவதானிப்பில் ஊடகங்கள் நடுநிலை என தம்மைதாமே கூறிக்கொள்ளுமே தவிர நடுநிலை பேனமாட்டாது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தமட்டில் அவை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே செயற்படுகின்றது.B.B.C,C.N.N,C.B.S,A.F.P போன்றன நடுநிலை அற்ற ஊடகங்கள் ஆகும். அவை எப்போதும் தமது பக்க தவறுகளை நியாயப்படுத்துவதாகவே இயங்குகிறது. எனினும் அவற்றில் வரும் செய்திகள் எமது மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றதே அன்றி சர்வதேச அரசியலினை புரிந்து கொள்ளும் வகையில் அவை மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை.இந்த எமது பலவீனம் மேற்குலகிற்கு எம்மை மேலும் பலவீனப்படுத்த சந்தர்ப்பத்தை அள்ளி வழங்குகிறது. எம்மிடையே காணப்படும் வெள்ளையன் பொய் சொல்ல மாட்டான் போன்ற முற்கற்பித எண்ணங்கள் தவிர்க்க படவேண்டியவை.மேற்குலகின் ஊடக இராஜதந்திரம் புரிந்து கொள்ளப்படவேண்டும்.மாற்று ஊடகங்களின் எழுச்சி என்பதே நடுநிலை அற்ற ஊடகங்கள் என்பதற்காக ஆதாரம்.மாற்று ஊடகங்கள் என்பது பிரதான ஊடக கொள்கைக்கு மாறாக தோன்றும் ஊடகங்கள் ஆகும். மாற்று ஊடகங்கள் அதன் பண்புகளில் சிறிது காலமே தாக்கு பிடிக்கும் பின்னர் வணிக அரசியல் வட்டதிற்குள் அகப்பட்டு விடும்.மாற்று ஊடகங்களின் இயல்புகளாக விளம்பரம் இல்லாத தன்மை, சிறிய வட்டம், செலவு குறைந்த தன்மை, ஒழுங்கு முறையற்ற தன்மை, கட்டுபாடற்ற தன்மை,நிறுவன கட்டமைப்பு அற்ற தன்மையினை குறிப்பிடலாம்.மாற்று ஊடகங்களின் ஆயுள் காலம் மிகவும் குறைவானது.மாற்று ஊடகங்கள் என்பது தொடர்ந்து வரும் செல்நெறி/போக்கு(Trend) இறை மாற்றுவதாக காணப்படும். நடுநிலை இங்கு எதிர்பார்க்கப்படுவது கடினம்.உலகமயமாக்கல் மாற்று ஊடகங்களிற்கான சந்தர்ப்பங்கள். உலகமயமாக்கல் என்பதே வனிகமயப்பட்டதே .வனிகமயமாக்கல் என்பது??ஊடகங்களில் நடுநிலை என்பது எம்மை நாமே நேர்மையானவர்கள்,உண்மையானவர்கள்,நீதியானவர்கள் என்று உலகை நம்ப வைப்பது போன்றதாகும்.நடுநிலை அல்லாத மக்கள் உள்ளவரை ஊடகங்களும் அவ்வாறே காணப்படும்.ஆக்கம்:இ.தணஞ்சயன் ஊடகத்துறை மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.