அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
Specialized journalism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Specialized journalism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 டிசம்பர், 2018

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மறைமுகமான முகவரே ஊடகங்கள்!

"சட்டம் ஒருவனை நேசிக்க வற்புறுத்தா விட்டாலும் ஒருவனை தாக்கிகொலைசெய்வதில் இருந்ததாவது பாதுகாக்கும்" என்பது சட்டம் தொடர்பான நம்பிக்கையை ஆழப்படுத்தும் எண்னக்கருவாகும். சமூகம் மற்றும் மக்களின் உரிமைகள் செம்மையான முறையில் பேணப்படுவதற்கு சட்டம் உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும். ஒருவனோ அல்லது குழுவோ தனக்குரிய/தமக்குரிய  உரிமை சார்ந்த விடயங்களை நாட்டின்  சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.
   சட்டம் என்பது சமுகத்தின் ஒருங்கிசைவு சமூக மேம்பாடு போன்றவற்றை பாதுகாப்பதாக அமைய வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலையும் போது நாடு அதாள  பாலத்திற்குள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக செல்லக் கூடும். சட்டம் என்பது சமூகத்தின் ஒழுங்குகளை பேணிப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். அதனை உரிய முறையில் அமுல்படுத்தும் போதே அது வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமையும்.
      சட்டபுத்தகத்தில் உள்ளதனை நடைமுறைப்படுத்தும் போதும் அதனை பின்பற்றுவதும் கடினமானதாகவே தோன்றும். எனினும் காலப்போக்கில் அது நடைமுறைக்கு வந்துவிடும். நீதி மற்றும் ஊடகம் என்பவை சுயாதீனமானதாகும். நீதிக்காக போராடும் முதலாவதும் இறுதியானதுமான சட்ட இராஜ்சியத்தின் தலைநகரம் நீதிமன்றம் எனலாம். குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்/சட்டத்தை பாதுகாத்து நீதியை பேணுவதில் மறைமுகமாக பங்காற்றும் முகவர் ஊடகங்களே ஆகும். சட்டங்களை நடைமுறைப்படுத்தி சமுகத்தின் கண்ணாடியாக விளங்குவது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அழைக்கப்படும் ஊடகங்களே ஆகும். அது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
      கடந்த காலங்களில் இலங்கையின் ஊடகத்துறையில் மிகவும் ஆபத்தான துறையாகவே பார்க்கப்பட்டது. ஊடகத்துறையினர் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலை முயற்சிகள் மற்றும் கொலை அச்சுறுத்தல் போன்றன கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் எதிர்மறையான சிந்தனைப்போக்கே காணப்பட்டது. எனினும், தற்போதைய நிலையில் ஊடக துறை தொடர்பாக சற்று ஆரோக்கியமான மனநிலையே காணப்படுகிறது. அதற்கு பிரதான காரணம் இனைய மற்றும் சமூக ஊடகங்களின் அபரிமிதமான அபிவிருத்தி என்றே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கை சட்டத்தின் கருத்து சுதந்திரம் 14 ம் சரத்தின் அடிப்படையில் தெளிவான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் எந்த அளவு தூரம் சட்டம் பிரயோகப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
    ஊடகங்கள் என்பது வெகுஜன பார்வையாளர்களினை கொண்டுள்ளது. அக் குறித்த ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியில் கருத்ருவாக்கம், விம்பகட்டமைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தல், செய்தி அறிக்கையிடல், தகவல்களினை வழங்குதல், பகுப்பாய்வு செய்தல், புலனாய்வு தளத்தில் செய்தியை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். ஊடகங்கள் என்பது தனித்து களிப்பூட்டுவனவாக மாத்திரமல்லாது மக்களிற்கு அறிவூட்டுவதாக அமைய வேண்டும். அதாவது, ஊடகங்கள் சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து என்ன? எங்கே? ஏன்? எப்படி நடந்தது? யார் பங்கு தாரர்கள் போன்ற கேள்விக்குரிய பதில்களை  மக்களிற்கு வழங்குவதாக இருக்க வேண்டும்.
      ஊடகங்கள் மக்களினை நடப்பு விவகாரங்கள் தொடர்பாக இற்றைப்படுத்தி வைப்பதற்கு பயன்படும் இலகுவான சாதனமாகும். இன்றைய உலகில் எப்பகுதியானாலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, சிரியா, ஜேர்மனி என எங்கு என்ன நிகழ்வு நடந்தாலும் இலகுவாகஇலகுவாக தகவல்களினை பெற்று கொள்ள முடிகிறது. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். இன்று மக்களினை ஒளியூட்டும் இரு விசைகளாக சூரியன் மற்றும் ஊடகங்களினை குறிப்பிடமுடியும்.
       ஊடகங்கள் தற்காலத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள், ஜனநாயக பிறழ்வு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் விழிப்பூட்டும் செயற்பாட்டில் பிரதான பங்கு வகிக்கிறது. உதாரணமாக சிரியா மற்றும் ஜேமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களினால் ஏற்படும் மனித மீறல்கள் சர்வதேச ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இடம்பெறும் சம்பவங்களை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் அது தொடர்பாக சட்ட ஏற்பாடுகளினை மக்களிற்கு தெளிவுபடுத்துகின்றன. காரணம் யாதெனில் மக்கள் இன்று சட்டம் தொடர்பான போதிய இன்மையுடனே காணப்படுகின்றனர். 
           ஊடகங்கள் குறித்த ஒரு குற்றச்செயல்களை வெளிப்படுத்தி பிரதானப்படுத்துவதோடு அதிகாரத்தில் உள்ளவர்களினை கேள்வி கேட்கின்றது. இதன்காரணமாக, அதிகார வர்க்கம் சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தை உட்பட்டு நகர்த்துகின்றது. இதனூடாக சட்ட சிக்கல்களில் உள்ள மக்களிற்கு நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து ஊடகங்கள் என்பது சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் முகவராக கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்துகிறது. இதனாலேயே ஊடகங்கள்காவல் நாய்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஊடகங்கள் குற்ற செயல்கள், ஊழல்கள், சட்ட மற்றும் ஜனநாயக விழுமிய மீறல்கள் போன்றவற்றை பிரதானப்படுத்தி ஊடகங்களில் வெளியிடுவதுடன் அதனை உரியவர்களுக்கு அறிமுகப்படுத்தி குறித்த சட்ட மீறல்களில் ஈடுபட்டோருக்கு உரிய தண்டனையை பெற்று கொடுக்க உதவுகிறது. பிரச்சினைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் தொடர்பாக உரையாடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் சிறந்த அடித்தளமாக ஊடகங்களே அமைகின்றன. ஊடகங்களில் சிபாரிசு செய்யப்படும் தீர்வுகள் மக்களின் தீர்வுகளிற்கு இனையானவை எனவே சட்டத்தின் சார்பும் ஊடகங்களிற்கு சார்பானதாகவே அமையும். இது நடுநிலை சார்ந்த ஊடகங்களிற்கே பொருந்தும். இங்கு நடுநிலை என்பதே சிந்தனை மற்றும்  கேள்விக்குரிய விடயமாகும்.
            ஊடகங்கள் என்பது நீதி மீது நம்பிக்கை அற்று இருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கை அளித்து நீதி மீது நம்பிக்கை வேண்டுமளவிற்கு ஊடகங்கள் செயற்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அமையவேண்டுமே தவிர மேட்டுக்குடியின் கூப்பாடாக ஊடகங்கள் அமையக்கூடாது. தண்டனைகள் அநீதியாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதோடு சட்டத்திற்குட்பட்ட தண்டனைகளை அமுல்படுத்துவதில் உள்ள தாமதங்களினை எடுத்தியம்பி அதனை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும். அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த குழப்பம், எரிபொருள் விலைமாற்றங்கள், இரு பிரதமர்,இரு எதிர் கட்சி தலைவர்கள், பினை முறி மோசடி போண்ற பிரச்சினைகள் ஊடகங்களில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக கூறமுடியும். மேலும், புங்குடுதீவு வித்தியாவின் கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஊடகங்கள் Follow up அறிக்கையிடலினை மேற்கொண்டு இறுதி தீர்ப்பு வரும் வரைக்கும் அவதானித்து வந்தமை அது தொடர்பாக மக்களிற்கும் தெளிவுபடுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
     இன்றைய சமூகத்தில் ஊடகங்கள் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இருளை அகற்றி ஒளியேற்றும் சூரியன் போன்றே மக்களின் அறியாமையை போக்கி அறிவூட்டுவதாக ஊடகங்கள் விளங்குகிறது. அரசாங்கத்தை பதில் சொல்ல வைக்கும் அதிகாரம் ஊடகங்களிற்குண்டு . ஊடகங்களினை உதாசீனப்படுத்துவது மக்களினை உதாசீனபடுத்துவதற்கு சமமானது. இதுவே ஜனநாயக நாட்டில் ஊடகங்களிற்கு உள்ள பலமாகும். இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உணர்த்துகிறது.
        சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது உரிமைக்காக போராடமுடியும். இது உள்ளூர்,வெளியூர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இன்று பல போராட்டங்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவே ஒருங்கினைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஊடகவே தெளிவு மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே ஊடகங்கள் சிறந்த தொடர்பாடல் கருவிகளான உரையாடல், கருத்து கணிப்புகள், விவாதங்கள், கருத்தாடல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றன . ஊழல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதில் ஊடகங்களிற்கு பிரதான பங்குண்டு. ஊடகங்கள் தனித்து அறிக்கையிடுவது மாத்திரமல்லாது வெளிப்படையான நிர்வாகத்திறனை பேணுவதற்கு சிறந்த கண்காணிப்பாளராக ஊடகங்கள் இருக்க வேண்டும்.
    நிறைவாக, ஊடகங்கள் தனித்து அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடாது அதாவது அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்கத்தை குற்றம்சாட்டமால் மக்கள் எவ்வளவு தூரம் தமது வாழ்வியல் முறைகளினை சட்டம், விழுமியங்கள், நீதி மற்றும் அறத்திற்கு உட்பட்டு மேற்கொள்கின்றார்கள் என்பதனை தெளிவுபடுத்தி மக்களினை சட்டம் மற்றும் ஒழுங்குகளை பின்பற்ற செய்ய விழிப்புணர்வூட்டுவது ஊடகங்களின் பிரதான பொறுப்பு மற்றும் கடமையாகும். அவ்வாறு பின்பற்றும் போதே நிலையான நிம்மதியான சூழலை உடைய சமூகத்தை உருவாக்க முடியும்.

ஆக்கம்
இ.தனஞ்சயன்

சனி, 25 ஆகஸ்ட், 2018

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான இலங்கை அணியின் தயார்நிலை!

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களே நம்பிக்கை வைப்பதற்கு தயக்கமடைகின்ற தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக வெள்ளையடிப்பு செய்ததுடன் ஒரு நாள் தொடரில் 3 க்கு 2 என்று தொடரை இழந்து இறுதியாக இடம்பெற்ற ஒற்றை இருபது இருபது தொடரை தனதாக்கியது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையினருக்கு இது சில சமயங்களில் திருப்தி மற்றும் சந்தோசங்களை வழங்கியிருந்தாலும் குறித்த முன்னேற்றங்களை தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் சபை முயற்சிக்குமா என்பது சிந்தனைக்குரியது. காரணம், இலங்கை கிரிக்கெட் சபைக்குள் இடம்பெறும் கசப்பான சம்பவங்களே இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கான காரணமாகும். இதேவேளை, விளையாட்டு துறை சட்டத்தின் மூலமாக அந்த துறை சார்ந்தஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் எல்லையற்ற அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவே நியமிக்கப்போவதாகவும் கடந்த வாரம் செய்தியொன்று வெளிவந்து இருந்தது. குறித்த சட்டம், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் அழுத்தத்தை குறைக்க போதுமான சட்ட எல்லைகளை கொண்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டிலும் அமைச்சர்களின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணியை விட முன்னிலையில் இருந்தாலும், இலங்கை அனி தமது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்த டெஸ்ட் போட்டியினை வெற்றி பெற்றது. எனினும், இதே அணியை கொண்டு ஏன் மேற் இந்திய மன்னில் வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் போட்டி விதிகளை மீறியதாக இலங்கை அணி மீது குற்றச்சாட்டு பின்னர் நிரூபித்து அணியின் தலைவர் மற்றும் பயிற்றுவிற்பாளர்களுக்கு போட்டித்தடை. இலங்கை அணியுடன் விளையாடிய மேற்கிந்திய அணி முதற்தரமான அணியும் அல்ல. கோல்டர் தலைமையிலான இரண்டாம் தர அணியே. ஆகவே, இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக தடுமாறியே வருகிறது. இலங்கை அனி இன்னமும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் எந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 1996 இல் இலங்கை இந்திய உபகண்டத்திலேயே உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. எனினும், 1999 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை இரண்டாவது சுற்றுக்குகூட தகுதிபெறமுடியவில்லை. 1996 ல் விளையாடிய 6 வீரர்கள் குறித்த உலகக்கிண்ண போட்டியில் விளையாடி இருந்தனர். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக கின்ன போட்டியானது இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற சமயம் இலங்கை கிரிக்கெட் சபையினாது பொறுபற்று செயற்படுமாயின் 1999 நடந்த சம்பவமே மீள இடம்பெறும். இந்நிலையில் தற்போது இலங்கையில் நடாத்தப்ட்டுவரும் உள்ளூர் இருபது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குறித்தும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மகேல குற்றம்சாட்டியுள்ளார். 84 வீரர்களில் 44 வீரர்கள் மாத்திரமே வாய்ப்பை பெறும் அதேசமயம் ஏனைய 40 வீரர்கள் வெறும் பார்வையாளராகவே இருக்க வேண்டிய நிலை. இவ்வாறான நிலையில் இலங்கை அணியின் அடுத்து வரும் ஆசிய கிண்ன, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர்கள் உலககிண்ன போட்டிகளிற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருக்கும் போட்டிகள் ஆகும். குறித்த போட்டிகளினை கடந்து எவ்வாறு 2019 உலக கின்ன போட்டிகளில் பங்கு பற்றி மீண்டும் ஒரு உலககிண்னத்தை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெற்று கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இ.தனஞ்சயன்

வியாழன், 15 மார்ச், 2018

சமூகஊடகங்களை முடக்குவதை காட்டிலும் ஒழுங்குபடுத்துவதே புத்திசாலித்தனமானது!

          தற்போதைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களினை பரிமாற்றம் செய்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகங்களாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்கள் தொழில்நுட்பம், தொலைபேசி மற்றும் இணையத்தின் வரவுகள் காரணமாக நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.
     2000 ம் ஆண்டிற்கு முன்பு சமூக ஊடகங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அகராதியைதான் நாடவேண்டிய நிலைமை இருந்தது. மாறாக, தற்போது நிலமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது.அரசியல், வணிகம்,தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டல் மற்றும் சமூகம் சார் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகமாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.
       உண்மை ஆரம்பிப்பதற்கு முன்னரே பொய் உலகத்தை சுற்றி வந்து விடும் என்பதே வெளிப்படை. இதற்கு தக்க வாய்பாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலிற்கான தூண்டுகோலாக சமூக ஊடகங்கள் காணப்படும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டே இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களான Facebook, Viper மற்றும்  What's app போன்ற சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பு ஆனைக்குழுவினால் தற்காலிகமாக தணடசெய்யப்பட்டது.இதேவேளை,சமூக ஊடகங்களில் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவிற்கும் கருத்துக்களை பதிவு செய்த 18,19 வசதியை சேர்ந்த  இருவர் கைது செய்யப்பட்டதுடன் சமூக ஊடகங்களில் இனரீதியிலான பதட்ட சூழ்நிலைய உருவாக்குபவர்கள் கண்கானிக்கப்படுகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
         சமூக ஊடகங்களின் மிகப்பெரிய பலம் யாதெனில் ஒருகருத்தை அல்லது செய்தியை சொற்ப நொடிகளில் பல மில்லியன் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும்.இதேபோன்றே,உண்மை பரவும் வேகத்தை காட்டிலும் பொய் பரவும் வேகம் அதிகமாகும்.இனைய ஊடகங்களின் உண்மை நிலையாதெனில் யார் வேண்டுயானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் இந்நிலையே பாரிய ஆபத்தான நிலையாக அமைவதுடன் இன அடிப்படை வாதிகள் தமது சுயலாப அரசியலை சாதகமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தடைசெய்யபடவேண்டும் என்ற நிலையில் கருத்துக்கள் காணப்பட்டாலும் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்படுத்துவதே சிறந்தது.இலங்கையில் தற்காலிக தடை சமூக ஊடகங்களிற்கு காணப்பட்ட காலகட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் facebook என்பது சிறந்த தொழில்நுட்பம் எனினும் மோசமான வன்முறைகள் இடம்பெறுவதற்குரிய களமாக இது அமையக்கூடாது.இதேவேளை,எத்திரியா,வடகொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் Facebook ற்கு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, சமூக ஊடகங்களில் ஒன்றான Facebook நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் எவ்வாறு எதிர்காலத்தில் இன மத குரோத பதிவுகளை நீக்கலாம் என்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.
      அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளூர் அதிகாரங்தேகளிற்கான தேர்தல் மற்றும் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தல்கள் கூட சமூக ஊடகங்களின் செல்வாக்கை சான்று பகர்வனவாக அமைந்துள்ளது.மேலும், கண்டி தெல்தேனியாவில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதும் VPN மற்றும் Proxy servers வாயிலாக ஒரு சிலர் சமூக ஊடக பா வனையில் ஈடுபட்டனர்.அதேசமயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ன சமூக ஊடகங்கள் கருத்துக்களை பரிமாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      மேலும்,போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன என்ற உண்மையை நீண்டகாலமாக எதிர்த்து வந்த Facebook CEO மார்க் அண்மையில் உண்மையை ஒத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அதன் விளைவாகவே, Facebook நிறுவனமானது அரசாங்கங்களுடன் இனைந்து தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க கூடிய செய்திகள் தடைசெய்யபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களினை தற்காலிகமாக இனமுறுகலை தணிக்க தடைசெய்தமை சரியானதா? என்று Twitter ல் நடாத்தப்பட்ட கருத்துகணிப்பு ஒன்றில் "yes" என்கிற பதிலே அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் விருப்பு இடமுன்னரும் குறித்த செய்தியின் உண்மை தன்மை குறித்து(fact checking)ஆழமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும்.காரணம், ஒவ்வொரு செய்திகளின் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரவல் ஒன்று உள்ளது.தனிநபர்,சமூக மற்றும் நாடுகளிற்கெதிராக வெறுப்பை உண்டாக்கும் வகையில் செய்திகளை வடிவமைக்கும் அதிகாரம் சமூக ஊடகங்கள் வாயிலாக இலகுவாக கிடைக்கின்றது.ஏதாவது ஒரு செய்தி பொய்யானது என்று உணரும் சமயத்தில் அந்த செய்திகளினை பரிமாறாமல் விடுவது புத்திசாலித்தனமானது.சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்கள் பங்கு காத்திரமானது என்று பலர் வாதிட்டாலும் உண்மையான சமூகமயமாக்கலிற்கு கிடைத்த சாபக்கேடாகவே சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்களின் பாவனை தொடர்பாக சரியான விழிப்புணர்வை பயனாளிகளுக்கு ஏற்படுத்தாதவரை சமூக ஒருமைப்பாடு முரண்பாடானதே?

இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர்)

புதன், 6 செப்டம்பர், 2017

விளையாட்டு செய்தி உருவாக்கமும் ஊடகங்களின் வகிபங்கும்!

ஊடகங்களில் தவிர்க்க முடியாத பகுதியாக விளையாட்டு இதழியல் பகுதி காணப்படுகிறது.அனைத்து வகையான வாசகர்கள் வட்டத்தையும் கவரும் பகுதியாக விளையாட்டு பகுதி காணப்படுகிறது. அனைத்து வகையான ஊடகங்களிலும் விளையாட்டு பகுதியாகவோ அல்லது பக்கமாகவோ காணப்படும். சில ஊடகங்கள் தனித்து விளையாட்டு நிகழ்ச்சிகளை மாத்திரம் கொண்டு காணப்படுகிறது. அதனை அச்சு, இலத்திரனியல் மற்றும் நவீன ஊடகங்கள் என அனைத்து வகையான ஊடகங்களிலும் அவதானிக்க முடியும்.உலகளாவிய ரீதியில் ஏராளமான விளையாட்டு நிகழ்வுகள் காணப்படுகிறது.கால்பந்து, ரக்பி,கிரிக்கெட், டெனிஸ்,கைப்பந்து ,மல்யுதம்,கரப்பந்து, கோல்ப்,சதுரங்கம்,குத்துச்சண்டை,நீச்சல் மற்றும் மெய்வன்மை போட்டிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.விளையாட்டு நிகழ்வுகள் முக்கியமானவையாக காணப்படுவதற்கு அதன் மூலமாக கிடைக்கும் நண்மைகளே காரணம் எனலாம்.அவையாவன,தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளுதல்,வெற்றி தோல்வியை சமமாக மதித்தால்,சட்ட ஒழுங்குகளை பேசுதல்,சகவீரர்களை மதித்தல்,அறிவு,திறன்,மனப்பான்மை விருத்தி,சிரேஸ்ட வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுதல்,புதிய மனிதர்கள் மற்றும் புதிய இடங்களை காணுதல், சுற்றுலா தொழிற் துறையின் வளர்ச்சி,சர்வதேச பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களினை புரிந்துகொள்ளுதல், இலக்கை தீர்மானித்து வெற்றி பெறல்,தலைமைத்துவ விருத்தி,தோல்வியினை எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை,தன்னம்பிக்கை அளித்தல் போன்ற பல்வேறு வகையான சாதகமான விஷயங்கள் விளையாட்டுக்கள் மூலமாக கிடைக்கின்றன.எனினும்,தற்போதைய சமூக ஊடகங்களின் வருகை, தொடர்பாடலை எளிமையாக்கியதுடன் குறித்த சமூக ஊடகங்களில் போட்டியை பார்க்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மிக ஆரம்ப காலத்தில் அச்சு ஊடகங்களான பத்திரிகையே போட்டி முடிவுகளை அறிவித்தது அதற்காக காத்திருக்கும் நிலை அக் காலத்தில் காணப்பட்டது. பின்னர், வானொலியில் நேரடியான வர்ணனை தமிழ்,சிங்களப் மற்றும் ஆங்கில மொழியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒலிபரப்பப்பட்டது. தற்போது தனியார் வானொலியில் அதிகரிப்பு ம் அவற்றின் முழுநேரப்பணியாக கிரிக்கெட் score சொல்வதும் பாட்டு போடுவதும் என்றாகிவிட்டது. அத்துடன், தொலைக்காட்சி கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக ஒலிபரப்பி வருகிறது. இதனூடாக பாரதிய இலாபங்களை குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன.தற்போதைய உலகமயமாக்கல் சூழல் விளையாட்டு துறையையும் விட்டு வைக்கவில்லை.இதன்காரணமாகவே,IPL,CBL,Big Bash,BPl,PPl போன்றன கிரிக்கெட்டில் ஏற்பட்ட உலமயமாக்கலின் தாக்கம் ஆகும். இவை வணிக நோக்கத்தை பிரதான ஆதாரமாக கொண்டவை. உதாரணமாக, இம்முறை இடம்பெற்ற அடுத்த IPL  இதற்கான ஒளிபரப்பு உரிமைக்காக இடம்பெற்ற ஏலத்தில் star குழுமம் வெற்றி பெற்றமை மற்றும் ஒரு போட்டிக்காக இந்திய கிரிக்கெட் சபைக்கு 54 கோடி இலாபம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோன்று,எண்மான ஊடகங்களின் வருகை இதனை மிகவும் எளிதாக கைத்தொலைபேசி ஊடக பார்த்து கொள்ள முடிகிறது.குறிப்பாக, சமூக ஊடகங்களின் வருகையை தொடந்து ரசிகர்கள் சமூக ஊடகங்களினை கருத்து மோதல் களமாக பயன்படுத்தி வருகிறார்கள். சில சமயங்களில் விளையாட்டுகுரிய உயர்ந்த விழுமியங்களினை தரகுறைவாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஏற்படும் கருத்து மோதல்கள் அருவருப்பான நிலையினை தோற்றுவிற்பதுடன் ஊடகஅறிவின் அத்தியாயத்தை உணர்த்திநிற்கின்றது.விளையாட்டு தொழிற்துறையாக மாற்றம் பெற்று இருப்பதால்,இதனூடாக அரசாங்கத்திற்கு பாரிய அன்னிய செலாவணியை பெற்றுகொள்ள முடிகிறது.சுற்றுலா தொழிற்துறை இலங்கையினை பொறுத்தத மட்டில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினால் அதிகரிக்கப்படுகின்றது.ஒவ்வொரு விளையாட்டு அணிகளும் தனக்கென தனித்தனியாக சமுக ஊடகங்களினை வைத்துள்ளது. இது தேசிய அனிகளாயினும் சரி கழக மட்ட போட்டிகள் என்றாலும் சரி சமூக ஊடகங்களினை தனித்தனியாக வைத்து இருப்பதை விசாரிக்க முடியும்.சமூக ஊடகங்களில் ஊடக அறம் இதழியல் விழுமியங்கள் போன்றவற்றை கடைப்பிடிப்பது என்பது கல்லில் நாருரிப்பதைப் போன்றதாகும். எனினும், பொதுத்தளமான சமூக ஊடகங்களில் விளையாட்டு விஷயங்கள் தொடர்பாக உரையாடும் போது,விளையாட்டு இதழியல் மற்றும் அவற்றில் குணாதிசயங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வது ஊடகங்களினை பெறுமானம் உடையதாக்குவதற்கு பொருத்தமானதாக இருக்கும்.விளையாட்டு இதழியல் என்பது விளையாட்டு நிகழ்வுகளை அறிக்கையிடுவதனை குறிக்கும்.விளையாட்டு இதழியலாளனின் தகுதிகளாக விளையாட்டு நிகழ்வில் வரலாறு,சாதனை,மைதானம், அணி விபரம், அணியின் பலம் மற்றும் பலவீனம்,நாணயசுழற்சி மற்றும் அணியினால் மேற்கொள்ளும் இராஜதந்திரம் போன்றவை விளையாட்டு இதழியலாளன் அடிப்படையில் அறிந்து இருக்க வேண்டிய விஷயமாகும்.இன்றைய காலத்தில் அதிகமாக விளம்பரம், பிரசித்தப்படுத்தல் மற்றும் மேம்பாடு போன்றன விளையாட்டு கே ஊடகங்களில் ஒதுக்கப்படுகிறது.சினிமா வுடன் சவால் விடும் வகையில் ஊடகங்களில் விளையாட்டுதொழிற்துறையின் ஆதிக்கம் உள்ளது.ஊடகங்களின் முக்கிய பங்காக விளையாட்டு இதழியலில் தகவல்கள் வழங்கும் செயற்பாடுகள் காணப்பட்டாலும், இனம்,மதம், மொழி, நிறம்,சாதி,பிரதேசம் போன்ற வேறுபாடு களைந்து ஒன்றினைப்பதாக இருக்க வேண்டும். இதனாலேயே, ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன், ஒலிம்பிக்கில் தொனிப்பொருளாகவும்"வெற்றி பெறுவதல்ல பங்கு பற்றலே"எனக் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், உலகில் எந்த மூலை முடுக்கில் போட்டி நடந்தாலும் ஊடகங்களின் ஊடாகவே பார்த்து ரசித்து அனுபவிக்க முடிகிறது.விளையாட்டுப் போட்டியில் ஏற்படும் மதவெறி, இனவெறி, பிரிவினைவாதம்,சூதாட்டம் போன்ற பிற்போக்கான விஷயங்களை ஊடகங்கள் கண்டிக்க வேண்டும்.ஊடகங்கள விளையாட்டு நிகழ்வுகளின் சாதகமான அம்சங்களான தேசிய ஒருமைப்பாடு, பொருளாதார விருத்தி,தொழில் வாய்ப்பு,நகர பிரசித்தி,முன்மாதிரி வீரர்கள், உதவும் மனப்பான்மை, பாராட்டுகள் மனப்பான்மை, நாட்டுப்பற்று, உணர்வுகளை கட்டுபடுத்தும் முகாமைத்துவம் போன்றவற்றிற்கு பலமூட்டுவதாக ஊடகங்களின் பங்களிப்பு அமைய வேண்டும்.சமாதானத்தின் குறியீடாக விளையாட்டு எடுத்து கொள்ளப்படுகிறது.19ம் நூற்றாண்டில் அச்சு ஊடகங்களின் ஆரம்ப காலப்பகுதியிலேயே விளையாட்டு இதழியல் காணப்பட்டது. பின்னர் 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பாரிய மாற்றங்களை ஊடகங்கள் எதிர்கொண்டபோது விளையாட்டு இ தழியலும் மாற்றங்களினை உள்வாங்கிக் கொண்டது.இத்தகைய விளையாட்டு இதழியல்(Sports journalism)தன்னம்பிக்கை,சுய மதிப்பீடு மற்றும் நேர்த்தியான சிந்தனைகளை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களின் வகிபங்கு அமையவேண்டும்.இ.தனஞ்சயன்.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

தீர்வு காணும் இதழியல் தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாகுமா?

உலகமயமாக்கலினை தற்காலத்தில் இவ்வளவு வலிமையாக்கியதாக ஊடகங்களே காணப்படுகிறது.சிறிய விடயங்களினை ஊதிப்பெருப்பிப்பதும் மிகப்பெரிய விடயங்களை மூடி மறைப்பதுமாக ஊடகங்கள் கானப்படுகின்றது.இது (Issues'evidences based journalism )ஆதார அடிப்படையில் அமைந்த இதழியலின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.உலகமயமாக்கல் பல்வேறு சாதகமான நல்ல விடயங்களினை தந்தாலும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் பாரதூரமானவை.மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்தே கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் சுவாரசியமாக இருக்கமாட்டாது.பிரச்சனைகளினை எவ்வாறு சவாலாக எடுத்துக் கொள்கின்றோம் என்பதிலே சாதனை தங்கியுள்ளது.பிரச்சனைகளினை சவாலாக நினைத்து தகர்ப்பவர்களையே வெற்றி அடிக்கடி விரும்பி சந்தித்து கொள்கின்றது.இந்தச் சிறு பதிவு பிரச்சனைகள் தொடர்பாகவோ உலகமயமாக்கல் தொடர்பாகவோ நுணுக்கமான சிந்திக்கபோவதில்லை.எமது ஊடகங்கள் மத்தியில் காணப்படும் செயற்கையான முறையில் மக்களை பிரச்சனைகளிற்குட்படுத்தி மக்களை பீதிகுட்படுத்தும் இதழியல் மரபினை கட்டுடைத்து தீர்வுகானும் இதழியல்  (Solutions journalism )தொடர்பாகவே  சிந்திக்க வைப்பதாகவே அமைகிறது.தற்போதைய இதழியல் பரப்பில் காலப்பொருத்தப்பாட்டிற்கு ஏற்ப ஏராளமான இதழியல் வகைகள் காணப்படுகின்றன.பொழுதுபோக்கு இதழியல்,விளையாட்டு இதழியல்,புலனாய்வு இதழியல்,அபிவிருத்தி இதழியல், முரண்பாடு உணர்திறன் மிக்க இதழியல், சுகாதார இதழியல், விவசாய இதழியல்,குடிமக்கள் இதழியல்,மஞ்சள் இதழியல்,அணர்த இதழியல்,வணிக இதழியல்,சமாதான இதழியல்,ஒலி மற்றும் ஒளிபரப்பு இதழியல்,சஞ்சிகை இதழியல்,பன்னாட்டு இதழியல் போன்றவற்றுடன் தற்போது பிரஜைகள் ஊடகவியலும் முக்கியமானதாகக் காணப்படுகிறது.அத்துடன்,தற்போது constructive journalism and mobile journalism(கட்டமைப்பு இதழியல் & நடமாடும் இதழியல்)போன்றன பிரபல பேசு பொருளாக பன்னாட்டு ஊடகவியலில் காணப்படுகின்றது. அதேபோன்று, தீர்வு கானும் இதழியல் என்ற சொல்லாடல் மேற்குலக தொழில்சார் ஊடகவியலில் 1998 இல் இருந்து விவாதிக்கப்பட்டாலும்,அதன் அவசியம் தற்போதைய நிலையில் உணரப்பட்டுளளது.தீர்வு காணும் இதழியல் என்பது மக்களிடையே பிரச்சனைகள் தொடர்பான அறிக்கையிடலினை செய்யாமல் குறிப்பிட்ட பிரச்சனைகளிற்கான நம்பகமான ஆதாரங்கள்,யார் இந்த பிரச்சனைகளிற்கான காரணம்? யாரால் இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்? எப்படி பிரச்சனைகளினை தீர்கலாம்? போன்றவற்றிற்குரிய பதில்களை முன்வைத்து மக்களிற்கு தெளிவூட்டுவதும் புதிய வகையான சிந்தனை,திறனாய்வு தளத்திலான அணுகும் ஆற்றல் போன்றவற்றை விருத்தி செய்வதாகும். குறித்த இதழியலின் இயல்பின் படி,ஊடகவியலாளர் பிரச்சனைகளினை உண்டாக்குபவராக இல்லாமல் தீர்த்து வைப்பவராக/தீர்வுகளை முன்மொழிபவராக காணப்படவேண்டும் என்று கூறுகிறது.அதேபோல்,பக்கசார்பற்ற போலி தர்கங்களைத் தவிர்த்து புதிய பாணியில் செய்திகளை கூறும் தன்மையும் காணப்படவேண்டும் .குறிப்பாக,இங்கு,பிரச்சனைகளிற்கு தீர்வு காணும் பண்பு நிறைந்தவராக ஊடகவியளாளர் காணப்படுவார்.பிரச்சனைகளை தீர்த்து வைக்க பல வழிமுறைகளினை  தனிப்பட்ட திறமை,ஆளுமை,நுண்ணறிவு, அனுபவம்,மென்திறன்,எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு என்ற   அடிப்படையில் வேறாக காணப்பட்டாலும் பொதுவாக பின்வரும் வழிமுறை அடிப்படை ஆகும்.பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளுதல், எப்படி தீர்த்து வைக்கலாம் என விளக்குதல்,தீர்வுக்களிற்கான ஆதாரங்களை காரண காரிய அடிப்படையில் விளக்குதல்,முடிவின் தாக்கத்தை விளக்குதல்,நிபுணர்களின் அறிவுரை,ஆய்வுக் கண்ணோடு அணுகி அறிக்கை தயாரித்தல்,மக்களை செயற்திறன் மிக்கதாக்குதல்,நிறைவான தகவல் மற்றும் தரவு சேகரிப்பு,நேர்த்தியான முற்போக்கு சிந்தனை போன்றன ஆகும். எமது நாட்டினை பொறுத்தவரை யுத்தம் முடிவடைந்த நிலையிலும் போர்கால இதழியலில் மாற்றம் ஏற்படவில்லை. அது சிங்கள தமிழ் ஊடகங்கள இரண்டுமே பின்ளற்றவே செய்கின்றன.இலங்கையில் மாத்திரம் அல்ல வடகொரியா மற்றும் அமெரிக்கா போர் பதட்டம் கூட ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளும் வார்த்தைக் போரே!வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இதழியலின் பண்புகள் அமையும்.தற்போதைய நிலையில் அனைவரும் ஊடகவியளாளர் என்ற நிலையை பிரஜைகள் ஊடகவியல் தோற்றுவித்து உள்ளது. இதனால், ஊடக அறம் தொடர்பான அறவே அறிவற்ற நிலையில் ஊடகங்களினை அணுகுவதால் பிரச்சனைகள் அதிகமாக காணப்படும் நிலைமையே காணப்படுகிறது.சரியான கேள்விகளை கேட்காத வரையும்,தனித்துவமான சிந்தனை அல்லாத வரையிலும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது தீர்கமான கருத்து.இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வாக தீர்வுகாணும்/தீர்வை முன்மொழியும் இதழியல் (Solutions journalism)இதழியல் காணப்படுகின்றது.இலகுவாகக் கூறினால்,தீர்வு கானும் இதழியல் நோயைப் பற்றி உரையாடுவதை விட சுகாதாரம் தொடர்பாக உரையாடுவது சிறந்தது என்று கூறுகிறது.தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாக தீர்வு காணும் இதழியல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.