அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 3 மார்ச், 2018

வாழ்வை வடிவமைப்பன ஊடகங்களே!

தற்காலத்தில் நமது வாழ்க்கையினை வடிவமைக்கும் ஒன்றாக ஊடகங்கள் விளங்குகிறது.இவ் ஊடகங்கள்(Media)சமுதாயத்தை பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.ஊடகங்கள் சமுகங்களில் பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துகிறது. எதேனும் ஒரு தகவலை கருத்தை பலரறியச் செய்வதற்கு மிகப்பெரிய அபாரமாக ஊடகங்களே காணப்படுகிறது. காலத்தின் கண்ணாடியாகக் தற்போது ஊடகங்களே திகழ்கிறது.
       ஊடகங்கள் கருத்துக்கள், யோசனைகள், திட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கான தகவல் பரிமாற்ற கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது.இதனை ஆங்கிலத்தில் "The media is an important source of information by its news segments, entertainment and allows for exchange of ideas, suggestion and comments "இந்த ஊடகங்களினை பல்வேறு வழிகளில் வகைப்படுத்தினாலும் பிரதானமாக மூன்று வகைகளில் அதாவது; Broadcast media, Print media and Web media என்று வகைப்படுத்துவார்கள்.
        தற்போதைய காலத்தில் இனையங்களின் வரவு தகவலை பல்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தனி நபர்கள் தமக்கென தனியான ஊடகங்களினை பேனக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.மேலும், 20ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இனையத்தைக் கொள்ளலாம்.
    மனிதனுக்குள்ள தகவல் பசியை(Information hunger) போக்கும் வண்ணம் இனைய ஊடகங்களின் வரவு அமைந்துள்ளது.குறித்த ஊடகங்களில் வரும் தகவல்களை மக்கள் அப்படியே நம்புகின்றனர்.ஊடகங்கள் நடுநிலையானவை என்ற முற்கற்பித எண்ணங்கள் மக்களிடம் உண்டு. எனினும், ஊடகங்கள் அதிகார மட்டத்திற்கு உட்பட்டு தம்மை தவறாக பிரதிநிதித்துவம்(Misrepresentation)செய்யக்கூடியவை.உதாரணமாக,தற்போது சிரியாவில் இடம்பெறும் யுத்தம் கூட அமெரிக்க தன் நலன் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கியே செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகிறது.இதேபோன்றே,2003 ம் ஆண்டில் ஈராக் மீதான தனது அராஜகத்தை நியாயப்படுத்தியது.அமெரிக்காவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக ஊடகங்களினை தனக்குள் வைத்துக் கொள்ளும் ஆற்றலை குறிப்பிடலாம்.
          இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஊடக சுதந்திரம்என்பது மட்டுப்படுத்தப்பட்டது.அரச அடக்குமுறை மற்றும் ஊடக நிறுவனத்தில் உள்ளே காணப்படும் சு தந்திரமற்ற ஊடகங்களின் நடுநிலையான தன்மையினை சவாலுக்குட்படுத்தியுள்ளது.ஊடகங்கள் தனித்து செய்தியை வழங்குதல் மாத்திரமல்லாது மகிழ்சிபடுத்தல்,விழிப்புணர்வைஏற்படுத்தவும் வேண்டும்.
       உள்ளூர், சர்வதேச, வணிக மற்றும் விளையாட்டு செய்திகள் நாளந்த மனித வாழ்வில் அடிப்படை தேவைகளுள் ஒன்றாகி விட்டது.இவ்வாறான ஊடகங்கள் தனது உள்ளடக்கங்களில் உண்மை,நடுநிலை,பக்கம்சாராமை போன்ற ஊடக விழுமியங்களினை பேனும்போதே நல்ல முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆக்கம்: இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவில் உதவித்தயாரிப்பாளர்)