அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வெள்ளி, 24 ஜூலை, 2020

மாற்றமுறும் அமெரிக்க சீனா அதிகார உறவுகள்!

    மற்றுமொருவலைப்பூபதிவில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இன்றைய வலைப்பூ பதிவானது அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவுகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக சிந்திப்பதாகேவ அமைய இருக்கின்றது.

உலகளாவிய இருபெரும் வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் தமக்கு  இடையிலான முரண்பாடுகள் வலுப் பெற்றதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தமது  நாடுகளில் உள்ள தூதரகங்களை  மூடியுள்ளன.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ சீனாவானது தமது நாட்டின் புலமைச் சொத்துக்களை மாத்திரம் அல்லாது ஐரோப்பிய நாடுகளின் புலமை சொத்துக்களினையும்  திருடுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார் இந்த  நிலையை அடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது அதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகமானது கொரோனா வைரஸ் பரவல் உலகளாவிய ரீதியில் வியாபித்திருப்பதற்கு  சீனா தான் காரணம் என கூறியதுடன் ஹொங் ஹொங்கில் சீனாவினால் புதிதாக அமுல்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக எதிர்த்து இருந்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் 1972 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் செய்ததை  தொடர்ந்து அமெரிக்க சீன உணவுகள் வளர்ச்சி அடைந்து இருந்தன.

எனினும் சீனாவின் உடைய வளர்ச்சியினை அமெரிக்காவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதன் காரணமாக சீனாவின் உதவியை ஏதோ ஒரு வகையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சீனா மீது பல்வேறு வகையான அழுத்தங்களை பிரயோகித்து வந்திருந்தது இதற்கு சீனாவுக்கு எதிராக பல நாடுகளை அணிதிரட்டி சீன எதிர்ப்பு கொள்கையை முன்வைத்து அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

சீனாவானது தன்னுடைய பொருளாதார வளர்ச்சி மூலமாக பல்வேறு விதமான நெருக்கடிகளை அமெரிக்காவிற்கு கொடுத்து வந்தது எனினும் அமெரிக்கா இராணுவ ரீதியாக தன்னுடைய ஆதிக்கத்தினை  மேலும் மேலும் வவலுப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. சீனாவின் பொருளாதார ரீதியான  வளர்ச்சியானது பிரமிக்கத் தக்க முறையில் இருந்தாலும் அமெரிக்காவின் இராணுவ வளர்ச்சி சீனாவை விட பன்மடங்கு அதிகமானது.

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போரானது இதுவரை காலமும் நிலவி வந்தது எனினும் கடந்த  சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த போர்  முடிவுக்கு வந்தது எனினும் ஊடக போர் தொடர்ச்சியாக இருந்து வந்தது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமது நாடுகளில் காணப்படுகின்ற ஊடகங்களிற்கு பல்வேறு வகையான தடைகளை ஏற்படுத்தி இருந்தன.  அமெரிக்க ஊடகங்களுக்கு சீனாவில் தடையும் சீனாவில் உள்ள  ஊடகங்களுக்கு அமெரிக்காவில் தடையும் காணப்பட்டது.

இவ்வாறாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ரீதியிலான உறவு நிலையானது தொடர்ச்சியாக மோதல்கள்  நிறைந்ததாக  இருந்தது.  இந்நிலையின் தொடர்ச்சியாகவே அமெரிக்காவானது தன்னுடைய நாட்டில் காணப்படுகின்ற சீன தூதரகத்தை மூடுமாறு கட்டளை பிறப்பித்தது.
இதற்குப் பதிலடி வழங்கும் முகமாகவே சீனாவானது தன்னுடைய நாட்டின் செங்டு பிரதேசத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தினை மூடுமாறு  கட்டளை பிறப்பித்துள்ளது.  இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை கருத்து வெளியிடுகையில், அமெரிக்காவின் செயற்பாடுகள் நியாயபூர்வமான சர்வதேச சட்டத்துக்கு முரணாக காணப்படுவதாகவும் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிலையிலேயே குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எது எப்படி இருப்பினும் சர்வதேச அரசியல் அரங்கில் குறித்த இரு நாடுகளுக்கு இடையிலான மோதல்கள்  பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.  சீனா மற்றும் இந்தியா இடையிலான மோதல் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான மோதல் ஆகியவை  தற்போதைய சர்வதேச  அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் நவம்பர் மாதம் இடம்பெறுகின்ற அமெரிக்க தேர்தல் குறித்த சீனா அமெரிக்கா இடையிலான சர்வதேச உறவுகள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது எனவே இந்த தீர்மானமானது வரும் சில நாட்களுக்குள் விட்டு கொடுப்புக்குள் வரும் என ஊகிக்கலாம்.

இ.தனஞ்சயன்