ஒவ்வொரு வருடமும் மார்ச் 27ம் திகதி உலக நாடக அரங்க தினமாக அறிவிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச அரங்க பயிலகம் என்ற அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து ஆற்றுகை கலைகளில் ஒன்றான நாடகத்துறையில் ஈடுபடுவோரின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கும் முகமாக 1961ம் ஆண்டில் இருந்து இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகின்றது.
முத்தமிழில் ஒன்றாக நாடகக் கலையும் திகழ்கிறது. தமிழின் தேன்சுவையை எளிய பாமர மக்களிடமும் எளிமையாக எடுத்துச் சென்ற பெருமை நாடகக் கலைக்கு உண்டு. தொழில்நுட்ப சாதனங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் புதிய ஊடகங்களின் வருகைக்கு முன்னர் மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்ற கலையாக குறித்த நாடகக்கலை விளங்கியது. ஐரோப்பிய் நாடகங்களில் கிரேக்கத்திற்கு தனிசிறப்புண்டு. இன்பியல் மற்றும் துன்பியல் நாடகங்கள் கிரேக்க மரபில் இருந்து தோற்றம் பெற்றது. அதைத் தொடர்ந்து உரோம, எலிசபெத் கால நாடகங்கள் இன்றளவும் காலங்கடந்து மக்களிடம் செல்வாக்கு பெறுகின்றன.
எலிசபெத் கால சேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றளவும் இலக்கியத் தரம் வாய்ந்ததாக காணப்படுகிறது. மேலும் யதார்த்தவாதம், மனோரதிய நாடகங்கள், காவிய முறைமை, குறியீட்டியல் நாடகங்கள், நவீன நாடகங்களாக கொள்ளப்படுகின்றன. நாடக அரங்கு என்ற கருத்தியல் பொதுவாக வரலாற்று காலங்களையும், அந்நாட்டு நிலைமைகளையும் பொருத்து அரங்க முறைகளில் வேறுபாடு உண்டு. குறிப்பிட்ட நாடுகளில் அவ்வவ் சூழல்களுக்கு ஏற்ப அமைந்த அரங்க முறைகளையும், நிகழ்வு முறைகளையும் காணக்கூடியதாக உள்ளது.
பலகால அரங்கம் கிரேக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. நடிப்பு ரோம் அரங்குகளில் சிறப்பாக காணப்பட்டது. எகிப்து நாடக அரங்கில் மக்கள் ஒன்றுகூடும் பழங்கால கதைகளுடன் கூடிய கூத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கிறிஸ்தவ மத குருமார்களின் ஆதரவால் வேதத்தில் உள்ள குட்டிக்கதைகள் காட்சிகளாக்கப்பட்டு இங்கிலாந்தில் இடைக்கால அரங்க முறைமை காணப்பட்டது.
எமது நாட்டின் தமிழ் நாடக வரலாற்றில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களில் குறித்த பிரதேச வழக்க முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு நாடகங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் 90களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகமயமாக்கல் காரணமாக நவீன ஊடக ஆதிக்கத்தினால் நாடக ஆற்றுகையானது அங்கொன்றும், இங்கொன்றுமாக அருகிச் சென்றது. எனினும் நாடக அபிமானிகளால் நாடக ஆற்றுகையானது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த நாடக அரங்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக எமது நாட்டின் கலாசார அமைச்சானது பல்வேறு வகையான போட்டி நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி நாடக கலைஞர்களை ஊக்குவித்து வருகின்றது.
எமது நாட்டின் தமிழ் நாடக வரலாற்றில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களில் குறித்த பிரதேச வழக்க முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு நாடகங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் 90களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகமயமாக்கல் காரணமாக நவீன ஊடக ஆதிக்கத்தினால் நாடக ஆற்றுகையானது அங்கொன்றும், இங்கொன்றுமாக அருகிச் சென்றது. எனினும் நாடக அபிமானிகளால் நாடக ஆற்றுகையானது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த நாடக அரங்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக எமது நாட்டின் கலாசார அமைச்சானது பல்வேறு வகையான போட்டி நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி நாடக கலைஞர்களை ஊக்குவித்து வருகின்றது.
எமது நாட்டில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு, தெரு வழி அரங்கு, சிகிச்சை முறை அரங்கு மற்றும் சிறுவர் நாடகங்கள் மக்களிடம் அதிக கவனத்தைப் பெற்றிருந்தன. எமது நாட்டில் தமிழ் நாடகத்துறைக்கு பங்களிப்பு செய்த முன்னோடிகளாக பேராசிரியர் வித்யானந்தன், பேராசிரியர் கணபதிபிள்ளை, குழந்தை ம.சண்முகலிங்கம், பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் சிவதம்பி, கலாநிதி சிதம்பரநாதன், கலையரசு சொர்ணலிங்கம், வி.வி.வைரமுத்து, பிரான்சிஸ் ஜனல், தாசீசியஸ் போன்றோரை குறிப்பிடமுடியும்.
இதேவேளை தொடர்ச்சியாக பல நாடக ஆர்வலர்கள் இன்றும் நாடக அரங்க செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் கணேசராஜா, சத்தியசீலன், அயூரன், பிரதீப், தர்மலிங்கம், காளிதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அரங்கப்பணிகளை தற்பொழுதும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மத்தியிலும் நாடக ஆர்வலர்கள் தமது நாடக அரங்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான அரங்க செயற்பாடுகள் கொரோனா பேரிடர் மத்தியில் மிகுந்த மன மகிழ்ச்சியை தருவதாக நாடக நெறியாளர் புண்ணியமூர்த்தி கணேசராஜா தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் பாடசாலை மட்ட பரிசளிப்பு விழா மற்றும் நாடகப் போட்டிகள் போன்றவற்றை தமது ஆத்ம திருப்திக்காக சில கலைஞர்கள் தொடர்ந்தும் தமது நாடக படைப்புக்களை நெறிப்படுத்தி வருகின்றனர்.
நாடகக் கலையென்பது அனைத்து கலைகளையும் உள்ளடக்கி தனித்து நிற்பதாகும். ஏனைய கலைகள் மூலம் கற்பிக்கப்படுவதை காட்டிலும் நாடகக் கலை மூலம் கற்பிக்கப்படுவது சிறந்த பயனளிக்கக்கூடியது. வளரும் இளம் தலைமுறையினக்கு வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்தை கற்பிக்க ஏற்ற சாதனம் நாடகக்கலையாகும். கலாசாரம், பண்பாடு ஆகியவற்றினை வெளிப்படுத்தவும், நெறிப்படுத்தவும் நாடகக்கலை வழிகோலாக அமைகிறது. நல்ல மனப்பக்குவம் கொண்ட பார்வையாளர்களை நாடகக்கலை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகளை சீர்படுத்தி வாழத்தக்க சிறந்த மனிதனை வளர்க்க நாடகக்கலை பெரிதும் துணை புரிகிறது.
நாடக இலக்கணங்களை கூறும் பெருமை பெற்ற நாடகக்கலை இலக்கண நூலான நாடகவியலை மேடை நாடகத்திற்குரிய இலக்கணங்களை கூறும் நடிப்பியல்பு பகுதி மெய்பாடு, விறல், ஒற்றுமை, அபிநயம், நிலை, நாடகசாலை என்பன பற்றி இலக்கணம் வகுத்துள்ளனர். இந்நூலின் முடிவில் “பழைய கழிதலும், புதியன புகுதலும் வலுவல காலவலகியனானே” என்ற நூற்பாவையின் உட்பொருளாகவே நாடகக்கலையின் தற்போதைய நிலை காணப்படுகின்றது.
இதேவேளை தொடர்ச்சியாக பல நாடக ஆர்வலர்கள் இன்றும் நாடக அரங்க செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் கணேசராஜா, சத்தியசீலன், அயூரன், பிரதீப், தர்மலிங்கம், காளிதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அரங்கப்பணிகளை தற்பொழுதும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மத்தியிலும் நாடக ஆர்வலர்கள் தமது நாடக அரங்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான அரங்க செயற்பாடுகள் கொரோனா பேரிடர் மத்தியில் மிகுந்த மன மகிழ்ச்சியை தருவதாக நாடக நெறியாளர் புண்ணியமூர்த்தி கணேசராஜா தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் பாடசாலை மட்ட பரிசளிப்பு விழா மற்றும் நாடகப் போட்டிகள் போன்றவற்றை தமது ஆத்ம திருப்திக்காக சில கலைஞர்கள் தொடர்ந்தும் தமது நாடக படைப்புக்களை நெறிப்படுத்தி வருகின்றனர்.
நாடகக் கலையென்பது அனைத்து கலைகளையும் உள்ளடக்கி தனித்து நிற்பதாகும். ஏனைய கலைகள் மூலம் கற்பிக்கப்படுவதை காட்டிலும் நாடகக் கலை மூலம் கற்பிக்கப்படுவது சிறந்த பயனளிக்கக்கூடியது. வளரும் இளம் தலைமுறையினக்கு வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்தை கற்பிக்க ஏற்ற சாதனம் நாடகக்கலையாகும். கலாசாரம், பண்பாடு ஆகியவற்றினை வெளிப்படுத்தவும், நெறிப்படுத்தவும் நாடகக்கலை வழிகோலாக அமைகிறது. நல்ல மனப்பக்குவம் கொண்ட பார்வையாளர்களை நாடகக்கலை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகளை சீர்படுத்தி வாழத்தக்க சிறந்த மனிதனை வளர்க்க நாடகக்கலை பெரிதும் துணை புரிகிறது.
நாடக இலக்கணங்களை கூறும் பெருமை பெற்ற நாடகக்கலை இலக்கண நூலான நாடகவியலை மேடை நாடகத்திற்குரிய இலக்கணங்களை கூறும் நடிப்பியல்பு பகுதி மெய்பாடு, விறல், ஒற்றுமை, அபிநயம், நிலை, நாடகசாலை என்பன பற்றி இலக்கணம் வகுத்துள்ளனர். இந்நூலின் முடிவில் “பழைய கழிதலும், புதியன புகுதலும் வலுவல காலவலகியனானே” என்ற நூற்பாவையின் உட்பொருளாகவே நாடகக்கலையின் தற்போதைய நிலை காணப்படுகின்றது.
நாடகத்துறையில் மறு உயிர்ப்பை உண்டு பண்ணுவதற்காக நாடக அபிமானிகள் ஒன்றிணைந்து தமக்கென அரங்க இயக்கங்களை உருவாக்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் முயற்சி வெற்றி பெற இன்றைய உலக நாடக அரங்க நாளில் வாழ்த்துக்கிறோம்.
இ.தனஞ்சயன்