அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 31 ஆகஸ்ட், 2019

அமைதியான முறையில் முடிவுக்கு வருமா ஹாங்காங் போராட்டம்?


       ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தை தலைமை தாங்கிய ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டு இருந்தார். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதா முழுமையாக பின்வாங்கப்பட வேண்டும்.

    நடுநிலை அமைப்பு ஒன்று போராட்டக்கார்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடத்த மோதலை விசாரிக்கவும், போராட்டத்தை கலவரம் என்று கூறியதை திரும்பப் பெறவும், போலிஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும். தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது, போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்தை தலைமை தாங்கிய, ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆர்வலர் ஜோஷ்வா வாங்  கைது செய்யப்பட்டு இருந்தார்.

     இதுகுறித்து, தமது ருவிட்டர்  பக்கத்தில் ஜோஷ்வாவின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ, நமது பொதுச்செயலாளர் ஜோஷ்வா வாங் கடுமையான முறையில் கைது செய்யப்பட்டு இருந்தார்.  தெற்கு ஹரிசான் பகுதிக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது தனியார் மினி வேன் ஒன்றில் அவர் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடந்ததையடுத்து நமது வழக்கறிஞர்கள், இவ்வழக்கு குறித்து ஆலோசித்து வருகின்றனர், என பதிவிடப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களின் வழிகாட்டியாகவும், தலைமை தாங்கியவருமான ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளது, அவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    சீன இராணுவத்தின்  படைப்பிரிவுகள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்தது. இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம்  ஆகிய முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

      ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

     இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதையடுத்து சீன இராணுவத்தின் படைப்பிரிவுகளை சேர்ந்த சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்கள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்து நின்றனர்.

     இதற்கிடையில் ஹாங்காங் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கிய சமூக ஆர்வலர் ஜோஷ்வா வாங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேரை ஹாங்காங் போலீசார் நேற்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களது கைது சம்பவம் போராட்டக்காரர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

     இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜோஷ்வா வாங் உள்பட மூவரும் ஹாங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில் இன்று ( சனிக்கிழமை) மாபெரும் போராட்டம் நடத்த போராட்டக்குழு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

   இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது வன்முறையை பயன்படுத்தினால் அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹாங்காங் விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு
கொண்டு வருவார் என நம்புகிறேன்” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .



புதன், 28 ஆகஸ்ட், 2019

சுவாச காற்றில் 20 சதவீதத்தை வழங்கும், பூமியின் நுரையீரல் அமேசன்!


   உலகளவில் மிகவும் பிரபலமான காடு என்றால் அது அமேசன் காடுகள்தான். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், அரிய வகை விலங்குகள் ஆகியன உள்ளன.

இந்த காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா  உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பு இருந்தாலும் காட்டு தீ பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.

தீயணைப்பு வீரர்கள்
இந்த கடந்த சில நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. அடர்ந்த காடு என்பதால் உலகின் மிகப் பெரிய காடு என்பதாலும் இங்கு தீயை அணைப்பது என்பது பிரேசில் நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் தீயை அணைக்க 80 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரேசில் மக்கள்
அமேசன் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகை செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதை வளிமண்டல் அகசிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder (AIRS)) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.

கடந்தக் ஒகஸ்ட் 8 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22 ஆம் திகதி வரை 18ஆயிரம் அடி உயரத்தில் கார்பன் மோனாக்சைடு எந்த அளவுக்கு அடர்த்தியாக கலந்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாக நாளாக கார்பன் மோனாக்சைடு கலந்துள்ள மேகங்கள் அமேசான் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கிறது. மேலும் இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் அது பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்பன் மோனாக்சைடு
நாசா வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை நிறத்தில் காணப்படுவது கார்பன் மோனாக்சைடின் அடர்த்தியாகும். ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோனாக்சைடு நீண்ட தூரங்களுக்கு சென்றுக் கொண்டே இருக்கும். கார்பன் மோனாக்சைடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

பெரும் ஆபத்து
காற்றை மாசுப்படுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவநிலை மாற்றத்தையும் பாதிக்கும் என்பதால் நாசாவின் இந்த தகவல்கள் அச்சுறுத்தும் அளவில் உள்ளது. இந்த வாயுவை லேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். இதே அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது இறக்கும் நிலைக்கோ செல்லும் வாய்ப்புள்ளது. மேலும் இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

வரலாறு காணாத காட்டுத்தீ பரவி வருகிறது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி, புவி வெப்பமாவதை தடுக்க அமேசான் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என உலக அளவில் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த போதுமான நிதியை ஒதுக்கும் அளவுக்கு பிரேசில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை. இதனால், உலக நாடுகளின் உதவிக்கு கையேந்தி நிற்கிறது.

இந்நிலையில், அமேசன் காடுகளில் தீயை அணைத்து வனப்பகுதியை பாதுகாக்க ரூபாா.35 கோடியை நிதி திரட்டித் தருவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கூறி இருக்கிறார். ‘டைட்டானிக்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான டிகாப்ரியோ ‘எர்த் அலையன்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், அமேசான் காடுகளை பாதுகாக்க முதற்கட்டமாக ரூ.35 கோடி நிதியை திரட்டி தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட டிகாப்ரியோ, தனது ரரசிகர்கள் அனைவரும் நிதி உதவி செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். அமேசன் காடுகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான தொடக்கமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இதற்கிடையே, ஜி7 மாநாட்டில் அமேசான் காடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஜி-7 அமைப்பு சார்பில் ரூ.150 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.

அமேசனில் காட்டுத் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்க தயார் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ தெரிவித்துள்ளார். அமேசான் காட்டில் 60 சதவீதம் பிரேசில் நாட்டில் உள்ளது. மீதிப்பகுதிகள்  பொலிவியா, கொலம்பியா, ஈக்வெடார், பிரெஞ்சு கயானா, கயானா, பெரு, சுரினேம் மற்றும் வெனிசுலா நாடுகளில் உள்ளன. பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத் தீ  பற்றி எரிந்து வருகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ஆக்ஜிசனில் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் அமேசான் காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, ஜி7 அமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ்  நகரில் நேற்று முன்தினம் முடிந்தது. ஜி7 கூட்டத்தின் இறுதிநாளான நேற்று முன்தினம் அமேசான் காட்டுத் தீ பற்றி விவாதிக்கப்பட்டது. இது உலகத்தின் பசுமை நுரையீரல் மீதான தாக்குதல் என ஐரோப்பிய தலைவர்கள் கூறினர்.

இந்த  கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் இமாணுவேல் மேக்ரான், ‘‘அமேசன் காட்டுத் தீயால்  பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ உலக தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அமேசான் காடு நம் கண்முன் பயங்கரமாக பற்றி எரிவதை கடந்த ஒரு வாரமாக பார்க்கிறோம். அமேசான் காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க இங்கிலாந்து 10 மில்லியன்  பவுண்ட் பணத்தை (ரூபா 88கோடி) விரைவில் வழங்கும்’’ என்றார். இறுதியாக, அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி  வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது. ஆனால், ஜி 7 நாடுகளின் உதவியை  பிரேசில் அதிபர் சயீர் போல்சோனரோ நிராகரித்து  விட்டார். இது தொடர்பாக அவரது அரசின் முதன்மை செயலர் ஓனிக்ஸ் லோரன்ஜோனி கூறிய போது, ``இந்த உதவிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இந்த நிதியைக் கொண்டு ஐரோப்பிய  நாடுகளில் காடுகளை வளர்த்து கொள்ளுங்கள்.  பிரான்சையும் அதன் காலனி நாடுகளையும் கவனித்து கொள்ளுங்கள்,’’ என்றார்.

இந்நிலையில், இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ, ஜி7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள நிதியை தாங்கள் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிதியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக  சில நிபந்தனைகள் இருப்பதாக அவர் கூறினார். முதலாவதாக, தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக பிரான்ஸ் அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னை பொய்யர் என்றும், பின்னர் அமேசானில்  தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது என்றும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தக் கருத்துக்களை திரும்பப் பெற்றபிறகே, பிரான்ஸுடன் பேச முடியும் என்று அவர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசன் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.


இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

எனவே அமேசன் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி நேற்று முன்தினம் அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசன் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு ராணுவ வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

எனவே அமேசன் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசன் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசன் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு இராணுவ  வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-7 மாநாடு நடைபெறும் முன்பு  நடைபெறப் போகின்ற  பையாரிட்ஸ் நகரில் 9000-க்கும் அதிகமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

“குல்லர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திரதின விருது ராய்ட்டர் செய்தியாளர்கள் வசம்!


       பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பது பற்றி அரசுக்கு உணர்த்தும் விதமாக மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சட்ட விதி 19ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியது.

மிகுந்த ஆபத்தான  காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு “யுனெஸ்கோ’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர்.

விருதுக்கு போட்டியிடுவோரின் பட்டியலை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு அரசுகள், பட்டியலை அனுப்பும். அதில் இருந்து, விருதுக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இவ்விருது, “குல்லர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaz) என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. “எல் எஸ்பெக்டேட்டர்" என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை “யுனெஸ்கோ" ஆராய்கிறது. “நல்ல ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான செய்தி சேகரிப்பு, போருக்கு பிந்தைய வாழ்க்கை போன்றவற்றை தலைப்பாகக் கொண்டு, “யுனெஸ்கோ" விவாதம் நடத்துகிறது. பத்திரிகை சுதந்திரம் என்பதன் அளவுகோல், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

அந்த வகையில், இம்முறை இவ்விருது ராய்ட்டர்ஸ் மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி, அந்த நாட்டைச் சேர்ந்த ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும்  கியா சோ ஊ  ஆகிய இருவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மார் அரசின் இரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி, அந்த நாட்டைச் சேர்ந்த 2 செய்தியாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து செய்திகளை அளித்து வந்த அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மியான்மரில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும் கியா சோ ஊ  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மியான்மரின் இரகசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு, சர்வதேச அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுப்பதற்காக இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அந்த இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தநிலையில், இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் "யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ இசாசா (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திர விருது  ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும் கியா சோ ஊ  ஆகிய இருவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகத்தின் அடிநாதமாக அமைவது சுயாதீனமான ஊடகத் துறையே ஆகும். ஊடகங்களின் குரல் மக்களின் குரலிற்கு சமமானது. விருது பெற்ற ஊடகவியலாளர்கள் இன்னமும் சிறையில் இருக்கும் அதேவேளை இரு ஊடகவியலாளர்களும் விரைவில் விடுவிக்கபடவேன்டும் என்பதே ஜனநாயக விரும்பிகளின் சிந்தனையாகும்.


ஓர் ஆண்டுக்கும் மேலான வர்த்தகப்போர் மேலும் நீடிக்குமா?

 
      அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு  சீனா கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும்பதிலடியாக சீனப் பொருட்கள் மீது 5 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் வர்த்தக சலுகைகளை சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனுபவித்து வருவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அந்நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வரு‌கிறது.

இதனிடையே, கடந்த வருடம்  செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததற்கு பழிவாங்கும் வகையில், சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா, நிலக்கடலை உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரியை சீனா அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது எதிர்வரும்  ஒக்ரோபர்  1ம் தேதி முதல், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன உற்பத்திப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டிருக்கும் 25 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், செப்ரம்பர்  1ம் தேதி முதல் 10 சதவீதமாக விதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் 17.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நேர்மையான, நியாயமான வர்த்தகம் நடைபெற நியாயமற்ற இந்த வர்த்தக உறவை சரிசெய்ய  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனா வேண்டுமென்றே, அரசியல் உள்நோக்கத்துடன் அமெரிக்காவின் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன.

 அண்மையில், 35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 5 சதவீத வரி விதித்தது. அதற்கு பதிலடியாக 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் 5 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.

இந்த வர்த்தகப்போர் காரணமாக சீனா பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பண மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பீஜிங்கில் ‘ஸ்மார்ட் சீனா’ (Smart China) சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் லியூ ஹீ, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “புதிய தொழில்நுட்ப துறையில் வர்த்தக பாதுகாப்புவாதத்தையும், முற்றுகையையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. உற்பத்திச் சங்கிலிகளின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள Trade war (வர்த்தகப்போர்) பிரச்சனையை ஒத்துழைப்பு மூலம் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வர்த்தகப் போரின் விரிவாக்கத்தை ஏற்கமுடியாது. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.

இதேவேளை, அமெரிக்கா,அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரிவிதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.

 இந்த நிலையில் அங்கு பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூற முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார்.

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” எனவும் கூறினார்.

இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் நடத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்  சீனாவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளன. இதனால் இவ்விவகாரத்தில் சீனா அமெரிக்காவுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்த நான் தயாராக இல்லை” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலக பொருளாதார வல்லரசுநாடுகள் தமக்கிடையே மோதிக் கொள்வது உலகின் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்திலும் ஏதேனும் ஒரு எதிர்மறைத் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதே நிதர்சனம்.






திங்கள், 26 ஆகஸ்ட், 2019

76 வருடங்களின் பின்னர் நிறைவேறிய புதிய தலைநகர் திட்டம்!


       இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவுகள் குறைவாக உள்ள கிழக்கு கலிமன்டான் மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவு புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ தலைநகராக இருந்த  ஜகார்த்தாவில் மட்டும் தற்போது மூன்று கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக அளவில் அங்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாலும், கடலில் அதிகம் குப்பை கொட்டப்படுவதாலும், வெப்பநிலை மாற்றத்தாலும் இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.  ஆட்சி, வணிகம், நிதி, வர்த்தகம்  போன்றவற்றை நிர்வகிப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது. மேலும் ஜகார்த்தா கடலில் மூழ்கி வரும் நகரங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த நடவடிக்கைக்கான மசோதாவை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லும். இந்த திட்டத்திற்கு சுமார் 466 டிரில்லியன் ரூபியா (33 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

ஜகார்த்தா நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகமாக ஏற்படும் இடமாக உள்ளது. 2050 ம் ஆண்டிற்குள் ஜகார்த்தா நகரின் மூன்றில் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த திட்டம் 1943ம் வருடத்தில் இருந்தே போடப்பட்டு வந்துஇருக்கிறது. ஜகர்தாவை மாற்ற வேண்டும் என்று இத்தனை வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதுதான் இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜோகோ விடோடா அனுமதி அளித்து இருக்கிறார். 76 வருடங்களின் பின்னர் இந்தோனேசியாவின் புதிய தலைநகர் திட்டம் நிறைவேறியுள்ளது.




தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.