இலத்திரனியல் ஊடகங்களின் தற்கால எழுச்சி மக்களின் அகங்களை ஊடுருவி மதிமயக்கச் செய்து ஊடக நுகர்வோரினை செயலற்றவர்களாக்குவதே ஆகும். இதற்கான ஆதாரங்கள் ஆக அண்மையில் விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Big boss மற்றும் விவேகம் திரைப்பட வெளியீட்டுக்காக நம்மவர்கள் செய்த விளம்பரம் மற்றும் மெர்சல் இசை வெளியீடு விழா போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய ஊடகங்கள் பார்வையாளர்களின் நிலைமையினை நன்கு அறிந்து தமது நிகழ்ச்சியை திட்டமிட்டு தமது வணிக இலக்கை அடைகிறது.தொலைக்காட்சி மற்றும் சினிமா இன்று பாரிய ஊடுருவலை மக்களின் மனதில் ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில், திரைப்பட ரசனை என்ற எண்னகருவானது யாதெனில் திரைப்படம் ஒன்றை கோட்பாடு ரீதியில் அணுகுதல் என்ற ரசனை முன்மாதிரியானது.திரைப்படத்தை பார்த்தல்,திரைப்படத்தை விளங்கிகொள்ளுதல்,கலை,பண்பாடு, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் பிரச்சாரமாக திரைப்படம் காணப்படுகின்றது.சினிமாவை ரசிக்கும் போது,சினிமா மொழியான frame,shot,scene,transition, sequence and camera movement & angles,sound போன்றவற்றை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.அத்துடன் கோட்பாட்டு ரீதியான திரைப்பட விமர்சனம் மற்றும் திறனாய்வு புதிய திரைப்பட அனுபவம் மற்றும் ரசனையை ஏற்படுத்தும்.பெரும்பாலான நம்மில் பலர் பொழுதுபோக்கு மற்றும் மன ஆறுதல் நோக்கி திரைப்படம் மற்றும் ஏனைய ஊடகங்களினை அனுகுவதால் ஊடகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலை.சினிமாவின் ஆதிக்கம் இன்று அனைத்து ஊடகங்களினையும் ஆக்கிரமித்துவிட்டது. இது தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாத. வாழ்க்கையில் ஒன்றோடொன்று கலந்துவிட்டது.பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் என எங்கும் சினிமாவின் செல்வாக்கு தான்.இதில் அரசியலில் வேறு.சினிமாவினை பார்க்க வேண்டாம். ரசிக்க வேண்டாம். என்று கூறுவது பொது அறிவுக்கு விரோதமானது. ஒரு சினிமாவினை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதே சாதகமான முற்போக்கான சிந்தனை. கோட்பாட்டு ரீதியான ரசனை,தொழில் நுட்பம் சார்ந்த ரசனை, படைபாளிகள் சார்ந்த ரசனை, குறியீடு சார்ந்த ரசனை என வேறுபடும். ரசனை என்பது வயது,இனம், பால்,பண்பாடு, அறிவு, மனப்பான்மை, அனுபவம் மற்றும் தனிநபர் வேற்றுமை என்ற தன்மையில் வேறுபடும்.சினிமாவின் மூலமாக பல்வேறு நல்ல நேர்த்தியான விஷயங்கள் கூறபட்டாலும்,அதனை உய்தறியும் தன்மை கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை ஊடகவே சாத்தியமாகும்.அந்த வகையில் சினிமாவிற்கான கற்கை நெறியில் பல கோட்பாடுகள் காணபட்டாலும் முக்கிய மான கோட்பாடாக படைப்பாளி கோட்பாடு(Auteur theory)காணப்படுகிறது.படைப்பாளி கோட்பாடு என்பது இயக்குனரின் சுயாதீன சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு ஆகும். இயக்குனர் பார்வையாளனின் கலாரசனையே முன்வைத்து படைப்பை உருவாக்குகின்றார்.Andrew Brazin என்பவர் படைப்பாளி என்பவர் தனது சிந்தனை படைப்பினை தனது அகச்சூழலிற்கு ஏற்ப உருவாக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.படைப்பாளிகளின் தன்மையை பொறுத்து சினிமாவின் நாயகத்தன்மை வேறுபட்ட தன்மையினை கொண்டு இருப்பதை காணலாம். பாரதிராஜா, பாலச்சந்தர், முத்துராமன், ஏ.பி.நாகராஜன், மணிரத்னம், மணிவண்ணன், ரவிக்குமார்,பாலா,அமீர், முருகதாஸ், ஷங்கர் போன்றோரின் திரைபடங்கள் ஒன்றோடொன்று ஒப்பிட முடியாது.மாறாக ஒப்பிடும் போது அது ஒப்புவமை போலியாவே அமையும்.சமூகத்தில் உடனடியாக தாக்கத்தை உண்டு பண்னும் ஊடகமாக சினிமாவே காணப்படுகிறது. சினிமாவில் பேசும் வசனம், உடலுக்கும் ஆடைகள், புதிய செல்நெறிகள் என்பன மிக இலகுவாக சமூகத்துடன் ஒட்டி கொள்கின்றது இதனை ஊடக கோட்பாடான அறுவடை கோட்பாட்டுடன் ஒப்பிட்டு சிந்திக்க முடியும். இதேவேளை,சினிமா நாயகர்கள் சினிமாப் பார்வையாளர்களால் ஆதாரிக்கப்படுவது எமது யாழ்ப்பாண தமிழ்ச்சமூகத்தில் ஏற்க இயலாத ஒன்று.யாழ்ப்பாண திரைப்பட ரசனை என்பது தியாகராஜ பாகவதரின் காலம் தொட்டு தற் காலம் வரை உள்ளது.வரலாற்று அடிப்படையில் அணுகும் போது,சில பிற்போக்கான ரசனை ஆரம்பம் முதலே இருந்து வந்தது.சினிமா....சினிமா. ..என்று தமது வளமான எதிர்காலத்தை மண்னாக்கியவர்களும் உள்ளார்கள். ஆரம்ப கால கொட்டகை சினிமாக்கள் திரையரங்குகளிற்கு முன்னேறிய போது ரசனை மற்றும் வணிக லாபமும் அதிகரித்தது.உலகமயமாக்கல் சூழலில் உலகம் மாயமாகிக் கொண்டே இருக்கும். ஆரம்ப சூழல் தற்போது காணப்படமாட்டாது.இதுவே யதார்த்தம்! தற்காலத்தில் திரையரங்குகள் வெகுஜன கதாநாயகர்களின் திரை படங்களையே திரையிடுகின்றன.இதனால் இளைஞர் வட்டமும் அவற்றுக்குகே முண்டியடிக்கின்றனர்.இலங்கையை பொறுத்தவரை, சிங்கள சினிமா நல்ல தரமான இடத்தை அடைந்துள்ளது. ஆயினும், தமிழ் சினிமாவிற்கான அடையாளமாக தென்னிந்திய சினிமாவே காணப்படுகிற அதேவேளையில் தற்போதைய எமது கலைஞர்களின் தியாகம் நிறைந்த முயற்சிகள் புறக்கணிக்கபடுகின்றது.இதற்கு முக்கிய காரணமாக காணப்படுவது வணிக லாபம் அற்ற தன்மையே ஆகும். Industry இல்லாத நிலையில் நிறைந்த போராட்டத்தை சந்தித்தே வெற்றி பெற முடியும்.சகோதர மொழியில் 1000 ற்கு மேல் திரைப்படங்கள் வெளியான நிலையில் ஈழத் தமிழர் தென்னிந்தியாவில் சார்ந்து இருப்பது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் பலமற்ற தன்மையையே ஏற்படுத்தும்.இ.தனஞ்சயன்.
அறிவைநாடல்

அறிதலார்வம்
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
கோட்பாடு சார்ந்த சினிமா ரசனை புதுமையானது!

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
மஞ்சள் இதழியல் என்ற கருத்துப்படிமம் தற்காலத்தில் நடைமுறை சாத்தியமா?
மஞ்சள் இதழியல்(மஞ்சள் பத்திரிகை/yellow journalism)இச் சொல் பற்றிய புரிதல் எமது சமூகத்தின் மத்தியில் மிக குறைவாகவே உள்ளது. இதனால் அச்சொல்லினை தமக்கு சாதகமாக பயன்படுத்த சிலர் முனைகின்ற அதேவேளையில் தம் பக்க நியாயப்படுத்த முனைகின்றனர்.ஆபாசமான பாலியல் எண்ணங்களை தூண்டுபவை மாத்திரம் மஞ்சள் இதழியல் அன்று.உண்மையில் மஞ்சள் இதழியல்/பத்திரிகை என்றால் என்ன? அதன் தோற்றம், வளர்ச்சி,சர்வதேச மற்றும் இலங்கை ஊடகங்களில் மஞ்சள் இதழியற் பண்புகள் போன்றவற்றை தெளிவுபடுத்தும் சிறு முயற்சியே இப் பதிவு ஆகும்.இதன் ஆரம்பமாக 1898 ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் போரினை தூண்ட இவ் இதழியலே காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் (The New jork world & The New York journal )போன்றவை மஞ்சள் இதழியலின் காரணகத்தாக்கள்.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கூட அமெரிக்க ஊடகங்களினை மஞ்சள் இதழியல் ஊடகங்கள் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக C.N.Nஐ நேரடியாக விமர்சனம் செய்தார். அத்துடன் ஊடகங்கவியலாளர்களையும் விட்டு வைக்கவில்லை.மஞ்சள் இதழியல் ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது,சாதாரணமான செய்திகளினை கூட சுவையாக வெளியிடும்.விற்பனையினை பிரதான நோக்கமாக கொண்டு இருக்கிறது.நடுத்தர மற்ற,நம்பகமற்ற,பொய்யான வதந்திகள் நிறைந்த செய்திகளை கொண்டு இருக்கிறது. Frank Luther Mott (1941)மஞ்சள் இதழியல் என்பது மிகப் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு வெளிவருவது,கற்பனை, வண்ணமயமான படங்களை உள்ளடக்கியது, போலியான நேர்காணல், உணர்ச்சியூட்டும் தலைப்பில் செய்திகள், தவறான கருத்துருவாக்கம்,அனுதாபத்தை உருவாக்கும் ஊடகங்கள் யாவும் மஞ்சள் இதழியல் என சிந்திக்கின்றார்.நாமும் நாம் நுகரும் ஊடகங்களில் இவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.மரணச் செய்திகள், திருட்டு செய்திகள்,நகைப்பூட்டல்,அவமானப் படுத்தல்,ஆதாரமற்ற ஊக அடிப்படையில் அமைந்த செய்திகள், கேலிச்சித்திரங்கள்,விளம்பரங்கள்,போன்றனவும் மஞ்சள் இதழியலாகவே சிந்திக்கப்படுகின்றது.அத்துடன், ஊடகங்களினை நுகர்வோருக்கு பதட்டம் ஏற்படுத்துபவை,பல நிரலை கொண்ட செய்திகள் போன்றவையும் மஞ்சள் இதழியலே.இவ்வாறான இதழியல் மனித சமூகத்தின் சாபக்கேடாக விஷயமாகும். இவை ஊடக அறநிலையத் புறம் தள்ளியதாகக் காணப்படுகிறது. ஊடகங்களின் மதிப்பு, விடயதானங்களை உள்ளடக்கிய செய்திகள், தொழில் நேர்மை போன்றவை கேள்வியாக்கப்படுகின்றது.தற்போதைய நவீன ஊடகங்களின் வருகை மஞ்சள் இதழியலினை உறுதிபடுத்தியுள்ள அதேவேளையில் பிரதான ஊடகங்களினையும் சவாலுக்குட்படுத்தியுள்ளன. மஞ்சள் இதழியலின் பிரதான நோக்கமாக வணிகமே காணப்படுகிறது. இதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மஞ்சள் இதழியல் பண்புகளையே உள்வாங்கும்.உலகத்தில் தற்போதைய நிலையில் மஞ்சள் இதழியல் இல்லாத ஊடகங்கள் இல்லை எனலாம். அந்த வகையில் எமது நாட்டின் ஊடகங்களின் நிலை கூட அதே நிலை தான்.எனினும் மஞ்சள் இதழியல் பண்புகளை முழுமையாக கடைபிடிக்காவிடினும் ஊடக தர்மத்துக்கு ஏற்ப செயல்படுவது ஊடகங்களின் ஆசிரிய பீடத்திலே உள்ளது. மக்களின் கடமை ஊடகங்களில் வரும் செய்திகளினை திறனாய்வுத் தளத்தில் அனுகுவதே ஆகும்.இ.தனஞ்சயன்.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017
விவேகத்தை புரிந்துகொள்ளாத பக்தி ரசனை!
ஊடகங்களில் மிகவும் இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக விளம்பரங்கள் காணப்படுகிறது. விளம்பரம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை/சேவையை நுகருமாறு மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் வடிவமாக காணப்படுகிறது. விளம்பரம் என்பது ஆரம்ப காலத்தில் பொதுமக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொது அறிவிற்புக்கும் பயன்படுத்தப்பட்டது.மாறாக இன்று அனைத்து விடயங்களிற்கும் விளம்பரம் அவசியமாக்கப்பட்டு விட்டது. விளம்பரங்களின் வகைகளுள் ஒன்றாக புறவிளம்பரங்கள்(out display advertisements & Banners)காணப்படுகின்றது. புறவிளம்பரங்கள் என்பது பெரியளவில் அமைப்பதால் அவை சகலரையும் ஈர்கின்றது.வர்ணம் இனைக்கப்படுவதால் தொலைநோக்கிலே இவை தெளிவாகவும் அழகாகவும் அமைக்கப்டுவதால் பலருக்கும் தெரியப்டுத்தப்படுகின்றது.நகர மையம், பார்வைமையங்கள், பெரிய பாலங்கள், சந்திகள்,பிரபலமான ஆலய மகோற்சவகாலப்பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவை.உதாரணமாக, தற்போது நல்லூர் திருவிழா ஆரம்பமாகி தேர் திருவிழா இன்றாகும்.நல்லூரிற்கு அனைத்து வியாபார நிறுவனங்களும் தமது பிரசித்தப்படுத்தல்,மேம்படுத்தல்,பொதுமக்கள் தொடர்பு,விளம்பரப்படுதல்,வணிக நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு களமாக நல்லூர் களமாக அமைகிறது. ஊடகங்கள் கூட குறிப்பாக தென் இலங்கை ஊடகங்கள் நல்லூரில் முகாமிட்டுள்ளனர். ஆலயத்திருவிழா எவ்வாறு சமூகமயப்படுத்தல் செய்கிறது என்பதற்கு நல்லூரே மிகச்சிறந்த உதாரணம்.இதே வேளை,விவேகத்தின் அர்த்தத்தை புரியாத சிலர் தமது பணத்தை பிற்போக்கான நடவடிக்கைகளிற்கு தாரைவார்க்கின்றனர்.இவர்கள் புற விளம்பரங்களின் இலாபம் தொடர்பான அறிவிலிகளாக உள்ளனர். சுரனை கெட்ட ரசனையாளர்கள்.புறநிலை விளம்பரங்களின் மற்றும் ஓர் பண்பாக எல்லா வகையினரையும் சென்றடைகிறது. மக்களின் மத்தியில் மிகப்பெரிய விம்ப கட்டமைப்பு மேற்கொண்டு நீடித்த தாக்கத்தை உண்டு பண்னுவது இவ்வாறு விளம்பரங்களின் தனிபட்ட பண்பாகும். இவ்வாறான விளம்பரங்களின் எதிர்மறையான கருத்துக்களாக போலி களின் பெருக்கம், பண்பாட்டு கலப்பு, திணித்தல் நிலை,பதட்ட உருவாக்கம்,கவனச்சிதறல்,மொழித்தூய்மை புறக்கணிப்பு, பக்தியற்ற நிலை, சலுகை என்ற பெயரில் முறைகேடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஆன்மீக ஈடேற்றத்திற்கு இடைஞ்சல், தவறான பிற்போக்கான எதிர்மறையான கருத்துருவாக்கம் போன்றவற்றை சிந்திக்க முடியும். உலகமயமாக்கல் சூழ்நிலை ஆண்மீக பண்பாட்டுத்தளத்திலும் மாற்றத்தை உண்டுபண்னிவிட்டது.தொடர்பாடல் கலையும் விற்பனை செய்முறையுமான புறவிளம்பரங்கள் வணிக பூகோளமயமாக்கல் சூழ்நிலையில் தவிர்க்க முடியாதவை. எனினும் இவற்றை விவேகமான செயற்பாட்டிற்கு பயன்படுத்தலாமே?? நல்லூரானே துனை செய்ய வேண்டும்.இ.தனஞ்சயன்.
