அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

மியன்மாரில் மீண்டும் இராணுவ ஆட்சி!

மீண்டும் ஒரு பதிவில் உங்களை குறுகிய கால இடைவெளியில்  சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறித்த வலைப்பூ  பதிவானது மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக சிந்திப்பதாகேவ அமைய இருக்கின்றது. 

மியன்மாரில் சில நாட்களுக்கு முன்னதாக ஜனநாயக வழிமுறையில் தேர்தல் இடம்பெற்றது. அந்தத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் மக்களாட்சிக்கான தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது. 


குறித்த தேர்தல் வெற்றியை இராணுவம் மோசடியான முறையில் பெற்ற வெற்றியாக கூறியது. இந்நிலையில் ஆங் சாங் சூகி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியில் நாடு பூராகவும் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏராளமான படையினர் மியன்மாரின் முக்கிய நகரமான யங்கோனில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொலைபேசி இணைப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


 இதேவேளை  மியன்மாரில் அரச தொலைக்காட்சியான எம்.ஆர்.டிவி ஒளிபரப்புச் சேவை இடம்பெறவில்லை. அதன் சமூக வலைத்தளத்தில் தொழில்நுட்ப தடங்கல் காரணமாக ஒளிபரப்பமுடியவில்லை என்ற பதிவு காணப்படுகிறது. 

இதேவேளை ஆளுங்கட்சியின் சட்டவாக்குனர் தானும் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளார்.


இதேவேளை இராணுவப் பேச்சாளருக்கு பல தடவைகள் அந்நாட்டு ஊடகங்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதோடு அதற்கு பதிலளிக்கவில்லை. கடந்த நவம்பரில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகி மக்களாட்சிக்கான தேசிய கட்சி பாரிய வெற்றியை பெற்றது. 


குறித்த வெற்றியானது மோசடி மூலம் பெறப்பட்டது என இராணுவம் குற்றம் சாட்டியிருந்தது. ,ந்தக் குற்றச்சாட்டை மியன்மாரில் தேர்தல் ஆணையகம் மறுத்தது. 2015ம் ஆண்டு இடம்பெற்ற மியன்மார் பாரிய வெற்றியை பெற்றுக் கொண்டார். ஆங் சாங் சூகி 1990ம் ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1991ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டார். 2010ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்கள் மீது ஆங் சாங் சூகியின் கட்சி இருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட அடக்கு முறைகள் காரணமாக ஆங் சாங் சூகிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


1962ஆம் ஆண்டு மியன்மாரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அது இராணுவத்தின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்டுவந்தது. அதனால் இராணுவம் தன்னை நாட்டின் பாதுகாவலராகக் கருதுகிறது.


2008ஆம் ஆண்டு மியன்மாரின் அரசமைப்புச் சட்டம், ராணுவத்தால் வரையப்பட்டது. அதை அடுத்து, மியன்மார் அரசியலில் இராணுவம் நிரந்தர இடம் வகிக்கிறது.

எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் நாடாளுமன்றத்தின் 25 வீதமானவை  இராணுவத்துக்குச் செல்லும்.

இராணுவத் தலைவர் தற்காப்பு, உள்துறை, எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை நியமிப்பார்.
இதனால் ஆளுங்கட்சியுடன் இராணுவம் எப்போதும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு அரசமைப்பை மியன்மார் கொண்டிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இ.தனஞ்சயன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக