அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

ஞாயிறு, 7 மார்ச், 2021

அளவெட்டி பிரதான வீதி புனரமைக்காததன் காரணமாக போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் மக்கள்…


யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மல்லாகம் பிரதேசத்தில் இருந்து அளவெட்டி கிராமத்திற்குச் செல்லும் பாதை மற்றும் சுன்னாகத்தில் இருந்து புத்தூர் செல்வதற்கான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் பாராமுகமாக விடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பல்வேறு வகையிலான முறைபாடுகளை உரிய அதிகாரிகளிடம் மேற்கொண்ட போதும் அதிகாரிகள் தமது அசமந்தப் போக்கினை வெளிப்படுத்தி வருகின்றனர். யாழ் நகரில் இருந்து வரும் வாகனங்கள் சுன்னாகம் ஊடாக 768ம் இலக்க பஸ் போக்குவரத்து மேற்கொள்ளும் பாதையான கந்தரோடை, அளவெட்டி மற்றும் கீரிமலைக்கு பயணிப்பவர்கள் அண்மைக்காலமாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் மல்லாகத்தின் ஊடாக மல்லாகம் நீதிமன்றம், அளவெட்டி, சங்காணை, சங்டிலிபாய் மற்றும் வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களுக்கு பயணிப்பவர்களும் கடுமையான சவால்களை சந்திக்கின்றனர். 

இதேவேளை சுன்னாகத்தில் இருந்து புத்தூர் ஊடாக அச்சுவேலி ஆவரங்கால் மற்றும் வடமாராச்சி பயணிப்பவர்கள் பாரிய போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்வதுடன் அதற்கென எந்தவொரு பொது போக்குவரத்து வசதியும் சுன்னாகத்தில் இருந்து அச்சுவேலி செல்வதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமது சொந்த வாகனங்களில் செல்லும் போது, உரிய இடத்திற்கு செல்வதற்கு முன்னர் வாகனம் திருத்துமிடத்திற்கு சென்ற பின்னரே செல்ல முடிகின்றது. இதேவேளை யாழ்;ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தின் எயார் பஸ் வீதி ஊடாக தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்லும் வீதி முறையற்ற திட்டமிடல் இல்லாமல் வீதி காபெட்  இடப்பட்டுள்ளதுடன் தற்போது வெளிநாட்டில் உள்ள ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து அளவெட்டி மத்தி விளையாட்டு மைதானம் முன்னால் உள்ள வீதியின் புனரமைப்பு பாதியில் விடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பெரிய புதைகுழி ஒன்று உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கின்ற போது எதிர்பாராத அனர்த்தங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

 இது தொடர்பாக உரிய அரச அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதங்களை மறந்து பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இது போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு குறித்த வீதிகள் குறுகிய காலத்திற்குள் காபெட்  இட்டு தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக