அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வியாழன், 16 நவம்பர், 2017

சுற்றுலா தொழிற்துறையின் சுபாவங்களிற்கு ஊடகங்கள் புத்துயிர் அளிக்குமா?

நடப்பாண்டில்  (2017)  ஒக்ரோபர் வரையில் இலங்கைக்கு 2 லட்சம் சீன சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.கடந்த மாதத்தில் மாத்திரம் 18,000 சீனர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், இலங்கைக்கு இந்த ஆண்டில் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக குறித்த அமைச்சு செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இந்த வருட இறுதிக்குள் ஏற்கனவே உத்தேசித்துள்ள இலக்கான 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை அடைய முடியும் என்று அமைச்சு தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.இவ்வாறாக தற்போதைய பூகோளமயமாக்கல் சூழலில் சுற்றுலாத்துறையின் அவசியமானது உணரப்படுகின்றது.சுற்றுலா(Tourism )எண்பதாவது மகிழ்ச்சி, பொழுதுபோக்கு மற்றும் வணிக நோக்கங்களிற்காக ஏதேனும் ஓர் இடத்தை தெரிவு செய்து அங்கு பயணம் மேற்கொண்டு சிறிது காலம் தங்கியிருந்து அச்சூழலை அனுபவிப்தை குறிப்பிடலாம்.(Travel to and stay in places out sides their usual environment for not more than one consecutive year for leisure, business and other purposes ).அதேசமயம்,சுற்றுலா தொழிற்துறையானது மூன்று வகைகளில் பிரதானமாகக் காணப்படும்.இதன்காரணமாகவே,வடமாகாணத்தில் சுற்றுலாத் துறையில் மனித மூலதனத்தை விருத்தி செய்யும் நோக்கோடு மத்திய சுற்றுலாத் துறை அபிவிருத்தி அமைச்சால் தொழில்களை திறம்பட ஆற்றுவதற்கான செயலாற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு தனியாருக்கு முதற்கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கின் முதல்வர் கூறியுள்ளதை கவனிக்கத்தக்கது.இதேபோல், 2018 ம் ஆண்டுக்கான நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கெளரவ மங்களசமரவீரவினால் சமர்பிக்கப்பட்ட பாதீட்டில் கூட சுற்றுலாத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மூன்று வகையான சுற்றுலா துறையாக உள்ளுர்,தேசியம் மற்றும் வெளியூர் போன்றவற்றை குறிப்பிடலாம்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் புத்தரின் படத்தை பச்சை குத்தி வைத்து இருந்ததன் காரணமாக கைது செய்யப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட வழக்கில் வெளிநாட்டு பிரஜை வெற்றி கொண்டதும் குறித்த பிரஜைக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டமையும் மிக அண்மையில் சுற்றுலாத்துறையில் இடம்பெற்ற சுவாரிசியமான அனுபவம் ஆகும்.இலங்கையானது சுற்றுலாத்துறையின் முக்கியமான இடமாக அமைவதற்கு அதனுடைய கேந்திர அமைவிடம் பிரதானமானது. இலங்கை வரலாற்றை அவதானிக்கும் போது,பாரசீகர்,எகிப்தியர்,சீனர்கள், ஜப்பானியர்கள், அரேபியர்கள், பர்மா நாட்டினர் மாத்திரமன்றி கிரேக்கர் மற்றும் உரோமர் ஆகியோரின் வர்த்தக கப்பல்கள் வாணிப நோக்கத்திற்காக இலங்கை வருகை தந்தனர். இது சுற்றுலாத் துறையின் ஆரம்பமாக அமைந்துள்ளது.இதைவிட,இலங்கைக்கு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகின்ற அடையாளம் (Brand) அதிகளவு சுற்றுலா பயணிகள் இலங்கையின் மீது கரிசனை கொள்ள காரணமாக அமைந்துள்ளது.சர்வதேசத்தின் பார்வையில் Ceylon tea க்கு தனித்துவமான புகழ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Tea time என்ற சொல்லாடல் கூட இலங்கை தேயிலையின் பிரபலத்தன்மையினால் ஏற்பட்டதொன்றாகும்.இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது இதனைக் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது.மேலும்,நாண்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தன்மையும் இலங்கையின் தொல்லியல் மரபுரிமை மற்றும் இயற்கை அழகிடங்கள் என்பன சுற்றுலாத்துறையை அதிகம் வலுப்படுத்துகின்றது.கடந்த தசாப்த கால கொடுமைகள் நிறைந்த யுத்தம் காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மிகச் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்த அதேவேளையில் தமது எல்லையை தென்இலங்கைகுள்ளே குறுக்கிக் கொண்டனர்.போர் நிறைவுற்ற பின்னரும் கூட வடக்கிற்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு இல்லை என்பது ஆய்விற்குரிய ஒரு பிரச்சனை ஆகும்.இத்தருணத்தில் 2018 ஆண்டுக்கான பட்ஜெட் சமர்பிக்கபட்டு இருக்கிறது. அந்த பட்ஜெட்டில் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு கணிசமான முக்கியத்துவம் வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது. குறித்த பட்யெட்டில் குறிப்பிடப்பட்ட சுற்றுலாத்துறைக்கான சுபாவங்களை நோக்கும் போது;♡சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக Home stay வாய்பினை உருவாக்குதல்♡சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடனும் இனைந்து சுற்றுலாத் துறைக்கு சில மையத்தளங்களை உருவாக்குதல். ♡தனியார் துறையினதும் தொல்லியல் தினைக்களத்தினதும் ஆதரவுடன் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தினால் மாத்தறை,ஹேம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோனமலை, மன்னார் கோட்டை,கற்பிட்டி கோட்டை முதலான 6 கோட்டைகள் அபிவிருத்தி.♡நானுஓயா,காலி,எல்ல மற்றும் கொழும்பு புறக்கோட்டை ஆகிய புகையிரத நிலையங்கள் தொல்லியல் முக்கியம் வாய்ந்த இடமாக பிரகடனம் செய்தல்.♡சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிப்பதற்காக அரச,தனியார் பங்கேற்புடன் சிகிரியா,மட்டக்களப்பு,சீனக்குடா மற்றும் கொக்காவில் உள்ள விமான நிலைய அபிவிருத்தி.♡உயர் நிலை சவாரிக்கு பயன்படக்கூடிய வகையில் மாதுறுஓயா மற்றும் கல்ஓயா தேவி வட்ட பூங்காக்கள் அபிவிருத்தி செய்யப்படும்.♡சுற்றுலாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தகூடியவாறு வனப்பிராந்திய அலுவலகர்களின் இயலளவு விருத்தி செய்யப்படும்.♡சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக சுற்றுலா காவற்துறை அலகுகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸ் தினைக்களத்துடன் ஒன்றிணைந்து செயற்படல்.♡சுற்றுலாப்பயணிகள் விரும்பும் ஆகாய விளையாட்டுகளான Dirigibles,Hang gliding, Paragilders,Ballooning மற்றும் kite surfing equipment போன்ற விளையாட்டுகளிற்கான உபகரணங்கள் மீதான துறைமுக மற்றும் தேசக்கட்டுமான வரி குறைப்பு.♡1.3 மில்லியன் முச்சக்கர வண்டி சாதிகள் பயனடையும் வகையில் வகையில் மின்சக்தியில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டி வழங்குதல். போன்றன சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு பட்ஜெட்டில் முன்மொழியபட்ட விடயங்கள் ஆகும்.இத்தகைய பெறுமதி வாய்ந்த சுற்றுலாத்துறையினை அசிங்கப்படுத்தும் விதமாக சில ஊடகங்கள் எமது நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செய்தியை பரிமாறிக் கொள்வது சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைந்து விடும். இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்சியை உண்டாக்கிவிடும்.இதன்காரணமாகே, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போலி மற்றும் அவதூறு செய்திகளைப் பரப்பும் ஊடகங்களை தடைசெய்ய வேண்டும் என்று நேரடியாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.ஊடகங்கள் சுற்றுலாத் துறைக்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். எமது நாட்டில் உள்ள பெறுமதியான விடயங்கள் ஆவனப்படுத்தல் மூலமாக சர்வதேச அரங்கிற்கு தெரியப்படுத்த வேண்டும். மாறாக நம் மத்தியில் காணப்படுகின்ற கலாச்சார சீரழிவு மிக்க விடயங்கள் ஊடகங்களில் முன்னிலை படுத்தும் சமயத்தில் சுற்றுலாத்தொழிற்துறைக்கு பேராபத்தாகவே அமையும்.இதேவேளையில்,சுற்றுலா(Tourism) மற்றும் விருந்தோம்பல்(Hotel management )பாடங்கள் தற்போது உயர்கல்விக் கூடங்களில்  பாடமாக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியது.தற்போதைய தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சூழலில் பொருளாதாரத்தை முன்னெடுக்க உலகத்துடன் ஒத்தோடவேண்டிய நிர்பந்தாக்கிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதேவேளை,இலங்கையின் வடபகுதியில் கூட சுற்றுலாத்துறையினை தொழிற்துறையாக(Industry)மேம்படுத்திக் கொண்டு எமது பண்பாட்டு தொண்மங்களையும் பாதுகாக்க வேண்டியது எமது தார்மீக பொறுப்பாகும். இ.தனஞ்சயன் ஊடகத்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக