அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சமாதான உருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபாகம்!

           
           சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை வெளிக்கொண்டுவருவதற்கு துணிவற்ற  செய்தி ஊடகம் இருக்கும் வரை, சமாதானம்,நல்லிணக்கம்  மற்றும் இன ஒற்றுமை தொடர்பாக உரையாடுவது சற்று கடினமானதே. பொதுவாக,  ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்ற போது, பெரும்பாலும் பரபரப்பான  மற்றும் சந்தைவாய்புக்களுகேற்பவே, செய்திகளை வெளியிடுகின்றது. 

            யுத்தத்திற்கு பின்னர்  அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் எமது அரசாங்கம் பாரிய அளவில் முயற்சித்தாலும் இன்றளவிலும் அதன் முயற்சி தோல்வியே. காரணம், சமாதானம் மற்றும் நல்லிணக்க கருத்துக்களினை மக்களிடம் கொண்டு சேர்கும்  ஊடகத்தின் பங்கு திருப்திகரமாக இல்லை. ஊடகங்கள் பிரபலமடைய வேண்டுமானால் இனவாதத்தை தமக்கு சாதகமாக்கவேண்டும்,நாட்டின் அபிவிருத்திக்கு அமைதி மற்றும் நல்லினக்கம் அவசியம்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக,எமது நாட்டில்  ஊடகங்கள் அதை நாசப்படுத்துகின்றன. 

                இன்றைய தினம் மின்னணு ஊடகங்கள் மற்றும் ஏனைய  ஊடகங்கள்  மூலமும்  தகவல்கள் விரைவில் பரவலடைகின்றது. எகிப்து மற்றும் துன்சீனிய புரட்சிகள், இந்தியாவின் அண்ணா ஹசாரேவின் போராட்டங்கள்  பொதுவாக, இவற்றை  கட்டுப்படுத்த முடியாதவை. இவற்றின் முலமாக சில சமயங்களில் தேசியப் பிரச்சினைகள் சில தனிநபர்களின் விருப்பங்கள் மற்றும் தமது சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில்தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, அண்மையில் நடைபெற்ற கண்டி இடம்பெற்ற இனவெறி தாக்குதல்களை குறிப்பிடலாம். 
           
                 இணையத்தின்   விரைவான பரவல் மற்றும் அர்ப்பணிப்பு சமூக வலைத்தளங்களின் தளங்களின் எழுச்சி ஆகியவை சமூக இணைப்புகளின் உள்கட்டமைப்பை  வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. இன்றைய தினம் எந்த  செய்தியாக இருந்தாலும்  விரைவாக  பரப்பப்படகூடிய திறன் கொண்டது, அதன் தொலைநோக்கு விளைவுகளைத் தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களின் ஆர்வம் மற்றும் சமூக மதிப்புகள் என்பவற்றை பொருட்படுத்தாமல் சில சமயங்களில் ஊடகங்கள் செயற்படுகிறது.

                நாட்டில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி ஊக்குவிப்பதில் ஊடகங்கள் ஒரு முக்கிய பங்கை செய்ய வேண்டும் என்று ஒரு குரலில் சமூக அக்கறையாளர்கள் வாதிட்டாலும் தேசியவாதத்தின் பெயரில் உள்ள சிக்கல்களின் சிந்தனையை மதிப்பிடுவதற்கு சில ஊடக செய்தித் தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் செயற்பாடுகள் பற்றி  தவறாக விமர்சிக்க வேண்டியுள்ளது. செய்தி ஊடகத்தில் சுய கட்டுப்பாடு மற்றும் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் சுமத்தப்படக்கூடாது என்று ஊடக ஒழுக்கவியலை  ஒப்புக் கொண்டாலும், ஊடகங்களினுள் அதன் சமூக கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்கின்றதா என்பது சற்று கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். 
         
            நாட்டின் தற்போதைய நிலையில், சமாதான மற்றும் இன நல்லிணக்கத்தை பராமரிப்பதற்காக ஊடகங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டிய கடப்பாடு  உள்ளது. ஆனால் ஊடகங்களின் ஒரு பகுதியினர் தங்களது கொள்கைகளிலிருந்து தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்தும் முரண்பாடு இதழியல் அம்சங்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனினும் சமாதான இதழியல் பண்புகள் இன்னும் எமது நாட்டு ஊடகத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இ.தனஞ்சயன் 
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக