அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

76 வருடங்களின் பின்னர் நிறைவேறிய புதிய தலைநகர் திட்டம்!


       இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவுகள் குறைவாக உள்ள கிழக்கு கலிமன்டான் மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவு புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ தலைநகராக இருந்த  ஜகார்த்தாவில் மட்டும் தற்போது மூன்று கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக அளவில் அங்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாலும், கடலில் அதிகம் குப்பை கொட்டப்படுவதாலும், வெப்பநிலை மாற்றத்தாலும் இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.  ஆட்சி, வணிகம், நிதி, வர்த்தகம்  போன்றவற்றை நிர்வகிப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது. மேலும் ஜகார்த்தா கடலில் மூழ்கி வரும் நகரங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த நடவடிக்கைக்கான மசோதாவை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லும். இந்த திட்டத்திற்கு சுமார் 466 டிரில்லியன் ரூபியா (33 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

ஜகார்த்தா நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகமாக ஏற்படும் இடமாக உள்ளது. 2050 ம் ஆண்டிற்குள் ஜகார்த்தா நகரின் மூன்றில் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த திட்டம் 1943ம் வருடத்தில் இருந்தே போடப்பட்டு வந்துஇருக்கிறது. ஜகர்தாவை மாற்ற வேண்டும் என்று இத்தனை வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதுதான் இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜோகோ விடோடா அனுமதி அளித்து இருக்கிறார். 76 வருடங்களின் பின்னர் இந்தோனேசியாவின் புதிய தலைநகர் திட்டம் நிறைவேறியுள்ளது.




தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக