அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வியாழன், 7 ஜனவரி, 2021

உண்மையில் சர்வதேச பொலிஸ் என்றால் அமெரிக்காவா?


இந்த வருடத்தின் முதல் வலைப்பூபதிவில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் மற்றும் வேலைப் பளு காரணமாக முழுமையாக தணல் வலைப்பூ தளத்தில் கவணம் செலுத்த முடியவில்லை. எனினும், இந்த வருடம் முழுமையாக கவணம் செலுத்த எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பு தர வேண்டும் என்று பிராத்திக்கிறேன். 

இந்த பதிவு சர்வதேச பொலிஸ் என்றால் எமக்கு நினைவுக்கு வருவது அமெரிக்கா. ஆனால், உண்மையில் சர்வதேச பொலிஸிற்கு உரிய கடமையை செய்யும் இன்டர்போல் தொடர்பாக சிறிது நேரம் சிந்திப்பதாகேவ குறித்த பதிவு அமையவுள்ளது. 

இன்டர்போல் என்பது சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு (The International Criminal Police Organization - INTERPOL) இன்டர்போல் ஆகும். சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடு ரீதியிலான ஒத்துழைப்பை பரஸ்பரம் அளிக்கவும் இன்டர்போல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்சில் உள்ள லியானில் அமைந்துள்ளது.

ஆஸ்திரிய நாட்டு காவல் துறை தலைவர் ஜோஹனஸ் ஸ்கோபர் என்பவர், 1923ஆம் ஆண்டில் சுமார் 22 நாட்டு காவல்துறை அதிகாரிகளை கலந்து பேசி இன்டர்போல் அமைப்பை உருவாக்கினார். ஆனால், இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது இன்டர்போல் செயலிழந்தது. 1946ஆம் ஆண்டில் போர் முடிவடைந்ததும், மீண்டும் இன்டர்போல் துவங்கப்பட்டது. 1934ஆம் ஆண்டில் இதன் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. 1928 ஆம் ஆண்டில் பிரிட்டன் இன்டர்போல் அமைப்பில் இணைந்தது. 1938 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா இதில் இணையவில்லை.

கடும் குற்றச் செயல்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்தவரின் உடல், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்கள், சிறையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கியவர்கள் போன்றவர்களின் விவரங்கள் குறித்து உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்வதின் பேரிலோ, ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேச நீதிமன்றம் கேட்டுக் கொள்வதின் பேரிலோ அல்லது தானாகவோ இண்டர்போலால் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் குற்றவாளிகள் குறித்து அனுப்பப்படும் சுற்றறிக்கைக்கு இண்டர்போல் அறிவிப்பு அல்லது இன்டர்போல் நோட்டீஸ் (Interpol notice) என்று பெயர். குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு மற்றும் ஊதா போன்ற வண்ண குறியீடுகள் கொண்ட நோட்டீஸ்களை இன்டர்போல் பிறப்பிக்கிறது. இதில், சிவப்பு வண்ண அறிவிப்பு (Red Corner Notice) வெளிநாடுகளில் தங்கியிருக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைக்குரியது ஆகும். 

இலங்கை உட்பட 194 நாடுகள் இன்டர்போல் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.


இன்டர்போலின் தற்போதைய  பொதுச்செயலாளராக ஜேர்மனியை சேர்ந்த  Jurgen stock உள்ளார். இவர் மொனோக்கோவில் இடம்பெற்ற 84வது  பொது அமர்வில் முதன் முதலாக பதவியை பெற்று கொண்டார். மேலும், இன்டபோலானது ஊழல்,சிறுவர்களிற்கு எதிரான குற்றங்கள், போதை வஸ்து கடத்தல், மனித நாடு கடத்தல், பயங்கரவாதம், இனைய வழி குற்றங்கள் மற்றும் யுத்த குற்றம் போன்றவற்றை உலகலாவிய ரீதியாக கையாழுவதாக உள்ளது. இன்டர்போலானது ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுகின்றது.

சர்வதேச பொலிஸ் என்று அமெரிக்காவினை அமைப்பதற்கான காரணம் தனது சுய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதன் காரணமாக அழைத்தாலும் உண்மையில் சர்வதேச பொலிஸிற்கான கடமையை செய்வது இன்டர்போல் ஆகும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக