அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

கோட்பாடு சார்ந்த சினிமா ரசனை புதுமையானது!

இலத்திரனியல் ஊடகங்களின் தற்கால எழுச்சி மக்களின் அகங்களை ஊடுருவி மதிமயக்கச் செய்து ஊடக நுகர்வோரினை செயலற்றவர்களாக்குவதே ஆகும். இதற்கான ஆதாரங்கள் ஆக அண்மையில் விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Big boss மற்றும் விவேகம் திரைப்பட வெளியீட்டுக்காக நம்மவர்கள் செய்த விளம்பரம் மற்றும் மெர்சல் இசை வெளியீடு விழா போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய ஊடகங்கள் பார்வையாளர்களின் நிலைமையினை நன்கு அறிந்து தமது நிகழ்ச்சியை திட்டமிட்டு தமது வணிக இலக்கை அடைகிறது.தொலைக்காட்சி மற்றும் சினிமா இன்று பாரிய ஊடுருவலை மக்களின் மனதில் ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில், திரைப்பட ரசனை என்ற எண்னகருவானது யாதெனில் திரைப்படம் ஒன்றை கோட்பாடு ரீதியில் அணுகுதல் என்ற  ரசனை முன்மாதிரியானது.திரைப்படத்தை பார்த்தல்,திரைப்படத்தை விளங்கிகொள்ளுதல்,கலை,பண்பாடு, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் பிரச்சாரமாக திரைப்படம் காணப்படுகின்றது.சினிமாவை ரசிக்கும் போது,சினிமா மொழியான frame,shot,scene,transition, sequence and camera movement & angles,sound போன்றவற்றை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.அத்துடன் கோட்பாட்டு ரீதியான திரைப்பட விமர்சனம் மற்றும் திறனாய்வு புதிய திரைப்பட அனுபவம் மற்றும் ரசனையை ஏற்படுத்தும்.பெரும்பாலான நம்மில் பலர் பொழுதுபோக்கு மற்றும் மன ஆறுதல் நோக்கி திரைப்படம் மற்றும் ஏனைய ஊடகங்களினை அனுகுவதால் ஊடகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலை.சினிமாவின் ஆதிக்கம் இன்று அனைத்து ஊடகங்களினையும் ஆக்கிரமித்துவிட்டது. இது தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாத. வாழ்க்கையில் ஒன்றோடொன்று கலந்துவிட்டது.பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் என எங்கும் சினிமாவின் செல்வாக்கு தான்.இதில் அரசியலில் வேறு.சினிமாவினை பார்க்க வேண்டாம். ரசிக்க வேண்டாம். என்று கூறுவது பொது அறிவுக்கு விரோதமானது. ஒரு சினிமாவினை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதே சாதகமான முற்போக்கான சிந்தனை. கோட்பாட்டு ரீதியான ரசனை,தொழில் நுட்பம் சார்ந்த ரசனை, படைபாளிகள் சார்ந்த ரசனை, குறியீடு சார்ந்த ரசனை என வேறுபடும். ரசனை என்பது வயது,இனம், பால்,பண்பாடு, அறிவு, மனப்பான்மை, அனுபவம் மற்றும் தனிநபர் வேற்றுமை என்ற தன்மையில் வேறுபடும்.சினிமாவின் மூலமாக பல்வேறு நல்ல நேர்த்தியான விஷயங்கள் கூறபட்டாலும்,அதனை உய்தறியும் தன்மை கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை ஊடகவே சாத்தியமாகும்.அந்த வகையில் சினிமாவிற்கான கற்கை நெறியில் பல கோட்பாடுகள் காணபட்டாலும் முக்கிய மான கோட்பாடாக படைப்பாளி கோட்பாடு(Auteur theory)காணப்படுகிறது.படைப்பாளி கோட்பாடு என்பது இயக்குனரின் சுயாதீன சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு ஆகும். இயக்குனர் பார்வையாளனின் கலாரசனையே முன்வைத்து படைப்பை உருவாக்குகின்றார்.Andrew Brazin என்பவர் படைப்பாளி என்பவர் தனது சிந்தனை படைப்பினை தனது அகச்சூழலிற்கு ஏற்ப உருவாக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.படைப்பாளிகளின் தன்மையை பொறுத்து சினிமாவின் நாயகத்தன்மை வேறுபட்ட தன்மையினை கொண்டு இருப்பதை காணலாம். பாரதிராஜா, பாலச்சந்தர், முத்துராமன், ஏ.பி.நாகராஜன், மணிரத்னம், மணிவண்ணன், ரவிக்குமார்,பாலா,அமீர், முருகதாஸ், ஷங்கர் போன்றோரின் திரைபடங்கள் ஒன்றோடொன்று  ஒப்பிட முடியாது.மாறாக ஒப்பிடும் போது அது ஒப்புவமை போலியாவே அமையும்.சமூகத்தில் உடனடியாக தாக்கத்தை உண்டு பண்னும் ஊடகமாக சினிமாவே காணப்படுகிறது. சினிமாவில் பேசும் வசனம், உடலுக்கும் ஆடைகள், புதிய   செல்நெறிகள் என்பன மிக இலகுவாக சமூகத்துடன் ஒட்டி கொள்கின்றது இதனை ஊடக கோட்பாடான அறுவடை கோட்பாட்டுடன் ஒப்பிட்டு சிந்திக்க முடியும். இதேவேளை,சினிமா நாயகர்கள் சினிமாப் பார்வையாளர்களால் ஆதாரிக்கப்படுவது எமது யாழ்ப்பாண தமிழ்ச்சமூகத்தில் ஏற்க இயலாத ஒன்று.யாழ்ப்பாண திரைப்பட ரசனை என்பது தியாகராஜ பாகவதரின் காலம் தொட்டு தற் காலம் வரை உள்ளது.வரலாற்று அடிப்படையில் அணுகும் போது,சில பிற்போக்கான ரசனை ஆரம்பம் முதலே இருந்து வந்தது.சினிமா....சினிமா. ..என்று தமது வளமான எதிர்காலத்தை மண்னாக்கியவர்களும் உள்ளார்கள். ஆரம்ப கால கொட்டகை சினிமாக்கள் திரையரங்குகளிற்கு முன்னேறிய போது ரசனை மற்றும் வணிக லாபமும் அதிகரித்தது.உலகமயமாக்கல் சூழலில் உலகம் மாயமாகிக் கொண்டே இருக்கும். ஆரம்ப சூழல் தற்போது காணப்படமாட்டாது.இதுவே யதார்த்தம்! தற்காலத்தில் திரையரங்குகள் வெகுஜன கதாநாயகர்களின் திரை படங்களையே திரையிடுகின்றன.இதனால் இளைஞர் வட்டமும் அவற்றுக்குகே முண்டியடிக்கின்றனர்.இலங்கையை பொறுத்தவரை, சிங்கள சினிமா நல்ல தரமான இடத்தை அடைந்துள்ளது. ஆயினும், தமிழ் சினிமாவிற்கான அடையாளமாக தென்னிந்திய சினிமாவே காணப்படுகிற அதேவேளையில் தற்போதைய எமது கலைஞர்களின் தியாகம் நிறைந்த முயற்சிகள் புறக்கணிக்கபடுகின்றது.இதற்கு முக்கிய காரணமாக காணப்படுவது வணிக லாபம் அற்ற தன்மையே ஆகும். Industry இல்லாத நிலையில் நிறைந்த போராட்டத்தை சந்தித்தே வெற்றி பெற முடியும்.சகோதர மொழியில் 1000 ற்கு மேல் திரைப்படங்கள் வெளியான நிலையில் ஈழத் தமிழர் தென்னிந்தியாவில் சார்ந்து இருப்பது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் பலமற்ற தன்மையையே ஏற்படுத்தும்.இ.தனஞ்சயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக