ஒரு நாட்டின் அபிவிருத்தியினை அளவிடும் சுட்டென்னில் முக்கியமான ஒன்றாக எழுத்தறிவு காணப்படுகின்றது.எனினும், தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு ஊடகங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. ஆனால், அவ் ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படாமல் தவறான பாதைக்கு திசை திருப்புகின்றது.கடந்த பல ஆண்டு காலமாக எழுத்தறிவு என்பது எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஆன இயலுமையை குறிப்பிடலாம். ஊடகங்கள் வாயிலாக பல தகவல்களினை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனாலும், அவை உண்மையானவையா?நடுநிலையானவையா?அறத்திற்கு உட்பட்டதா?புறவயமானதா? போன்ற அடிப்படை கேள்விகள் வினாவப்படவேண்டியது கட்டாயம். 21ம் நூற்றாண்டில் ஊடக எழுத்தறிவு என்ற பதம் பாவனைக்குரியதாக காணப்படுகின்றது. ஊடகத்தை எப்படி அணுகுதல்,பகுப்பாய்வு செய்தல்,மதிப்பிடுதல் மற்றும் திறனாய்வு செய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். ஊடக எழுத்தறிவு என்பது ஊடகங்களில் வரும் நுட்ப அரசியல் சார்ந்த செய்திகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் ஆகும். இது கற்றஅறிவு,அனுபவம், சமூக சூழல், பண்பாடு, மொழிமாற்றம் மற்றும் மதசார்புகளிற்கு ஏற்ப மாறுபடும்.தற்போதைய நேரத்தில், ஊடகளிற்கென ஒழுக்ககோவை காணப்பட்ட போதிலும் அவை எவ்வளவு தூரம் பிரயோகிக்கப்படுகின்றன என்பது ஆழமாக சிந்திக்கத் கூடிய விஷயமாகும்.நவீன ஊடகங்கள் இவற்றை கண்டுகொள்ளாதமை கண்டிக்கத்தக்கதாகும்.ஊடகத்தை விளங்கிகொள்வதால் ஏற்படும் சாத்தியமான அம்சங்களாக இவற்றை சிந்திக்கலாம். திறனாய்வு திறன் விருத்தி, வணிக தந்திரத்தை புரிதல், கோட்பாட்டு ரீதியில் ஊடகங்களினை அனுகுதல்,ஊடக நீதிக்காக வாதிடல், ஊடக ஒழுங்கீனங்களை கண்டித்தல், ஊடக திசைதிருப்பும் விடயங்களினை அறிதல்,பண்பாடு மற்றும் சமூகத்தை ஊடகங்கள் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கின்றன போன்றவற்றை சிந்திக்கலாம். எமது நாட்டின் ஊடகங்களினை புரிந்து கொள்ளும் ஆற்றல் வட பகுதியை காட்டிலும் தென்பகுதியில் அதிக புரிதல் ஊடக கல்வி பல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வி வாயிலாக புகட்டபட்டு வருகிறது. இங்கு அதற்கான நிலை மந்தமான நிலையில் உள்ளது. பின்வரும் கேள்விகள் ஊடகங்களினை அணுகும் போது எப்பை நாமே கேட்க வேண்டும். 1)குறித்த செய்திகள் யாரால் உருவாக்கப்பட்டது? 2 )யாரை இலக்கு வைத்துள்ளது? 3)இவ்வாறான தந்திரத்தை பின்பற்று கின்றது?4 )எவ்வாறு கருத்துருவாக்கம் செய்யக் கூடியது?5)மொழி பயன்பாடு எப்படியுள்ளது? 6)வாழ்வியல் பண்பாடு எப்படி பிரதிபலிக்கிறது? போன்ற கேள்விகள் துல்லியமான தகவலினை அறிய முடியும். ஊடகங்களினை புரிந்து கொண்டு சிறந்த முன்மாதிரியாக ஊடக பண்பாட்டினை உருவாக்கிக் கொள்ள முடியும்.சிந்தை மகிழ ஊடகத்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் இ.தனஞ்சயன் .
அறிவைநாடல்

அறிதலார்வம்
புதன், 16 ஆகஸ்ட், 2017
ஊடகபாவனையின் அதிகரிப்பு ம் விதைக்கப்படவேன்டிய ஊடகஅறிவும்!
லேபிள்கள்:
அளவெட்டி,
உலகமயமாதல்,
ஊடக உளவியல்,
ஊடக விமர்சனங்கள்,
ஊடகத்தை புரிந்து கொள்ளுதல்,
ஊடகம்,
ஊடகஜனநாயகம்,
எழுத்தறிவு,
தனஞ்சயன்,
திட்டமிடல்,
திறனாய்வு,
நகர திட்டமிடல்,
மாற்றுஊடகம்,
மொழிமாற்றம்,
யாழ்ப்பாணம்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக