அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

புதன், 28 ஆகஸ்ட், 2019

சுவாச காற்றில் 20 சதவீதத்தை வழங்கும், பூமியின் நுரையீரல் அமேசன்!


   உலகளவில் மிகவும் பிரபலமான காடு என்றால் அது அமேசன் காடுகள்தான். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், அரிய வகை விலங்குகள் ஆகியன உள்ளன.

இந்த காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா  உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பு இருந்தாலும் காட்டு தீ பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.

தீயணைப்பு வீரர்கள்
இந்த கடந்த சில நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. அடர்ந்த காடு என்பதால் உலகின் மிகப் பெரிய காடு என்பதாலும் இங்கு தீயை அணைப்பது என்பது பிரேசில் நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் தீயை அணைக்க 80 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரேசில் மக்கள்
அமேசன் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகை செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதை வளிமண்டல் அகசிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder (AIRS)) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.

கடந்தக் ஒகஸ்ட் 8 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22 ஆம் திகதி வரை 18ஆயிரம் அடி உயரத்தில் கார்பன் மோனாக்சைடு எந்த அளவுக்கு அடர்த்தியாக கலந்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாக நாளாக கார்பன் மோனாக்சைடு கலந்துள்ள மேகங்கள் அமேசான் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கிறது. மேலும் இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் அது பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்பன் மோனாக்சைடு
நாசா வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை நிறத்தில் காணப்படுவது கார்பன் மோனாக்சைடின் அடர்த்தியாகும். ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோனாக்சைடு நீண்ட தூரங்களுக்கு சென்றுக் கொண்டே இருக்கும். கார்பன் மோனாக்சைடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

பெரும் ஆபத்து
காற்றை மாசுப்படுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவநிலை மாற்றத்தையும் பாதிக்கும் என்பதால் நாசாவின் இந்த தகவல்கள் அச்சுறுத்தும் அளவில் உள்ளது. இந்த வாயுவை லேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். இதே அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது இறக்கும் நிலைக்கோ செல்லும் வாய்ப்புள்ளது. மேலும் இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

வரலாறு காணாத காட்டுத்தீ பரவி வருகிறது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி, புவி வெப்பமாவதை தடுக்க அமேசான் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என உலக அளவில் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த போதுமான நிதியை ஒதுக்கும் அளவுக்கு பிரேசில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை. இதனால், உலக நாடுகளின் உதவிக்கு கையேந்தி நிற்கிறது.

இந்நிலையில், அமேசன் காடுகளில் தீயை அணைத்து வனப்பகுதியை பாதுகாக்க ரூபாா.35 கோடியை நிதி திரட்டித் தருவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கூறி இருக்கிறார். ‘டைட்டானிக்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான டிகாப்ரியோ ‘எர்த் அலையன்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், அமேசான் காடுகளை பாதுகாக்க முதற்கட்டமாக ரூ.35 கோடி நிதியை திரட்டி தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட டிகாப்ரியோ, தனது ரரசிகர்கள் அனைவரும் நிதி உதவி செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். அமேசன் காடுகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான தொடக்கமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இதற்கிடையே, ஜி7 மாநாட்டில் அமேசான் காடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஜி-7 அமைப்பு சார்பில் ரூ.150 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.

அமேசனில் காட்டுத் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்க தயார் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ தெரிவித்துள்ளார். அமேசான் காட்டில் 60 சதவீதம் பிரேசில் நாட்டில் உள்ளது. மீதிப்பகுதிகள்  பொலிவியா, கொலம்பியா, ஈக்வெடார், பிரெஞ்சு கயானா, கயானா, பெரு, சுரினேம் மற்றும் வெனிசுலா நாடுகளில் உள்ளன. பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத் தீ  பற்றி எரிந்து வருகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ஆக்ஜிசனில் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் அமேசான் காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, ஜி7 அமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ்  நகரில் நேற்று முன்தினம் முடிந்தது. ஜி7 கூட்டத்தின் இறுதிநாளான நேற்று முன்தினம் அமேசான் காட்டுத் தீ பற்றி விவாதிக்கப்பட்டது. இது உலகத்தின் பசுமை நுரையீரல் மீதான தாக்குதல் என ஐரோப்பிய தலைவர்கள் கூறினர்.

இந்த  கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் இமாணுவேல் மேக்ரான், ‘‘அமேசன் காட்டுத் தீயால்  பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ உலக தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அமேசான் காடு நம் கண்முன் பயங்கரமாக பற்றி எரிவதை கடந்த ஒரு வாரமாக பார்க்கிறோம். அமேசான் காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க இங்கிலாந்து 10 மில்லியன்  பவுண்ட் பணத்தை (ரூபா 88கோடி) விரைவில் வழங்கும்’’ என்றார். இறுதியாக, அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி  வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது. ஆனால், ஜி 7 நாடுகளின் உதவியை  பிரேசில் அதிபர் சயீர் போல்சோனரோ நிராகரித்து  விட்டார். இது தொடர்பாக அவரது அரசின் முதன்மை செயலர் ஓனிக்ஸ் லோரன்ஜோனி கூறிய போது, ``இந்த உதவிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இந்த நிதியைக் கொண்டு ஐரோப்பிய  நாடுகளில் காடுகளை வளர்த்து கொள்ளுங்கள்.  பிரான்சையும் அதன் காலனி நாடுகளையும் கவனித்து கொள்ளுங்கள்,’’ என்றார்.

இந்நிலையில், இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ, ஜி7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள நிதியை தாங்கள் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிதியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக  சில நிபந்தனைகள் இருப்பதாக அவர் கூறினார். முதலாவதாக, தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக பிரான்ஸ் அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னை பொய்யர் என்றும், பின்னர் அமேசானில்  தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது என்றும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தக் கருத்துக்களை திரும்பப் பெற்றபிறகே, பிரான்ஸுடன் பேச முடியும் என்று அவர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசன் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.


இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

எனவே அமேசன் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி நேற்று முன்தினம் அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசன் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு ராணுவ வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

எனவே அமேசன் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசன் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசன் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு இராணுவ  வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-7 மாநாடு நடைபெறும் முன்பு  நடைபெறப் போகின்ற  பையாரிட்ஸ் நகரில் 9000-க்கும் அதிகமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக